வியாழன், 3 மார்ச், 2016

வெற்றிலை மாலை

வெற்றிலை மாலை.
சீதாதேவி அசோகவனத்தினில் சிறைபட்டிருந்த சமயம் ஸ்ரீ ஆஞ்சநேயர் அங்கு சென்று சீதையை வணங்கி, தான் ராமதூதன் என்பதை நிரூபித்து சூடாமனியினைப் பெற்றுக் கொண்டு ராமனிடம் திரும்ப எண்ணி சீதா தேவியிடம் ஆசிர்வாதங்களை வேண்டி நின்றான்.
அச்சமயம் சீதை தன் அருகில் இருந்த வெற்றிலைக் கொடியிருந்து, வெற்றிலைகளைக் கிள்ளி ஆசீர்வாதங்களை அருளினாள். ஆதலால் ஹனுமாருக்கு வெற்றிலை மாலை அணிவித்தால் ஸ்ரீமகாலஷ்மியின் ஸ்வரூபமான சீதையின் ஆசிர்வாதங்களால் நாம் பிராத்திப்பவைகள் எல்லாம் லஷ்மிகரமாக நிறைவேறும் என்பது திண்ணம்.
ஆனால் அதை நாம் செய்யும் முறையை தெரிந்துகொள்ள வேண்டும்.
கடைகளில் விற்கும் மாலைகளை வாங்கி இறைவனுக்கு சாற்றுவதில் எந்த பயனும் இல்லை.
நம் முன்னோர்கள் கூறிய காரணம் வேறு, நம் வெற்றிலைகளை வாங்கி கோயிலில் உள்ளே சென்று அமர்ந்து ஏதேனும் மந்திரம் சொல்லிக்கொண்டே வெற்றிலையை நம் கையாலேயே கட்டி சற்றும் போது கிடைக்கும் பலன் சொல்லில் அடங்காத, இங்கே நம் கோயிலில் இருக்கும் நேரம் அதிகமாகும், அங்கு இருக்ககூடிய சக்திகளை நம்மால் முழுமையாக பெறமுடியும். இதே காரணத்தினால் தான் ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவது, அங்க பிரதட்சணம், அடிப்பிரதட்சனம் ஆகியவைகள் செய்யா நம் முன்னோர்கள் கூறினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக