வியாழன், 3 மார்ச், 2016

கோயில்களில் நம் செய்யும் பரிகாரமும், முன்னோர்கள் கூறியதும்

கோயில்களில் நம் செய்யும் பரிகாரமும், முன்னோர்கள் கூறியதும்.
கோயில்களில் நம் முன்னோர்கள் கூறிய பரிகார முறைகள் அடிப்பிரதட்சனம், அங்கப்பிரதட்சனம், வெற்றிலை மாலை, ஸ்ரீ ராம ஜெய மாலை, விளக்குகள் ஏற்றுவதால் போன்ற பல பரிகார முறைகளின் காரணம் ஏன் என்று தெரியாமல் நம் செய்கின்றோம்.
அதன் காரணம் ஒவ்வொரு கோயிலுக்கும் தனித்தனி சக்திகள் ( different COSMIC ENERGY) உள்ளன. அதனால் தான் ஒரே தெய்வத்திற்கு பல பெயர்களில் பல கோயில்கள் உள்ளது. அந்த கதிர்வீச்சுகளை (சக்திகளை) மனிதர்கள் பெறவே இம்மாதிரியான பரிகாரங்கள் செய்யவேண்டும் என்றனர்.
நம் உடலுக்கு தேவையான சக்திகளை பெறவேண்டும் என்பதற்காகவே (வெகு நேரம்) கூறினார்கள். ஆலயத்திற்கு சென்றால் சற்று நேரமாவது அமர்ந்து விட்டு வரவேண்டும், மற்றும் திருமணம், குழந்தை பிறப்பு போன்ற நேரத்தில் ஒரு இரவு தங்கி வரவேண்டும் என்றார்கள்.
அனால் நாம் இப்போது செய்து என்ன சிறப்பு தரிசனம், VIP தரிசனத்தில் வெளியே கடையில் விற்கும் பூ மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, அகல் விளக்குகள், போன்றவற்றை வாங்கி கெடுத்துவிட்டு வந்துவிடுகிறேம் இதில் என்ன கிடைக்கும்,
இந்த கலியுகத்தில் நாம் தெரிந்து செய்யும் பாவம் அதிகம் அதைவிட தெரியாமல் செய்யும் பாவம் மிக அதிகம். (அசைவம், பொய், மது, மாது சூது போன்ற பல)
இப்படி இருக்க கற்று போல் கோயிலுக்கு சென்று வந்து என் கஷ்டங்கள் பிரச்சனைகள் தீரவில்லை என்பார்கள்.
முன்னோர்கள் கூறியபடி வழிபடுவதே இல்லை,
அப்படி வழிபட்டால் கஷ்டங்களை தீர்த்துக்கொள்ள முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக