புதன், 9 மார்ச், 2016

சகல தோஷங்களை போக்கும் பிரம்மன் ஸ்தலம்

சகல தோஷங்களை போக்கும் பிரம்மன் ஸ்தலம்.

பிரம்மபுரீஸ்வரர் கோயில்.

ஜாதகத்தில் உள்ள சகல விதமான தோஷங்களும்  திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் சமேத சுகந்த குந்தளாம்பிகை ஸ்தலத்தில் உள்ள பிரம்மன் நீங்குவர்

தல சிறப்பு
இங்கு மூலவர் பிரம்மபுரீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார்.

பிரம்மன் வழிபட்டது
திருமால், பிரம்மன் ஆகிய இருவருமே, தாமே பிரமம் என தம்முள் மாறுபட்டபோது இருவரிடையே அழல் உருவாய் ஓங்கி நின்றான் இறைவன். இல்வனற்பிழம்பின் அடியையோ, முடியையோ காண்பவரே உலகின் முழுமுதல்வர் என்று கூறிய இறைவனது உரையின்படி திருமால் பன்றி உருவம் கொண்டு அடியைக்காண புறப்பட்டுதேடி, தன் இயலாமையை இறைவனிடம் தெரிவித்து நின்றார், பிரம்மன் அன்னமாய் பறந்து சென்று முடியைக் காணாமலே கண்டதாகப் பொய்யுரை கூறி நின்றார், பெருமன் பிரம்மனை அன்னமாகும்படி சபித்தார் பிரம்மன் பிழை பொறுக்க இறைவனை வேண்டினான். பெருமான் புன்னாகவனம் என்ற இத்தலத்தை அடைந்து தவம் செய்யுமாறு கூறினார். பிரமனும் அவ்வாறே இத்தலத்தை அடைந்து பொய்கை ஒன்றை உருவாக்கி அதன் நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து பல ஆண்டுகள் வழிபட்டு அன்ன உருவம் நீங்கி, பழைய உருவம் பெற்று, படைப்புத் தொழிலை மேற்கொண்டர், பிரம்மனுக்கு இறைவன் காட்சி வழங்கிய ஐதீக விழா ஆண்டுதோறும் மாசி மகத்தன்று நடக்கிறது.

இங்கு அவரவர் தங்கள் ஜாதகத்தை பிரம்மன் சன்னதியில் பிறந்த நட்சத்திரத்தன்று வைத்து வணங்க சகல விதமான தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

செவ்வாய், 8 மார்ச், 2016

கணவன் மனைவி ஒற்றுமை ஓங்க

கணவன் மனைவி ஒற்றுமை ஓங்க.

உச்சிஷ்ட   கணபதியை வழிபட கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.
கணவன் மனைவி இடையே சண்டை, சச்சரவு, கருத்துவேறுபாடு போன்ற விஷயங்கள் இருப்பின் உச்சிஷ்ட   கணபதியை வழிபட்டால் நிச்சயம் ஒற்றுமை ஓங்கும், வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை தம்பதி சமேதராக சென்று வழிபட்டு வரவும்.
கணவன் மனைவி பிரிந்து ( தற்காலிகமாக) இருப்பின் யாரேனும் ஒருவர் (கணவன் அல்லது மனைவி) சென்று 6 வாரம் அல்லது 9 வாரம் தொடர்ந்து வழிபட்டால் நிம்மதி நிலைக்கும்.

சென்னையில் உள்ள உச்சிஷ்ட   கணபதி ஸ்தலம்
1. சோழிங்கநல்லூரில் உள்ள மஹா ப்ரத்யங்கிரா கோயில்
2. திருவேற்காட்டில் உள்ள தேவி   கருமரியம்மன் கோயில்
3. புரசைவாக்கத்தில் உள்ள கங்காதரேச்வரர் கோயில்.

திங்கள், 7 மார்ச், 2016

விருச்சிகத்தில் செவ்வாய் மற்றும் சனி

விருச்சிகத்தில் செவ்வாய் மற்றும் சனி.

இந்த பதிவு யாரையும் பயமுறுத்துகிறா பதிவு என்று எண்ண வேண்டாம் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கே பதிவு செய்கிறேன்.

யார் ஒருவரின் ஜென்ம ஜாதகத்தில் விருச்சிகத்தில் ராகு, செவ்வாய், சனி இவர்களில் யார் ஒருவர் இருந்தாலும், மற்றும் அதற்கு திரிகோணத்தில் இவர்கள் தனித்து இருந்தாலும் அல்லது சேர்ந்து இருந்தாலும், அவர்கள் வாகனங்களில் செல்லும்போது சற்று கவனமாக ஒட்டிக்கொண்டு செல்லவேண்டியது அவசியம்.
அதாவது பிப்ரவரி 21 தேதியில் செவ்வாய் பாகவன் விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகி இருக்கிறார், அதில் அங்கு ஏற்கனவே சனி பாகவன் இருக்கிறார். அங்கு இருவரும் செப்டம்பர் 17ம் தேதி வரை இருப்பார்கள்.

இதில் அங்கே அல்லது அதற்கு திரிகோண ராசியில் ( அதாவது விருச்சிகம் அல்லது மீனம் அல்லது கடகம்) இவர்களில் ( செவ்வாய் அல்லது சனி அல்லது ராகு) ஒருவர் தனிந்து இருக்க பிறந்தவர் வாகனம் ஒட்டும் போது சற்று கவனத்துடன் செல்லவேண்டும்.( below 45km/hr)

இந்த ராசியில் இந்த மூவரில் யாரேனும் இருவர் ( சனி + ராகு / செவ்வாய் + ராகு / செவ்வாய் + சனி) இருக்க பிறந்தவர்கள் மிக கவனத்துடன் செல்லவேண்டும், (below 35km/hr).
இதில்  மூவரும் சேர்ந்து இருந்தால் மிகமிக கவனமாக இருக்கவேண்டும்.

இதில் ஏதாவது ஒரு அமைப்பு இருந்தால் அவர்கள் ராகு காலத்தில் வாகனம் ஒட்டாமல் இருந்தால் உத்தமம்.

இதற்கு ரத்ததானம் மட்டுமே சிறந்த பரிகாரம் ஆகும், முடிந்தால் ரத்ததானம் செய்யுங்கள்.

முடிந்தவரை வாகனங்களில் செல்லும் போது HELMET, SEAT BELT, போன்ற பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்துங்கள்.

கும்பாபிஷேகம் என்பது என்ன

கும்பாபிஷேகம் என்பது என்ன

கோவில் கும்பாபிஷேகம் நிறைய பார்த்திருப்பீர்கள், கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் கும்பாபிஷேகம் என்பது என்ன அதில் என்ன என்ன பூஜை செய்கிறார்கள் பலருக்கும் தெரியாது, ஆதலால் அதை பற்றிய ஒரு சிறு விளக்கம் இங்கே தந்திருக்கிறேன்...

கும்பாபிஷேகத்தின் வகைகள்.
1. ஆவர்த்தம் – ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகளுக்குக் கும்பாபிஷேகம் செய்யப்படுவது.
2. அனாவர்த்தம் – பூஜை இல்லாமலும் ஆறு, கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்தாலும் அக்கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது.
3. புனராவர்த்தம் – கருவறை, பிரகாரம், கோபுரம் முதலியன பழுது பட்டிருந்தால் பாலாலயம் செய்து அவற்றை புதுப்பித்து அஷ்டபந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது.
4. அந்தரிதம் – கோயிலுள் ஏதேனும் தகாதன நேர்ந்து விடின் அதன் பொருட்டு செய்யப்படும் சந்தி.
கும்பாபிஷேகத்தில் விக்ரகப் பிரதிஷ்டையில் மேற்க்கொள்ளப்படும் அவசியமான கிரியைகள் பற்றிய விளக்கம்.
1. அனுஞை – {அனுமதி வாங்குதல்} செயல்களைச் செய்யும் ஆற்றல் மிக்க ஓர் ஆசாரியனைத் தேர்ந்து எடுத்து இச்செயலைச் செய்வதற்கு இறைவன் அனுமதி பெற்று நியமனம் செய்தல்.
2. சங்கல்பம் – இறைவனிடத்தில் நமது தேவைகளை கோரிக்கையாக வைத்தல்.
3. பாத்திர பூஜை – இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்குண்டான பூஜா பாத்திரங்களை சுத்தம் செய்யும் பொருட்டு அந்தந்த பாத்திரங்குலுக்குறிய தேவதைகளை பூஜை செய்தல்.
4. கணபதி பூஜை – செயல் இனிது நிறைவேற கணபதியை வழிபடுதல்.
5. வருண பூஜை – அவ்விடத்தை சுத்தம் செய்யும் பொருட்டு வருண பகவானையும் சப்த நதி தேவதைகளையும் வழிபடுதல்.
6. பஞ்ச கவ்யம் – ஆத்ம சுத்தி செய்யும் பொருட்டு பசு மூலமாக கிடைக்கும் பால்,தயிர்,நெய்,பசுநீர்,பசுசானம் முதலியவைகளை வைத்து செய்யப்படும் கிரியை.
வாஸ்து சாந்தி – தேவர்களை வழிபட்டுக் கும்பாபிஷேகம் எவ்வித இடையூறுமின்றி இனிது நிறைவேற; செயலுக்கும் செய்பவர்க்கும் இடையூறு வராதபடி காக்கச் செய்யும் செயல்.
7. பிரவேச பலி – எட்டு திக்கிலும் உள்ள திக் பாலகர்களுக்கு உரிய பிரீதி செய்து அவர்களை அந்தந்த இடத்தில் இருக்க செயிதல் {துர் தேவதைகளை வர விடாமல் காக்கும் பொருட்டு}
8. மிருத்சங்கிரஹணம் – {மண் எடுத்தல்} அஷ்ட திக் பாலகர்களிடம் அனுமதி பெற்று சுத்தமான இடத்தில்ருந்து மண் எடுத்து அப்பள்ளத்தில் அபிஷேகம் செய்தல்.{ ஆலயம் நிர்மாணம் செய்ய பூமி தாயான பூமா தேவியை கஷ்ட படுத்தினதன் காரணமாக பூமா தேவியை மகிழ்விக்க செய்யப்படும் கிரியை}
9. அங்குரார்ப்பணம் – {முளையிடுதல்} எடுத்த மண்ணை பாலிகைகளில் விதைகளையிட்டு முளை வளர செய்தல். இதில் 12 சூர்யர்கலான வைகர்த்தன்,விவஸ்வதன்,மார்த்தாண்டன்,பாஸ்கரன்,ரவி,லோகபிரகாசன்,லோகசாட்சி,திரிவிக்ரமன்,ஆதித்யன்,சூரியன்,அம்சுமாலி,திவாகரன் போன்ற இவர்களையும் சந்திரனையும் வழிபடுதல்.
10. ரக்ஷாபந்தனம் – {காப்புக்கட்டுதல்} கிரியைகளைச் செய்யும் ஆசாரியனுக்கும் செய்யும் கர்த்தாவுக்கும் எவ்வித இடையூறுகள் வராதபடிக் காத்தற் பொருட்டு. அவன் கையில் மந்திர பூர்வமாகக் காப்பு {கயிறு} கட்டுதல்.
11. கும்பலங்காரம் – கும்பங்களை {கலசம்} இறைவன் உடம்பாக பாவித்து அலங்காரம் செய்தல்.
12. கலா கர்ஷ்ணம் – {சக்தி அழைத்தல்} விக்ரஹத்தில் இருக்கும் சக்தியை கும்பத்திற்க்கு மந்திர பூர்வமாக அழைத்தல்.
13. யாகசாலா பிரவேசம் – கலசங்களை யாகசாலைக்கு அழைத்து வருதல்.
14. சூர்ய,சோம பூஜை – யாகசாலையில் சூர்ய சந்திரனை வழிபடுதல்.
15. மண்டப பூஜை – அமைக்க பட்டிருக்கும் யாகசாலையை பூஜை செய்தல்.
16. பிம்ப சுத்தி – விக்ரகங்களை மந்திர பூர்வமாக சுத்தம் செய்தல்.
17. நாடி சந்தானம் – யாகசாலை இட்த்திற்கும் மூல திருமேனிக்கும் தர்பைக் கயிறு, தங்க கம்பி, வெள்ளிக் கம்பி, அல்லது பட்டுக் கயிறு இவற்றால் இணைப்பு ஏற்படுத்துதல். { இறைவனின் சக்தியில் ஒரு பகுதியை இந்த இனைப்பு மூலமாக விக்ரஹங்களுக்கு கொண்டு சேர்த்தல்}
18. விசேஷ சந்தி - 36 தத்துவ தேவதைகளுக்கும் அர்க்யம் தருவது, உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ருக்களுக்கு அர்க்யம் தருவது.
19, பூத சுத்தி – இந்த பூத {மனித} உடம்பை தெய்வ உடம்பாக மந்திர பூர்வமாக மாற்றி அமைத்தல்.
20, ஸ்பர்ஷாஹுதி – 36 தத்துவங்களை யாகத்திலிருந்து மூல விக்ரகங்களுக்கு கொண்டு சேர்த்தல்.
21, அஷ்ட பந்தனம் – எட்டு பொருள்களால் ஆன இம்மருந்தினால் மூர்த்தியையும், பீட்த்தையும் ஒன்று சேர்த்தல். இதை மருந்து சாத்துதல் என்பர்.
22, பூர்ணாஹுதி – யாகத்தை பூர்த்தி செய்தல்.
23, கும்பாபிஷேகம் – {குடமுழுக்கு} யாக சாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்துப் பூஜிக்கப்பட்ட குடத்து நீரை அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தல். இதனால் அந்த மூர்த்தி அந்த விக்ரகத்தில் எழுந்தருள்கிறார்.
24, மஹாபிஷேகம் – கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மூல விக்ரஹத்திற்கு முறைப்படி அபிஷேகம் அலங்காரம் செய்தல்.
25, மண்டலாபிஷேகம் – பிறந்த குழந்தையாக விக்ரஹத்தில் வீற்றிருக்கும் இறைவனை 48 நாட்கள் விஷேச அபிஷேக பூஜைகள் செய்து முழு சக்தியுடன் இருக்கச் செய்வது.

மற்றும் சில.
ஏக குண்டம் – ஒரு குண்டம அமைத்தல்.
பஞ்சாக்னி – ஐந்து குண்டம் அமைத்தல்.
நவாக்னி – ஒன்பது குண்டம் அமைத்தல்.
உத்தம பக்ஷம் – 33 குண்டம் அமைத்தல்.
கும்பாபிஷேகத்திற்கு செய்யப்படும் யாகங்களை எத்தன தடவை செய்ய வேண்டும் என்று விதிமுறை உள்ளது. அது 2.காலம், 4.காலம், 8.காலம், 12.காலம் வரை செய்யும் முறை வழக்கத்தில் உள்ளது.
கும்பத்தை நம் சரீரமாக சொல்லப்படும் காரணம்.
யோகஜம் என்ற சிவாகமம் சரீரமாக கும்பத்தை எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பதற்கு விபரமாகச் சொல்லுவதாவது.
கும்பமாகிய குடம் மாமிசமாகும், குடத்திலுள்ள தண்ணீர் இரத்தமாகும், கும்பத்தினுல் போடப்படும் ரத்தின்ங்கள் சுக்ளமாகும், கும்பத்தின் உள்ளே தர்பையினால் செய்யப்பட்ட கூர்ச்சம் நாடியாகும், குடத்தின் மேலே நெருக்கமகச் சுற்றப் பட்டுள்ள முப்புரி நூல்களே நரம்புகளாகும், கும்பத்தை சுற்றி போர்த்திக் கட்டியுள்ள வஸ்த்திரமே தோல் ஆகும், குடத்தின் மேல் இருக்கும் தேங்காய் சிரசாகவும், முகமாகவும் கூறப்படுகிறது, தேங்காயின் மேலே விரித்துள்ள தர்பையினால் செய்யப்பட்ட லம்ப கூர்ச்சம் சிகை {குடுமி} ஆகவும், தேங்காய்க்கு அடியில் போடப்படும் மாவிலைகள் ஸ்வாமியின் ஜடாபாரங்கள், உச்சரிக்கப்படும் மந்திரங்களே பிராணனாகும் என்று அங்க கற்பனை சிவாகமத்தில் கூறப்படுகின்றது.

ஞாயிறு, 6 மார்ச், 2016

அர்ச்சனை

அர்ச்சனை

கோவிலில் அர்ச்சனை செய்யும்போது ஒரு அர்ச்சனையில் ஒரு நபா் பேரில் செய்வதே உத்தமம், அதேபோல் ராசி, நட்சத்திரம், செல்வது போல் லக்னத்தையும் சேர்த்து சொல்லவும். ஏன் என்றால் ராசி = உடல், லக்னம் = உயிர் (ஆண்மா) உடல் அழியாகூடியது ஆண்மா அழியாதது. எனவே அர்ச்சனை செய்யும்போது லக்னத்தையும் சேர்த்தே சொல்லுங்கள்.

பிரச்சனைகள் தீர சித்தர்கள் வழிபாடு.

பிரச்சனைகள் தீர சித்தர்கள் வழிபாடு.
எந்தந்த சித்தர்களை எந்த லக்னகாரர்கள் வழிபட்டால் கஷ்டங்கள், பிரச்சனைகள் நீங்கி மேன்மை அடையாளம் என்பதை கீழே குறிப்பிட்டு உள்ளேன். பொதுவாக பலர் ராசியை வைத்துதான் பரிகாரங்கள் சொல்வார்கள், ஆனால் இங்கு லக்னத்தை வைத்து சொல்லியிருக்கிறேன் என்றால் ராசி என்பது 2.25 நாட்களுக்கு வரும், அதில் பொதுவாகவே சொல்ல முடியும், ஆனால் லக்னம் என்பது 2 மணிக்கு ஒரு தரம் மாறுவது, எனவேதான் லக்னத்தை வைத்து கூறிஉள்ளேன.
மேஷ லக்னகாரர்கள் - 
புதன்கிழமையில் வள்ளலார், இடைகாடர் சித்தர்கள்.
செவ்வாய்க்கிழமையில் மகா போகர், புலிப்பாணி சித்தர்கள்.
வியாழக்கிழமையில் காக புஜண்டர், அகப்பேய் சித்தர்கள்.
ரிஷப லக்னகாரர்கள் -
வெள்ளிக்கிழமையில் கஞ்சமலை, சென்னிமலை சித்தர்கள்.
வியாழக்கிழமையில் காக புஜண்டர், அகப்பேய் சித்தர்கள்.
செவ்வாய்க்கிழமையில் மகா போகர், புலிப்பாணி சித்தர்கள்.
மிதுன லக்னகாரர்கள் -
செவ்வாய்க்கிழமையில் மகா போகர், புலிப்பாணி சித்தர்கள்.
சனிக்கிழமையில் கபிலர், கருவுரார் சித்தர்கள்.
வெள்ளிக்கிழமையில் கஞ்சமலை, சென்னிமலை சித்தர்கள்.
கடக லக்னகாரர்கள் -
வியாழக்கிழமையில் காக புஜண்டர், அகப்பேய் சித்தர்கள்.
சனிக்கிழமையில் கபிலர், கருவுரார் சித்தர்கள்.
புதன்கிழமையில் வள்ளலார், இடைகாடர் சித்தர்கள்.
சிம்ம லக்னகாரர்கள் -
சனிக்கிழமையில் கபிலர், கருவுரார் சித்தர்கள்.
வியாழக்கிழமையில் காக புஜண்டர், அகப்பேய் சித்தர்கள்.
திங்கட்கிழமையில் - சிவவாக்கியர், கயிலாய கம்பளி சட்டைமுனி (ரோமரிஷி) சித்தர்கள்.
கன்னி லக்னகாரர்கள் -
சனிக்கிழமையில் கபிலர், கருவுரார் சித்தர்கள்.
செவ்வாய்க்கிழமையில் மகா போகர், புலிப்பாணி சித்தர்கள்.
ஞாயிற்றுக்கிழமையில் -
பட்டிணத்தடிகளார், கடுவெளி சித்தர்கள்.
துலா லக்னகாரர்கள் -
வியாழக்கிழமையில் காக புஜண்டர், அகப்பேய் சித்தர்கள்.
வெள்ளிக்கிழமையில் கஞ்சமலை, சென்னிமலை சித்தர்கள்.
புதன்கிழமையில் வள்ளலார், இடைகாடர் சித்தர்கள்.
விருச்சிக லக்னகாரர்கள் -
செவ்வாய்க்கிழமையில் மகா போகர், புலிப்பாணி சித்தர்கள்.
புதன்கிழமையில் வள்ளலார், இடைகாடர் சித்தர்கள்.
வெள்ளிக்கிழமையில் கஞ்சமலை, சென்னிமலை சித்தர்கள்.
தனுசு லக்னகாரர்கள் -
வெள்ளிக்கிழமையில் கஞ்சமலை, சென்னிமலை சித்தர்கள்.
திங்கட்கிழமையில் - சிவவாக்கியர், கயிலாய கம்பளி சட்டைமுனி (ரோமரிஷி) சித்தர்கள்.
செவ்வாய்க்கிழமையில் மகா போகர், புலிப்பாணி சித்தர்கள்.
மகர லக்னகாரர்கள் -
புதன்கிழமையில் வள்ளலார், இடைகாடர் சித்தர்கள்.
ஞாயிற்றுக்கிழமையில் -
பட்டிணத்தடிகளார், கடுவெளி சித்தர்கள்.
வியாழக்கிழமையில் காக புஜண்டர், அகப்பேய் சித்தர்கள்.
கும்ப லக்னகாரர்கள் -
திங்கட்கிழமையில் - சிவவாக்கியர், கயிலாய கம்பளி சட்டைமுனி (ரோமரிஷி) சித்தர்கள்.
புதன்கிழமையில் வள்ளலார், இடைகாடர் சித்தர்கள்.
சனிக்கிழமையில் கபிலர், கருவுரார் சித்தர்கள்.
மீன லக்னகாரர்கள் -
ஞாயிற்றுக்கிழமையில் -
பட்டிணத்தடிகளார், கடுவெளி சித்தர்கள்.
வெள்ளிக்கிழமையில் கஞ்சமலை, சென்னிமலை சித்தர்கள்.
சனிக்கிழமையில் கபிலர், கருவுரார் சித்தர்கள்.
அந்தந்த சித்தர்களை அந்தந்த கிழமைகளில் ஆலயத்திற்கு சென்றே அல்லது வீட்டில் அவர்களது படத்தை வைத்து வழிபட்டால் நிச்சயம் எண்ணிலடங்கா சுப பலன்கள் கிடைக்கும்.

அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடலாமா ?

அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடலாமா ?
கோலம் என்பது ஒரு சக்கரம்( graphical diagram) இது நம் வீட்டிற்க்கு நோ் மறை சக்தியை (positive energy) மற்றுமே உள்ளே அனுப்பும், ஏதிர்மறை சக்தியை (negative energy) தடுக்கும் உள்ளே நுழைய விடாது. அதனால் தான் கோலம் இடுவது வழக்கம், முன் காலத்தில் சாணம் தெளித்து கோலம் போட்டனா் நச்சு பொருள்களும் வாரமல் தடுக்கம்.
அமாவாசை என்பது நாம் நம் பித்துருக்களுக்காக (முன்னோர்கள்) செய்வது நாம் அவா்களை தெய்வமாக பவித்தலும் அவர்கள் ஏதிர்மறை சக்தியே அவர், வாசலில் உள்ள கோலம் தடுத்து நிறுத்தும், உள்ளே தலைவாழஇலை விாித்து உணவு படைத்து கதவை தாள்இட்டு முடியது போல்தான். அவர்களால் வந்து உண்ண முடியாது.
எனவேதான் அமாவாசையன்று கோலம் போட கூடாது

சனி, 5 மார்ச், 2016

புராணம்

புராணம்
புராணங்கள் என்பவை வேதங்களில் உள்ள கருத்துகளை தெளிவாக கூறுவதாகும். புராணம் என்ற சொல்லிற்கு பழமை வாய்ந்தது என்று பொருள். நெடுங்காலமாக செவிவழியாகவே கற்பிக்கப்பட்டு வந்த புராணங்கள் வேதவியாசர் என்பவரால் நூல்களாக தொகுப்பட்டுள்ளன. இவற்றில் வேதவியாசரே தொகுத்த பதினெட்டு புராணங்கள் மகாபுராணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவையல்லாத உபபுராணங்கள் பதினெட்டும் புராணங்களாகக் கொள்ளப்படுகின்றன.
இப்புராணங்களில் வேதத்தில் கூறப்பட்டுள்ளவைகளின் சாரங்கள் கதைகளின் வடிவில் ஸ்லோகங்களாக இயற்றப்பட்டுள்ளன. அவை பேரண்டங்களின் தோற்றம், அவற்றின் பிரளயம், மும்மூர்த்திகள் தோற்றம் மற்றும் அவர்களின் அவதாரங்கள், தேவர் -அரக்கர்களின் போர்கள் போன்றவைகள் பலவற்றினையும் விவரிக்கின்றன.
சொல்லிலக்கணம்
புராணம் என்கிற சமஸ்கிருத சொல்லானது புரா-நவ என்ற இருவேர்களில் இருந்து பிறந்தது. இதன் பொருள் பழமைக்குப் பழமையாய்ப் புதுமைக்குப் புதுமையாய் உள்ளது என்பர். புராதனம் என்ற சொல் புராணம் என்று வந்ததெனவும் கூறுவர். புராணத்திற்கு இணையாக ஆங்கிலத்தில் Myth என்ற சொல் வழங்கப்படுகிறது. 'Mythos' என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து இச்சொல் பிறந்துள்ளது.
தமிழ் மொழியில்
புராணம் என்ற சொல் தமிழ் இலக்கியத்தில் மணிமேகலையில் முதன்முதலில் வருகிறது. சமயக் கணக்கர்தம் திறம் கேட்ட காதையில் வைணவவாதியைக் குறிப்பிடும் போது, காதல் கொண்டு கடல்வணன் புராணம் ஓதினான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், புராணம் என்ற சொல், தமிழ் மொழியில் மணிமேகலை தோன்றிய காலத்திலேயே வழங்கப் பெற்றுள்ளது என அறிய முடிகிறது. "புராணவித், புராணி போன்ற சொற்கள் ரிக் வேதத்திலும் அதர்வன வேதத்திலும் காணப்படுகின்றன. எனினும் இச் சொற்கள் புராணத்தைக் குறிக்கவில்லை. பழமையானவன், பழமையைப் பரப்புகிறவன் என்ற பொருளிலேயே இச்சொற்கள் வழங்கியிருக்கின்றன. திருவாசகத்திலே மாணிக்கவாசகர் முதலில் பாடியது சிவபுராணம். அங்கே புராணம் என்பதில் இறைவனுடைய பழமையைச் சொல்கிறார்கள். ஆகவே புராணம் என்ற சொல்லுக்குப் பழமை என்பது பொருள். சேக்கிழாரின் பெரியபுராணம் புகழ்பெற்றது.
புராண ஆசிரியர்
மகாபுராணங்கள் கடவுள்களாலும், தேவர்களாலும், முனிவர்களாலும் முதன் முதலாக கூறப்பட்டுள்ளன. அவைகள் மற்றவர்களுக்கு கூறப்பட்டு இறுதியாக வேதவியாசரை அடைந்து எழுத்துவடிவம் பெற்றுள்ளன.
சிவ புராணம் - பிரம்மாவால் நாரதருக்குக் கூறப்பட்டது.
கூர்ம புராணம் - புலஸ்தியரால் நாரதருக்கு கூறப்பட்டது.
கருட புராணம் - கருடன் காசியபருக்குக் கூறினார்.
மார்க்கண்டேய புராணம் - மார்க்கண்டேயர் வியாசர் சீடர்களில் ஒருவரான ஜைமினி முனிவருக்கு கூறியது.
அக்கினி புராணம் - அக்கினி தானே வசிஷ்டருக்குக் கூற அவர் வியாசருக்கு கூறினார்.
வராக புராணம் - வராகரே கூறினார்.
கந்த புராணம் - கந்தனே கூறி அருளினார்.
வாயு புராணம் - வாயுவாலேயே கூறப்பட்டதாகும்.
விஷ்ணு புராணம் - மத்ஸ்யாவதார விஷ்ணு, மனுவுக்குக் கூறினார்.
புராணங்களின் தொடக்கத்தில் இந்த புராணங்கள் எவருக்காக மறுபடியும் கூறப்பட்டன, யாரால் கூறப்பட்டன என்பதையும் கூறப்பட்டுள்ளன.
அவற்றின் பட்டியல்
புராணத்தின் பெயர் -- உபதேசித்தவர் -- உபதேசம் பெற்றவர்
பிரம்ம புராணம் -- சூதமுனிவர் -- சௌகனாதி முனிவர்கள்
(பத்ம புராணம்)
விஷ்ணு புராணம் -- பராசர முனிவர் -- மைத்ரேய முனிவர்
சிவ புராணம் -- சூதமாமுனிவர் -- நைமிசாரண்ணிய முனிவர்கள்
(வாயு புராணம்)
லிங்க புராணம் -- சூதமாமுனிவர் -- நைமிசாரண்ணிய முனிவர்கள்
கருட புராணம்
நாரத புராணம்
பாகவத புராணம்
அக்னி புராணம்
கந்த புராணம்
பவிசிய புராணம்
பிரம்ம வைவர்த்த புராணம்
மார்க்கண்டேய புராணம்
வாமன புராணம்
வராக புராணம்
மச்ச புராணம்
கூர்ம புராணம்
பிரம்மாண்ட புராணம்
புராணங்களை எடுத்துரைத்த இடம்
வேதவியாசரின் மகன் சுகரிடமிருந்து கற்ற புராணங்கள் மற்றும் இதிகாசங்களை வைசம்பாயனர், அத்தினாபுரத்து மன்னன் பரிட்சித்திற்கு எடுத்துக் கூறும் போது அங்கிருந்த சூத முனிவரும் அவைகளை நன்கு கேட்டார்.
அப்புராண இதிகாசங்களை, கோமதி ஆற்றாங்கரையில் அமைந்திருந்த நைமிசாரண்யம் எனப்படும் இடத்தில் உள்ள குலபதி சௌகனர் முதலான முனிவர்களுக்கு எடுத்துரைத்தார் என மகாபாரத்தில் குறிப்படப்பட்டுள்ளது. இந்த நைமிசாரண்யம் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் (பத்துப் பாசுரங்கள்) செய்யப்பட்ட நூற்றியெட்டு(108) வைணவத் தலங்களில் ஒன்றாக உள்ளது.
புராணங்கள் தோன்றிய காலம்
புராணங்கள் எழுதப் பெற்ற காலத்தைக் கணக்கிட்டுக் கூறுவதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனவே புராணங்கள் கூறப்பட்ட காலத்தைக் துல்லியமாகக் கணித்துக் கூறுவது இன்றளவும் இயலாததாகவே உள்ளது.
இந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றிய நான்கு வேதங்களும் பதினெட்டுப் புராணங்களும் மிகவும் பழமையானவை. உலக அளவில் மிகவும் பழமையான நூல்களாக இவை கருதப் படுகின்றன.
தொல்காப்பியத்தை எழுதிய புலவரும், திருக்குறளை இயற்றிய புலவரும் தங்களது பெயர், ஊர், வாழ்ந்த காலம், நூலை இயற்றிய ஆண்டு, ஆட்சி செய்த மன்னர் இவை எதையுமே குறிப்பிடவில்லை.
இவர்களைப் போன்றே, புராணத்தை எழுதிய முனிகளும் தங்களது பெயர், வாழ்ந்த காலம், ஆட்சி செய்த மன்னன் இவைபற்றி எதையும் புராணங்களில் குறிப்பிடவில்லை. வேதவியாசர் வாழ்ந்த காலத்தைக் கருத்திற் கொண்டு, புராணங்களின் காலம் கி.மு.6 அல்லது கி.மு. 7-ஆம் நூற்றாண்டு என்று சமய நூல் விற்பன்னர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்து சமயத்தின் பொற்காலம்
கி. பி., 300-600 காலகட்டங்களில் வடநாட்டை ஆண்ட குப்தர்கள் வடமொழியை நன்கு போற்றி வளர்த்துள்ளனர். இந்து சமயமும் வடமொழி இலக்கியமும் புராணங்களும் நன்கு வளர்ச்சி பெற்றன. இவர்கள் காலத்தில் வடமொழியிலுள்ள தொன்மையான புராணங்கள் ஒழுங்குபடுத்தித் தொகுக்கப் பெற்றன என்பர். அதனால் குப்தர்கள் காலத்தை இந்து சமயத்தின் பொற்காலம் என்று அழைக்கின்றனர். எனவே வடமொழியில் புராணங்கள் தோன்றிய காலம் கி.பி.300 க்கும் முற்பட்டதாகக் கருத இயலும்.
கலியுகம் தோன்றிய பின்னரே நளன் ஆட்சி செய்தான்
திருப்பூவணப் புராணத்தில், சுச்சோதி தீர்த்த யாத்திரைச் சருக்கம், சுச்சோதி பிதிர்களை முத்தியடைவித்த சருக்கம், மற்றும் நளன் கலிமோசனச் சருக்கம் ஆகிய சருக்கங்கள் பாடப்பெற்றுள்ளன. இதனால், திருப்பூவணப் புராணம் அடங்கிய பிரமகைவர்த்த புராணம் எழுதப்பட்ட காலம், சுச்சோதி மற்றும் நளன் காலத்திற்குப் பிற்பட்ட காலம் என்பது உறுதி.
திருப்பூவணப் புராணத்தில் நளன்கலிமோசனச் சருக்கத்திலே,
"மேவுமந்தமிகுந்திரையாயுக
மோவில்பல்புகழோங்குநளன்றனக்
கியாவுநல்கியிருங் கலி தீர்த்தருள்
பூவணேசன்பொற்கோயில்புகுந்தனன்" (பாடல் 1325)
என்று கூறப்பட்டுள்ளது. எனவே கலியுகம் தோன்றிய பின்னரே நளன் ஆட்சி செய்தான் என்பதும், அவனது ஆட்சிக்காலத்திற்குப் பிறகே பிரமகைவர்த்த புராணக்கதைகள் கூறப்பட்டுள்ளன என்பதும் உறுதி. கலியுகம் தோன்றி 5108 ஆண்டுகள் ஆகின்றன. எனவே பிரமகைவர்த்த புராணம் எழுதப் பெற்ற காலம் (கலி5108 - கி.மு.2008 - 3100) கி.மு.3100க்குப் பிற்பட்டகாலம் எனத் திருப்பூவணப் புராணத்தின் வழியாக அறியமுடிகிறது.
இந்நூல் பல்வேறு வகைகளில் கம்ப இராமாயணத்துடன் ஒப்பு நோக்கிப் பார்க்கப்படுகிறது.
புராண வகைகள்
முதன்மைக்கடவுள்களின் அடிப்படையில்
சிவ புராணங்கள்: சிவமகாபுராணம், லிங்க புராணம், கந்த புராணம், ஆக்கினேய புராணம், வாயு புராணம்
பிரம்மா புராணங்கள்: பிரம்ம புராணம், பிரம்மாண்ட புராணம், பிரம்ம வைவர்த்த புராணம், மார்க்கண்டேய புராணம், பவிசிய புராணம்
விஷ்ணு புராணங்கள்: விஷ்ணு புராணம், பாகவத புராணம், நாரத புராணம், கருட புராணம், பத்ம புராணம், வராக புராணம், வாமன புராணம், கூர்ம புராணம், மச்ச புராணம், கல்கி புராணம்.
மகா புராணங்கள் சத்துவம் புராணம், ராஜஸம் புராணம், தாமச புராணம் என்று மூன்றாக பிரிக்கப்பெறுகிறது.
குணங்களின் அடிப்படையில்
சாத்துவ புராணங்கள் ("truth; purity") விஷ்ணு புராணம், பாகவத புராணம், நாரத புராணம், கருட புராணம், பத்ம புராணம், வராக புராணம்.
ராஜச புராணங்கள் ("dimness; passion") பிரம்மாண்ட புராணம், பிரம்ம வைவர்த்த புராணம், மார்க்கண்டேய புராணம், பவிசிய புராணம், வாமன புராணம், பிரம்ம புராணம்.
தாமச புராணங்கள் ("darkness; ignorance") மச்ச புராணம், கூர்ம புராணம், லிங்க புராணம், சிவமகாபுராணம், கந்த புராணம், ஆக்கினேய புராணம்.
மற்றவை
மகாபுராணங்கள்
பிரம்ம புராணம், பத்ம புராணம் (அ)விட்ணு புராணம், சிவ புராணம் (அ) லிங்க புராணம், வாயு புராணம், கருட புராணம், நாரத புராணம், பாகவத புராணம், அக்னி புராணம், கந்த புராணம், பவிசிய புராணம், பிரம்ம வைவர்த்த புராணம், மார்க்கண்டேய புராணம், வாமன புராணம், வராக புராணம், மச்ச புராணம், கூர்ம புராணம், பிரம்மாண்ட புராணம் என்பனவாகும்.
உபபுராணங்கள்
சூரிய புராணம், கணேச புராணம், காளிகா புராணம், கல்கி புராணம், சனத்குமார புராணம், நரசிங்க புராணம், துர்வாச புராணம், வசிட்ட புராணம், பார்க்கவ புராணம், கபில புராணம், பராசர புராணம், சாம்ப புராணம், நந்தி புராணம், பிருகத்தர்ம புராணம், பரான புராணம், பசுபதி புராணம், மானவ புராணம், முத்கலா புராணம் என்பனவாகும்.

வீட்டில் ஐஸ்வாியம் பெருக

வீட்டில் ஐஸ்வாியம் பெருக 

வீட்டில் ஐஸ்வாியம் பெருக நா்த்தங்காய், நந்தியாவட்டை, அடுக்குமல்லி, துளசி ஆகிய செடிகளை ( கொடி, மரம்) வாசலில் வளா்த்தால் பெருகும். வாசலில் முருங்கை மரம் இருந்தால் செல்வம் நிலைக்காது.

அபிஷேகம் (திருமுழுக்கு வழிபாடு)

அபிஷேகம் (திருமுழுக்கு வழிபாடு)
இது என்னுடைய முந்தைய பதிவில் அபிஷேகம் செய்யும் பொருட்களின் பலன்களை பற்றிய விளக்கத்தில் குழுவில் இருக்கும் நபர் கேட்ட கேள்விக்கான பதில்.
திருமுழுக்கு வழிபாடு என்பது தெய்வத் திருமேனிகளைப் (சிலை) பூசிக்கும் முறைகளுள் ஒன்றாகும். இது அபிசேகம் என்று வடமொழியில் குறிப்பிடப்படுகிறது. பால், புனித நீர், தயிர், தேன், சந்தனம், எண்ணெய், நெய், மஞ்சள், இளநீர், திருநீறு உள்ளிட்ட பல பொருட்களைக் கொண்டு திருமுழுக்கு வழிபாடு செய்வர். ஒவ்வொரு பொருளைக் கொண்டு திருமுழுக்கு செய்வதற்கும் ஒவ்வொரு பலன் உள்ளதாகக் கருதப்படுகிறது.
இது ஆன்மீக படி சொல்லும் பதில் ஆகும்.
இதையே விஞ்ஞான ரீதியாக செல்ல வேண்டும் என்றால்.
கோயிலில் என்ன இருக்கிறது என்று முதலில் அரிய வேண்டும்.
கோயில்களை சித்தர்கள் கட்டிய முறையும் சரி, கட்டிய இடமும் சரி, எந்த இடத்தில் என்ன சக்திகள் இருக்கிறது என்று ஆராய்ந்த தான் கட்டினார்கள். ஒரே இடத்தில், ஒரே பெயரில் ஒரே கோயிலை கட்டவில்லை. பல்வேறு இடத்தில், பல்வேறு பெயரில் பல்வேறு கோயில்கள் கட்டினார்கள்
ஏன் என்றால் எந்த இடத்தில் எந்த தெய்வத்தின் (கிரகத்தின்) சக்திகள் அதிகம் என்று கண்டறிந்து கட்டினார்கள். ஒவ்வொரு கோயில்களிலும் உள்ள மூல தெய்வத்திற்கு என்று ஒரு குறிப்பிட்ட சக்தியை ( Cosmic Energy) ( ஒரு குறிப்பிட்ட கதிர்வீச்சுயை(Wave length) குறிப்பிட்ட அலைவரிசையில் (Frequency)) உள்ளே பிரபஞ்சத்தில் இருந்து பெரும் வகையில் தான் அமைந்துள்ளனர். மூலவர் என்று செல்லக்கூடிய சிலைகள் எந்த கல்லால் செய்யப்பட்டுள்ளன. ( எ.டு். மரகதலிங்கம், மாணிக்கலிங்கம், ஸ்படிகலிங்கம், கார்ணட்லிங்கம்). மூலவர் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள யந்திரம் பல கோடிமுறை மந்திர உரூவேற்றப்பட்டதகும், மூலவர் இருக்கு இடம், மேல் இருக்கும் கோபுரம், பிரதான கோபுரம், கோபுரத்தின் மேல் இருக்கும் கலசம், மற்றும் கொடிமரம் இவைகள் அந்த மூலவிக்கிரகத்திற்கு தொடர்ந்து அந்த சக்தியை தரும். மூலவருக்கு காட்டும் தீபாரதனை அங்கு இருக்கும் சக்தியை நமக்கு தரும்( Fire is the conductor of energy). இதில் பலவிதமான சக்திகள் உள்ளன ( ஒன்பது விதமான சக்திகள் (Cosmic energy) இதையே நவக்கிரகங்கள் என்கின்றனர்) இதில் ஒரே இடத்தில் அனைத்து சக்திகளையும் ஒன்று சேர்க்க முடியது ( Atomic Fusion நடைபெறும், bomb வெடிப்பு போல்) அதனால் தான் ஒவ்வொரு சக்திகளை ஒவ்வொரு கோயிலில் வைத்தனர். ( திருமணத்திற்கு, குழந்தைக்கு, கல்விக்கு, நோய்களுக்கு, ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கோயில் என்று. இப்படி மனிதர்களுக்கு தேவையான சக்தியை தரும் அந்த ஆற்றல் ஒரு நாளைக்கு இத்தனை மனிதர்கள் பெறமுடியும் என்பது அந்தந்த கோயிலை பொருத்து ஆகும். இப்படி அந்த சக்திகளை நம் பெரும்பொழது சற்று குறையும் அதை சரி செய்யவே அபிஷேகம் செய்யப்படுகிறது. அதை ஒவ்வொரு பொருட்கள் முலம் செய்யும்போது ஒவ்வொரு விதமான சக்திகள் கூடும். அதை நாம் ஏன் செய்யவேண்டும் என்றால் சக்திகள் அதிகம் ஆகும் போது அது மீண்டும் பல ஆயிரம் பேருக்கு பலன் தரும். அதனால் தான் அபிஷேகம் செய்தால மிகுந்த பலன். எந்தந்த அபிஷேகத்திற்கு என்ன பலன்கள் என்று சென்ற பதிவில் சொன்னேன்.

இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் பொருளும் அதன் பயனும்!

இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் பொருளும் அதன் பயனும்!
1.நன்னீர் - தூய்ப்பிக்கும்
2. நல்லெண்ணை - நலம்தரும்
3. பச்சரிசி மா - மல நாசம், கடன் தீரும்
4. மஞ்சள் தூள் - நல் நட்பு வாய்ப்பிக்கும்
5. திருமஞ்சனத்தூள் - நோய் தீர்க்கும்
6. பஞ்சகவ்யம் - தீதளிக்கும், ஆன்மசுத்தி (பசுவின் பால்,
தயிர், நீர், சாணம், நெய் கலந்தது)
7. பசும்பால் - நீண்ட ஆயுள் தரும்
8. பசுந்தயிர் - மகப்பேறு வாய்க்கும்
9. பஞ்சாமிருதம் - பலம், வெற்றி தரும்
10. தேன் - சுகமளிக்கும், சங்கீதவிருத்தி
11. நெய் - முக்தியளிக்கும்
12. சர்க்கரை - எதிரியை ஜெயிக்கும்
13. இளநீர் - நல் சந்ததியளிக்கும்
14. கருப்பஞ்சாறு - ஆரோக்கியமளிக்கும்
15. நார்த்தம்பழம் - சந்ததி வாய்க்கும்
16. சாத்துக்கொடி - துயர் துடைக்கும்
17. எலுமிச்சை - யமபய நாசம், நட்புடை சுற்றம்
18. திராøக்ஷ - திடசரீரம் அளிக்கும்
19. வாழைப்பழம் - பயிர் செழிக்கும்
20. மாம்பழம் - செல்வம், வெற்றி தரும்
21. பலாப்பழம் - மங்கலம் தரும், யோகசித்தி
22. மாதுளை - பகைநீக்கும், கோபம் தவிர்க்கும்
23. தேங்காய்த்துருவல் - அரசுரிமை
24. திருநீறு - சகல நன்மையும் தரும்
25. அன்னம் - அரசுரிமை
26. சந்தனம் - சுகம், பெருமை சேர்க்கும்
27. பன்னீர் - சருமம் காக்கும்
28. கும்பஜலம் - பிறவிப்பயன் அளிக்கும்
29. சங்காபிஷேகம் - நலமெலாமளிக்கும்.

விளக்கேற்றும் பலன்கள்

விளக்கேற்றும் பலன்கள்
காலை 6 மணி முதல் 7 மணி வரை வீட்டில் தீபம் ஏற்றுவது சர்வ மங்கள யோகம் தரும்.
பௌர்ணமியன்று விளக்கேற்றும் பலன்கள் :
ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமியன்று திருவிளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சிறப்பான பலன்கள் ஏற்படும் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு பலன் நடைபெறும்.
சித்திரை மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் தான்யம் பெருமளவில் கிடைக்கும்.
வைகாசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் விவாக பேச்சுக்கள் முடிவாகி மனநிம்மதியைக் கொடுக்கும்.
ஆனி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் புத்திர பாக்கியம் ஏற்படும்.
புரட்டாசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் பசுக்கள் விருத்தியாகும்.
ஐப்பசி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் பசிப்பினிகள் நம்மை விட்டு அகலும் .
கார்த்திகை மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் ஐஸ்வரியம் பெருகும், நிலைத்த புகழ் ஏற்படும் .
மார்கழி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் துன்பம் அகலும் .இன்பங்கள் வந்து சேரும்.
பங்குனி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் தர்ம புண்ணிய சிந்தனைகள் அதிகரிக்கும்.
ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்.
இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்.
மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்.
நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்.
ஐந்து முகம் ஏற்றினால் - நற்பலன்கள் உண்டாகும்.
யாருக்கு என்ன எண்ணெய் (விளக்கேற்றுவதில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு எண்ணெய் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.) :
கணபதி - தேங்காய் எண்ணெய்.
நாராயணன், சர்வதேவதைகள் - நல்லெண்ணெய்.
மகாலட்சுமி - பசுநெய்.
குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்.
ருத்திரர் - இலுப்பெண்ணெய்.
பராசக்தி - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த எண்ணெய்.
எண்ணையும் அதன் பயன்களும் :
விளக்கு எண்ணெய் - துன்பங்கள் விலகும்.
பசுநெய் - சகல செல்வமும் பெருகும்.
நல்லெண்ணெய் - பீடை விலகும். எம பயம் அணுகாது.
ஆமணக்கு எண்ணெய் - தாம்பத்யம் சிறக்கும்.
இலுப்பை எண்ணெய் - பூஜிப்பவருகும், பூஜிகப்படும் இடத்துக்கும் விருத்தி உண்டு.
கடலை எண்ணெய் மட்டும் பயன்படுத்தவே கூடாது.
தீபம் ஏற்றும் திசைகள் :
கிழக்கு நோக்கி தீபமேற்ற - துன்பங்கள் நீங்கி பீடை விலகும்.
மேற்கு நோக்கி தீபமேற்ற - கடன் தொல்லை அகலும், கிரக தோஷம் கழியும்.
தெற்கு நோக்கி தீபமேற்ற - பாவம், அபசகுனம், எமனுக்குப் பிரீதி.
வடக்கு நோக்கி தீபமேற்ற - திருமணத்தடை, சுபகாரியத் தடை, வேலை வாய்ப்புத் தடை நீங்கி செல்வம் பெருகும். சர்வ மங்களம் உண்டாகும்.
விளக்கு துலக்க வேண்டிய நாட்கள் அதன் பயன்கள் :
ஞாயிறு - கண் சம்பந்தமான நோய் தீரும்.
திங்கள் - அலை பாயும் மனம் அடங்கி அமைதியுறும்.
வியாழன் - குரு பார்க்கக் கோடி நன்மை உண்டாகும். மனக்கவலை தீரும்.
சனி - வாகன விபத்துகள் ஏற்படாமல் நம்மைக் காக்கும்.
குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் துலக்குவது மிகவும் நல்லது. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் துலக்குவதை விட இந்நாட்கள் அதிக பலன்களை தரக்கூடியவை. இதற்கு ஒரு காரணமும் உண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி குடியிருக்கிறாள். எனவே செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பதால் அந்நாட்களில் கழுவக்கூடாது.
திரிகளும், பயன்களும்
குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் எண்ணெயை பொறுத்து பலன்கள் வேறுபடுவதைப் போல, திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.
* பருத்தி பஞ்சினால் ஏற்றப்படும் திரியால் குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும்.
* வாழைத் தண்டின் நாரில் செய்த திரியால் முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும்.
* தாமரைத்தண்டு நூலால் செய்யப்பட்ட திரியால் முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும்.
* வெள்ளை எருக்கம்பட்டை மூலம் செய்யப்படும் திரியால் செல்வம் பெருகும்.
* புதிய மஞ்சள் துணியால் செய்யப்பட்ட திரியால் அம்பாளின் அருளால் நோய்கள் குணமாகும்.
* சிவப்பு வண்ண துணியால் திரிக்கப்பட்ட திரி குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும்.
* வெள்ளை துணி திரியால் அனைத்து நற்பலன்களும் கிடைக்கும். இந்த துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது.
வளம் பெருக்கும்.
அகல்:
கார்த்திகைமாதம் பௌர்ணமி அன்று வானில் முழு நிலவு பிரகாசிக்கும் நேரத்தில் வீட்டு முற்றங்களில் தீபம் ஏற்றிவைத்தால் அந்த இல்லத்தில் ஐஸ்வரியம் பெருகும் என்பார்கள்.
இந்தநாளின் மற்ற விளக்குகளை விட அகல் விளக்கு ஏற்றுவதே உத்தமமானது என்கிறது ஆன்மீகம். அகல் என்பதற்கு விரிவடைதல் என்ற அர்த்தமும் உண்டு. வாழ்க்கை அனைத்து வசதிகளுடன் விரிவடைந்து வளம் பெருக வேண்டும் என்பதற்காகவே இந்த வழிபாடு.

ஹோமங்களை நாம் ஏன் செய்கிறோம்?

ஹோமங்களை நாம் ஏன் செய்கிறோம்?
அதனால் என்ன பலன்?
ஹோமங்கள் மூலம் குறிப்பிட்ட தெய்வங்களை திருப்தி செய்து அந்த தெய்வங்களின் மூலம் நற்பலன்களை எளிதில் அடைய முடியும். யஜீா் வேதத்தில் 30 வகையான யாகங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஒவ்வொரு கடவுள்களுக்கும், ஒவ்வொரு தேவதைக்கும் என தனித்தனியாக வேதமுறைகள் கூறப்பச்டிருக்கிறது, அதேபோல் யாகத்தில் இடவேண்டிய பொருட்கள் தெய்வத்திற்கு தெய்வம் மாறுபடும்.
இயல்பாக நாம் கோயில்களுக்கு சென்று அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனை செய்கிறோம் அதற்கு பலன் உண்டு. செய்கின்ற ஹோமத்திற்கும் பலன் உண்டு.
அா்ச்சனை, ஆராதனை என்பது -- இளநிலை,
ஹோமம் (வேள்வி, யாகம், யக்ஞம்) என்பது முதுநிலை வழிபாடு.
சாதாரணமாக நாம் செய்யும் அா்ச்சனை, ஆராதனைகள் மூலம் நம் வேண்டுதல் நிறைவேறலம் அல்லது தவறலாம், தாமதமாகலாம், ஆனால் ஹோமம் மூலம் செய்யும் பிரார்த்தனை ஓரு போதும் தவறுவதில்லை.
நமது கோாிக்கைகளை, வேண்டுதலை அக்னி மூலம் இறைவனிடம் கூறுவதுதான் ஹோமம்.
ஹோம மறை
1. அனுக்ஞை
2. விக்னேஷ்வர பூஜை
3. சங்கல்பம்
4. ஆவாஹனம்
5.புன்யாஹ வாசனம்
6. அக்னி முகம்
7. ஆகுதி, பூா்ணாகுதி ஆகிய செயல்பாடுகளை கொண்டது.
1.அனுக்ஞை என்பது அனுமதி நம் குலதெய்வத்தையும், முன்னோா்களையும் வணங்கி அனுமதி பெற்றுக்கொள்ளுதல் ஆகும்.
2.விக்னேஷ்வர பூஜை என்பது நாம் செய்யும் ஹோம காாியங்களில் எந்தவித விக்னமும் ( தடையும் ) இல்லாமல் சிறப்பாக நடப்பதற்கு செய்யப்படும் விநாயகர் வழிபாடு ஆகும்
3.சங்கல்பம் இதுதான் மிக முக்கியமானது. இதில் தான் நம் வேண்டுதல்களை சமா்ப்பிக்கின்றோம். இது ஓரு விண்ணப்ப படிவம் (application ) போன்றது. அனுப்புநா், பெறுநா், விபரம், நாள், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் போன்ற அனைத்து விபரங்களும் அடங்கியிருக்கும்.
இங்கு அனுப்புநா் ( From ) என்பது நமது பெயா், ராசி, நட்சத்திரம், பெறுநா் என்பது ஹோம குண்டத்தில் ஆவாஹனம் செய்யப்பட்ட தேவதைகள் கோாிக்கைகள் என்பதை அந்தணா்கள் விாிவாக நமக்கு என்ன என்ன தேவை என்பதை கூறுவாா்கள்.
அதில் ஒரு வாி சக குடும்பானாம், ஷேம, ஸ்தைாிய, வீா்ய, விஜய, ஆயுளரோக்கிய, ஐஸ்வா்ய, அபிவிருத்தியா்த்தம் என்று கூறுவாா்கள் இப்படி நாம் வேண்டியதை எல்லாம் தேவதைகள் நி்றைவேற்றி விடும்.
4.அவாஹனம் இந்த பிரபஞ்சத்தில் எங்கும் எல்லா இடங்களிலும் தெய்வசக்திகள், தெய்வீக ஆற்றல்கள் நீக்கமற நிறைந்துள்ளன. அந்த சக்தியை முறைப்படுத்தி ஒரிடத்தில் நிலைப்படுத்துவது தான் ஆவாஹனம். இதன்படி நாம் செய்யும் ஹோமத்தில் அந்த தெய்வசக்தியை, தேவதைகளை கும்பத்திலும், ஹோமகுன்ட அக்னியிலும் அமரும்படி ஆவாஹனம் செய்கிறாா்கள்.
5. புண்யாஹவாசனம் -- என்பது நம் தேகம், நம் ஆத்ம சுக்திக்காவும், ஹோமத்தில் பயன்படுத்தப்படும் எல்லா பொருள்களின் சுக்திக்காவும் செய்யப்படுவது ஆகும்.
6. அக்னி முகம் -- ஹோமகுண்டத்தில் அக்னியை வளா்த்து, அக்னியில் தெய்வ வசிய புகையை ஏற்படுத்துவது. இதற்காக தெய்வ வசிய சமித்துகளை பயன்படுத்துவாா்கள். இதில் இடப்படும் ஒவ்வொரு மூலிகைப் பொருளுக்கும் ஒவ்வொரு சக்தி உண்டு.
உதாரணமாக
விஷ்ணுகரந்தி -- சொா்ண வசியம்
வெள்ளை எருக்கு -- உலக வசியம்
வெள்ளை குண்டுமணி -- மிருக வசியம்
செந்நாயுருவி -- மனித வசியம்
சீதேவி செங்களுநீா் -- ராஜ வசியம்
மஞ்சள் காிசலாங்கண்ணி -- தேவதை வசியம்
இப்படி 108 மூலிகைகளை அக்னியில் இடுவதன் மூலம் எல்லா தெய்வங்களும் வசியமாகி அக்னி குண்டத்தில் மகிழ்ச்சியுடன் இருப்பாா்கள் அப்போது அந்த தெய்வங்களுக்கு உணவாக நெய், அவல், கற்கண்டு, தேன், பால், தயிா், பழங்கள், பட்டு வஸ்திரங்கள் ஆகியவற்றை ஆகுதி செய்வாா்கள். அதனால் அவா்கள் இன்னும் மகிழ்ச்சி அடைவாா்கள், அப்போது அந்தந்த தேவதைகளுக்குறிய மத்திரங்களை கூறி புகழ்கின்றோம், போற்றுகின்றோம்.
அந்த மந்திரங்களில் நம் தேவைகளையும் முன் வைக்கின்றோம்.
ஐம் என்றால் -- சரஸ்வதியின் கடாஷயம் கிட்டும்
உம் என்றால் -- சகல தெழிலுக்கும் பலமுண்டாகம்
ஏம் என்றால் -- சகலமும் வசியமாகும்
ஔம் என்றால் -- வாக்கில் ஒளி உண்டாகும்.
கம் என்றால் -- தடைகள் விலகும்.
சம் என்றால் -- சா்வ ஜன வசியம்
டம் என்றால் -- வியாதிகள் விலகும்.
தம் என்றால் -- தனமும், தான்யமும் விருத்தியாகும்.
லம் என்றால் -- பூமி லாபம், ஜெயம் கிடைக்கும்.
வம் என்றால் -- வியாபாரத்தில் வசியம் ஏற்படும்.
ஸம் என்றால் -- சகலவிதமான பலனும் கிடைக்கும்.
இப்படி எல்லா நன்மைகளையும் அருளும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மந்திரங்களை ஜெபிக்கும் போது தேவதைகள் நம் தேவைகளை, வேண்டுதலை ஏற்று மகிழ்வோடு நிறைவேற்றிக் கொடுக்கின்றன.
7. பூா்ணாகுதி -- என்பது ஹோம நிறைவில் ஹோம பட்டுடன் அதற்குாிய பொருட்களையும், காணிக்கைகளையும் செலுத்தி தேவதைகளுக்கு நன்றி கூறி சாந்தப்படுத்துவது ஆகும்.
பக்தியோடு நாம் செய்யும் ஹோம தீயில் (சுவாலையில் அந்தந்த தெய்வத்தின் சொரூபங்களை கண்களால் நேரடியாகககாண முடியும். இது அனுபவத்தில் இன்றும் உண்மை.
உதாரணமாக
சுப்ரமண்ய வேள்வியில் -- முருகனின் வேலை சுவாலையில் பார்க்கலாம்,
சுதா்ஸன ஹோமத்தில் -- மாகவிஷ்ணுவின் சக்கரத்தை காணலாம்.
இதையெல்லாம் காண்பதற்கும், ஹோமத்தின் முழு பயனையும் அடைவதற்கு அதில் கலந்து கொள்பவா்களுக்கு முழு மன ஈடுபாடு வேணடும் உடலால், மனதால், ஆன்மாவால் நம்பிக்கையுடன் ஈடுபாட வேண்டும்.

வெள்ளி, 4 மார்ச், 2016

நவரத்தின மோதிரம் எல்லோரும் அணியலாமா?

நவரத்தின மோதிரம் எல்லோரும் அணியலாமா? அவ்வாறு அணிந்தால் ஏதேனும் கேடு விளையுமா? என்ற கேள்வி எல்லோரின் மனதில் தோன்றுவது இயல்பு.
நவரத்தின கற்கள் பதிந்த மோதிரம் ஒருவருக்கு பொருந்திவிட்டால் அவர் மிக சிறந்த அதிஷ்டசாலி என்று தான் சொல்ல முடியும். நவஅம்சங்கள் உங்களுக்கு பொருந்தும். அதாவது சாதனைகள் படைப்பீர், எதிலும் வெற்றி, குடும்பத்தில் மகிழ்ச்சி, புகழ், செல்வாக்கு, பதவி, பணம் என அனைத்தும் உங்களுக்கு தான். உழைப்பிற்கு முழுமையான பலன் கிடைப்பதோடு, வெற்றி கிடைக்கும்.
இந்த நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்…..?
1.தனுசு லக்னம், மீன லக்னகாரா்கள்,
2.மேஷ லக்னம் மற்றும் விருச்சிக லக்னகாரா்கள்
இந்த நவரத்தினத்தை மோதிரத்தை அணியலாம்.
ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் அணியலாம், அல்லது தங்கள் ஜாதகத்தை ஒரு சிறந்த ஜோதிடரை(ரத்தினங்கள் பற்றி அறிந்தவர்) அணுகி தங்களுக்கு நவரத்தின மோதிரம் பொருந்துமா என்று ஆலோசித்து அணியவேண்டும்.
இருப்பின் ரத்தினங்களை வாங்கி 15 நாட்கள் தன்னுடன் வைத்திருந்து சோதித்து பார்த்து பின்பு தான் அணிய வேண்டும். நவரத்தினங்களுக்குள் எடையில் சிறியவை மற்றும் இந்த அளவில்தான் இருக்க வோண்டும் என்ற நியதி இல்லை.ஆனால் ஒன்பது ரத்தினங்களும் குற்றமற்றவையாகவும், ஒரே அளவில் உள்ளதாகவும் இருக்க வேண்டும். ஒரு கல் பொிது, ஒரு கல் சிறிது என்று இருக்க கூடாது. னபொதுவாக தங்கத்தில் தான் பதித்து அணிந்து கொள்ள வேண்டும். வலதுகையின் மோதிர விரலில் தான் அணிய வேண்டும்.

மண வாழ்க்கை சிறப்படைய

மண வாழ்க்கை சிறப்படைய
திருச்செங்கோடு (Tiruchengode)
நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு திருத்தலம் ஆகும். இங்குள்ள மலை செந்நிறத்தில் உள்ளதால் இவ்விடம் திருச்செங்கோடு எனப்பெயர் பெற்றது.
வரலாறு
பழங்காலத்தில் இந்நகர் திருக்கொடிமாடச் சென்குன்றனூர் எனவும், திருச்செங்கோட்டாங்குடி எனவும் பெயர் பெற்றது. சம்பந்தரின் தேவாரப்பாடலிலும் அவ்வாறே கூறப்பட்டுள்ளது.
இது கொங்கு நாட்டிலுள்ள ஏழு சிவ தலங்களில் ஒன்றாகும். இது கொங்கு நாட்டைச்சேர்ந்த கீழ்கரை பூந்துறை நாட்டை சார்ந்தது ஆகும். காவிரியின் மேற்குப்புறம் உள்ளது. மேல்கரை பூந்துறை நாடாகும், காவிரியின் கிழக்குப்புறம் உள்ளது கீழ்பூந்துறை நாடாகும். சிலப்பதிகாரத்தில் இந்நகர் நெடுவேல் குன்று என கூறப்பட்டுள்ளது. மலை மீதுள்ள முருகனை அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடியுள்ளார். கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் முதலியவைகளில் இவ்விடம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நகருக்கு தெய்வத்திருமலை, நாகமலை, உரசகிரி, நாககிரி எனப் பல பெயர்களும் உள்ளது.
திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பாடல் "வெந்தவெண் ணீறணிந்து" முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
அதன் முதல் செய்யுள்:
“ வெந்த வெண்ணீறு அணிந்து விரிநூல் திகழ்மார்பில் நல்ல
பந்து அணவும் விரலாள் ஒருபாகம் அமர்ந்து அருளிக்
கொந்து அணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே.

கோயில்
செந்நிறத்தில் அமைந்த மலையின் உச்சியில் கிழக்கு நோக்கி செங்கோட்டு வேலவர் சன்னதி உள்ளது. தலமரம் இலுப்பை. மேற்கு நோக்கி அர்த்தநாரீஸ்வரர் எனப்படும் மாதொரு பாகர் சன்னதி அமைந்துள்ளது. மாதொரு பாகர் லிங்க வடிவில் அல்லாமல் 6 அடி முழு திருமேனியுடன் காட்சியளிக்கிறார். இறைவன் அா்த்தநாரீஸ்வரா், இறைவி பாகம் பிாியாள். பாதி புடவை - பாதி வேட்டி அலங்காரத்துடன் மூலவர் (சிவன்) காட்சி தருகிறார். முழு வடிவமும் வெள்ளைப் பாசாணத்தால் ஆனது. திருவடியின் கீழ் குளிா்ந்த நீா் சுரக்கின்றது. இது வேத தீா்த்தம்எனப்படுகிறது. மூலவாின் முன்னால் மரகத லிஙகமும், பிருங்கி மகாிஷியின் உருவமும் உள்ளது.
இம்மலைக்கோயில் சிவனுக்குரியதாக சொல்லப்பட்டாலும் இங்கு திருமாலுக்கும் கோயில் உள்ளது. இங்குள்ள ஆதிகேசவ பெருமாள் சன்னிதி, ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவ திருமேனியும் உள்ளது. நம்மாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்டதாகும்.
இம்மலை மீது ஏற 1250 படிக்கட்டுகள் கொண்ட பாதை உள்ளது. தற்போது மலை மீது ஏற சாலை வசதி செய்யப்பட்டுள்ளதால் வாகனங்கள் மூலம் இதனை அடையலாம். படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில் பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சன்னிதி மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு முதலில் அமைந்தது முருகனுக்கான கோயில் ஆகும். அதையொட்டியே இந்நகரின் பெயர் அமைந்துள்ளதை கவனிக்கலாம்.
திருச்செங்கோடு மலைமீதுள்ள மாதொரு பாகர் கோயில்
அமைவிடம்
திருச்செங்கோடு ஈரோடிலிருந்து 18 கிமீ தொலைவிலும் சேலத்திலிருந்து 45 கிமீ தொலைவிலும் நாமக்கலிருந்து 32 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
ஈரோட்டையும் ஆத்தூரையும் இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 79 இதன் வழியாக செல்லுகிறது.
திருச்செங்கோட்டையும் நாமக்கலையும் மாநில நெடுஞ்சாலை 94 இணைக்கிறது.
பரமத்தியையும் சங்ககிரியையும் இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 86 இதன் வழியாக செல்லுகிறது.
இறைவன் இறைவியை பிாியமல் எப்போதும் சோ்ந்து தாிசனம் அளிப்பது கணவன் மனைவி உறவு மேம்படவும், பிாிந்தவா்கள் கூடவும் வழிவகுக்கும். இத்திருத்தல தாிசனம் கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ வழிவகுக்கும்.

ரத்தினங்கள் எப்படி உருவாகின்றன, எப்படி பலன் தருகின்றன

ரத்தினங்கள் எப்படி உருவாகின்றன, எப்படி பலன் தருகின்றன.
ரத்தினங்கள் என்பது, இயற்கை அன்னை மனிதனுக்கு கொடுத்துள்ள விலை மதிப்பற்ற பொக்கிஷங்களாகும். ரத்தின கற்கள் பல காரணங்களால் (இயற்கையிலேயே) பூமிக்குள் உருவாகின்றன.
கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உலகம் ஒரு நெருப்பு கோளமாக சூரியனிடமிருந்து பிரிந்து வந்தது இதை big bang theory என்பார்கள். பூமியானது காலப்போக்கில்
( மில்லியன் ஆண்டுகள் கணக்கில்) குளிர்ந்த போது, பூமியிலிருந்து வாயுக்கள், தாது பொருட்கள் மற்ற ரசாயன பொருட்கள் சுருங்கி, தங்களுக்குள்ளேயே ஒரு அடா்த்தியையும் (density), உருவத்தையும் (size) அமைத்து கொண்டன. மற்ற இயற்கை பொருட்களுடன் (மண், கல், தாவரங்கள் போன்றவை) இவையும் கலந்து ரசாயன மாற்றங்கள் அடைந்தன. பூமி உருண்டையின் மத்திய பாகம் (earth center)இன்றும் கொதிக்கும் குழம்பு பாறைகளாகவும், திரவ கணிமங்களாகவும் இருந்து வருகின்றன.
பூமியில் உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்பு உலகத்தில் இயற்கை சீற்றங்களும் (புயல், மழை, நெருப்பு மழை) கண்டங்களின் சலனங்களும் ( continental movements) தொடர்ந்து நடைபெற்றன. இதன் மூலம் தான் பிரபஞ்சத்தில் தனக்கென ஒரு உருவத்தையும் ( shape) சுழற்சியையும் ( rotation) நிலைத் தன்மையையும் (existence) பூமி அடைந்துள்ளது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஏற்பட்ட இந்த மாற்றங்களால்தான் பூமி இன்றுள்ள சமநிலைக்கு வந்துள்ளது. இதையே பூமியின் பாிணாமவளா்ச்சி (earth's revolutionary process) என்பார்கள். பூமியின் மேல் பாகம் குளிர்ந்த பிறகுதான் பூமியின் மீது உயிரினங்கள் தோன்றின. புல், பூண்டு முதல் மிருகங்கள், மனிதர்கள் வரை பூமியில் உருவாவதற்கு கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆயின. பூமியின் மத்திய பாகம் இன்றும் நெருப்பு பந்தாக சுழன்று கொண்டிருக்கிறது. அது எப்போதும் பூமியின் வெளிப்புறம் வர துடித்து கொண்டிருக்கிறது. பூமியின் மேல் பரப்பு (earth crust ) பலவீனமாக இருக்கும் இடங்களில் நெருப்பு குழம்பானது (lava) பூமியை பிளந்து கொண்டு வெளியே பீறிடுகிறது. தன்னிடம் உள்ள அருஞ்செல்வங்களையும் சோ்த்துக் கொண்டு எாிமலைகள் (valcano ) மூலம் வெளியே தள்ளுகிறது.
இந்த எாிமலை குழம்புதான் ( lava) ரத்தினங்களின் இயற்கை சுரங்கமாக இருக்கிறது.
எாிமலையானது மனிதா்க்கு எண்ணற்ற துன்பங்களை கொடுத்தாலும், அவைகளால் கிடைக்கும் நற்பலன்கள் ஏராளம். ஏகப்பட்ட ரத்தினங்களும் (Gems), கணிமங்களும் ( elements), பல உலோகங்களும் ( metal ores) எாிமலையிலிருந்து தான் கிடைக்கின்றன.
இயற்கையிலேயே மண்ணிற்குள் எப்போதும் மூல பொருட்களுக்கிடையில் ( between elements) ரசாயன சோ்க்கைகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. தாது உப்புக்களும், வாயுக்களும் குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட சாதகமான சூழ்நிலைகள் அமையும்போது, அவைகள் ரத்தினங்களாக மாற்றமடைகின்றன. எனவேதான், எல்லா நாடுகளிலும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே ரத்தினங்கள் கிடைக்கின்றன.
அதுமட்டுமல்ல, பூமி நிலைத்தன்மை அடைவதற்கு முன்பு அடிக்கடி பூகம்பங்கள் ( Earthquakes ) ஏற்பட்டன. அப்போது பூமியின் மேலிருந்த தாவரங்களும், பெரும் பாறைகளும், மரங்களும் மற்றும் உயிாிகளும் பூமிக்குள்ளே புதைந்து விட்டன. அவைகள் பூமியின் உள்புற சீதோஷ்ண மாற்றத்தால் (Earth's action on trees or rocks for millions years) அவைகள் தாது உப்புக்களாகவும் (Minerals), ரத்தினங்களாகவும், பலவித பாறைகளாகவும், ரசாயன பொருட்களாகவும் (Various compounds) பாிணாம வளர்ச்சி அடைந்தன.
இதன் மூலமாகவும் ரத்தினங்கள் உருவாயின. பொதுவாக கார்பன் போன்ற தாதுப் பொருட்களே வைரம் போன்ற விலை உயர்ந்த ரத்தினங்கள் ஆகின்றன. இவைகள் பூமிக்குள் உருவாவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன. இயற்கையாக பூமிக்குள் விளையும் போதுதான் ரத்தினங்களுக்கு பலன்களும், விலை மதிப்பும் ( Value of Gems) அதிகாிக்கின்றன. இவ்வகை ரத்தினங்களை Inorganic Gems என்று அழைக்கப்படுகின்றன.
இவைதவிர கடலிலும் பவழம், முத்து, அம்பா் போன்ற ரத்தினங்கள் கிடைக்கின்றன, இவைகள் சிலவகை பூச்சிகளாலும், உயிா்களாலும் உருவாகின்றன. இவைகளை Organic Gems என்று அழைக்கப்படுகின்றன.
இப்படி இயற்கையாக உருவாகும் ஒவ்வொரு ரத்தினமும் தங்களுக்குள்ள இயற்கை சக்தியால் ( natural characteristics) ஒவ்வொரு வகையான அதிா்வுகளை (Vibrations) பெற்றிருக்கின்றன. ரத்தினங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தன்மைகள் மின்காந்த அலைகளையே ( Magnetic waves) உருவாக்குகின்றன. மேலும் அவைகள் ஒரே மாதிாியான அலை வீச்சுகளையும் ( Astronomical Radiations) குறிப்பிட்ட கதிா்களை கட்டுப்படுத்தும் தன்மையையும் பெறுகின்றன. இயற்கையாக கிடைக்கும் ரத்தினங்கள் இயற்கையில் கிடைக்கும் கதிா்வீச்சுகளை ( Sun Rays, Earth's Magnetic Vibrations) முறைப்படுத்தும் வல்லமை கொண்டவை.
பூமியில் விளையும் இந்த ரத்தினங்களும் மற்ற உயிாினங்களை போன்று உயிா்த்துடிப்பு உள்ளவைகளாகவும் ஜீவன் உள்ளவைகளாகவும் விளங்குகின்றன.
ஆனால், மனிதன் உருவாக்கும் செயற்கை ரத்தினங்களுக்கு இந்த ஆற்றல்கள் இருப்பதில்லை. சாதாரணமாக கண்ணால் பாா்ப்பதற்கு இரண்டும் ஒன்று போல் இருந்தாலும், சோதனைகளின் மூலம் உண்மையான ரத்தினத்தையும் போலி ரத்தினத்தையும் இனம் பிரித்து விடலாம். இதற்கு மிகுந்த அனுபவம் வேண்டும்.
இயற்கை ரத்தினங்களின் அதிா்வுகளும், கிரகங்களின் அதிா்வுகளும் ஒன்றுக்கொன்று தொடா்புடையவை. அலை அதிா்வு அளவுகள் ( Wave lengths) சமமாக இருக்கும்போது, ஒரு குறிப்பிட்ட ரத்தினத்தின் மூலம், அதற்கு சம அதிர்வுகளுடைய கிரகத்தின் கதிா்களை நாம் கட்டுப்படுத்த முடியும் என்பதே Gemology யின் அடிப்படை உண்மையாகும்.
ரத்தினங்கள் உருவாகும்போதே மின்காந்த அதிர்வுகளை தன்னுள் (Latent) கொண்டுள்ளன. இவைகள் சீரான அணுக்கூட்டங்களை ( Molecular Arrangements) பெற்றுள்ளன. ஒவ்வொரு ரத்தினமும் ஒரு குறிப்பிட்ட சீரான அலை நீளங்கள் (Frequency) மற்றும் ஒரே சீரான அதிர்வுகள் (Vibrations) கொண்டுள்ளன.
இதனால் தான் இன்றைய நவீன காலத்திலும் கடிகாரங்கள் (Watches) தொடர்ந்து ஓடுவதற்காக குவாா்ட்ஸ் ( Quartz) போன்ற கற்கள் வைத்து செய்யப்படுகின்றன. இவைகள் எப்போதும் சீரான மின் அலைகளை வெளிப்படுத்தி கொண்டே இருப்பதால், அந்த கடிகாரமானது தொடர்ந்து இயங்க முடிகிறது.
ஒரு சிறிய ரத்தின கல்லுக்கு ஒரு கடிகாரத்தையே தொடர்ந்து இயக்க வைக்கும் போது, ஒரு சிறந்த ரத்தினத்தை பயன்படுத்தினால் மனிதனின் வாழ்க்கையில் ஏன் நற்பலன்களை ஏற்படுத்த முடியது?
ரத்தினங்களுக்கு பிரபஞ்சத்திலிருந்து வரும் ஒளியலைகளையும் ( Cosmic Waves ) அதிா்வுகளையும் (Vibrations) கிரகித்து, அவற்றை சேமித்து வைத்து, அவைகளை சீா்மைபடுத்தி திரும்பவும் சீரான ஒளியலைகளையும், மின்காந்த அதிர்வுகளையும் வெளியிடும் ஆற்றல் பெற்றவை. நவகிரகங்களிடமிருந்து வெளிவரும் அலைகள் எதிா்மாறான (Negative) தன்மைகளை கொண்டவை. ரத்தினங்கள் அவற்றை கிரகித்து கொண்டு நேரான (Positive) தன்மையாக மாற்றும் ஆற்றல் கொண்டவை ஆகும்.

பித்ரு தோஷம் என்றால் என்ன? பித்ரு தோஷத்தை போக்க சிறந்த பரிகாரம்.

பித்ரு தோஷம் என்றால் என்ன?
பித்ரு தோஷத்தை போக்க சிறந்த பரிகாரம்.
ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான்.
நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ருதோஷம் எனப்படும். இவர்களை வழிபடும் முறைக்கு பிதர்தர்ப்பணம் அல்லது சிதார்த்தம் என்று பெயர்.
நம்மோடு வாழ்ந்து மறைந்தவர்களில் சிலர், தங்களது வினைப்பயன் காரணமாக உடல் கிடைக்காமல், அடுத்த பிறவி எடுக்க முடியாமல் தவித்துக்கொண்டிருப்பார்கள். உடல் இல்லையென்றாலும் மனதின் தாக்கத்தால் பசி, தூக்கம் என்று நாம் அனுபவிக்கும் எல்லா அவஸ்தைகளையும் அனுபவித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்களுடைய வாரிசு மற்றும் உறவினர்கள் அவர்களுடைய இந்தப் பசியைப் போக்கக் கடமைப்பட்டவர்களான நாம் அதைச் செய்யாமல் விடும் போது அது நமக்கு சாபமாக வந்து சேருகிறது. இதனையும் ‘பித்ரு தோஷம்’ என்றும், ’பித்ரு சாபம்’ என்றும் கூறுகின்றனர்.
இந்த தோஷம் வருவதற்கான காரணங்கள்: பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால் பித்ரு தோஷம் வரும். ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும். ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும்.
தன்னை வளர்த்து ஆளாக்கிய தாய்-தந்தையர் காலமாகிவிட்டால் அவர்களுக்கு செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளை இறுதிச்சடங்கு பிள்ளைகள் செய்தால் மட்டும் அவர்கள் ஆன்மா சாந்தி அடையும் ஈமக்கிரியை செய்யத் தவறுபவர்களுக்கு பித்ரு தோஷம் உடனடியாக வந்து சேரும்
ஈமக்கிரியைகளைச் செய்ய தவறியவர்கள் என்று இறைவன் கணக்கில் எல்லாரும் வரமாட்டார்கள் கீழ்கண்ட வகையில் தவறுபவர்களை மட்டுமே இறைவன் இந்த கணக்கில் கொண்டு வருகிறார்
கூப்பிடும் தூரத்தில் அல்லது வந்து சேரும் அளவு தூரத்தில் வசிக்கும் பிள்ளைகள் ஆண் பெண் இருவரும் வேண்டும் என்றே இறுதிச் சடங்கிற்கு வராமல் இருப்பது
இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள வந்தும் சொத்து சண்டை மற்றும் ஏதேனும் காரணங்களுக்காக ஈமக்கிரியைகளை செய்யாமல் உதாசீனப்படுத்துவது போன்ற செயல்களால் வரும்.
பித்ருதோஷம் என்பது ஒருவர் பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 1, 5, 7, 9 இடங்களில் இராகு / கேது இருந்தால் அந்த ஜாதகம் பித்ருதோஷம் உடைய ஜாதகம், மற்றும் ஜாதகத்தில் சூரியன் / சந்திரன் ராகுவுடனோ / கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்த்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு, மற்றும் 9ம் அதிபதியும் 5ம் அதிபதியும் சோர்ந்து 1/5/9 ம் வீட்டில் இருந்தாலும் தோஷத்தை தரும்.
அதுமட்டுமல்ல தை, மாசி, வைகாசி மாதங்களில் பிறந்த ஆண் பெண் இருபாலரும் முற்பிறவியில் தந்தைக்கு ஈமக்கிரியை செய்யாத்தால் பித்ருதோஷம் பெற்றவர்கள், கார்த்திகை மாதம் பிறந்தவர்கள் முற்பிறவியில் பெற்ற தாய்க்கு ஈமக்கிரியை செய்யாத்தால் பித்ருதோஷம் பெற்றவர்கள் என்றும் சிலர் கூறுகிறார்கள், ஆனால் இது நடைமுறையில் ஒத்துபோகவில்லை.
இந்த பித்ருதோஷம், நாம் முற்பிறவியில் செய்த பாவங்களின் விளைவுகள் இந்த பிறவியின் ஜாதகத்தில் குறிப்பிட்ட இடங்களில் (ராகு, கேது) நிற்கும்போது நம்மைப் பிறக்க வைக்கின்றன.
இந்த பித்ருதோஷம், ஒருவருக்கு கிடைக்க வேண்டிய வேலை, சொந்த தொழில், அரசாங்க வேலையை மற்றும் திருமணத்தை மிகத் தாமதமாக கிடைக்கச் செய்யும்.
பித்ரு தோஷம் உடையவர்கள் எப்பொழுதும் பெற்றோர்கள், மனைவி, குழந்தைகள், உறவினர்கள் இடையே தீராத பிரச்சனைகளை விளைவிக்கும். இந்தப்பிறவியில் கடவுளை கேலி செய்பவர்கள், பிற மதத்தை நிந்தனை செய்பவர்கள் இந்த பித்ருதோஷத்தை அடுத்த பிறவியில் அனுபவிப்பார்கள். பித்ரு தோஷம் நீங்கியப்பிறகுதான் நமக்கும் ஜாதகரீதியாக எல்லா பலன்களும் கிடைக்கும்.
இந்த தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது. அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. கலப்புத் திருமணம் நடக்கவும், பெற்றொருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக நடந்துகொள்வதில்லை.
பித்ரு தோஷம் நீங்க உரிய பரிகாரம்.
பரிகாரம் செய்ய சிறந்த இடம் இராமேஸ்வரம். அங்கு வேதம் அறிந்த பண்டிதர்களால் திலா ஹோமம் செய்ய வேண்டும். காலையில் எள் நீரால் தர்ப்பணத்தை கடற்கரையினில் கொடுத்துவிட்டு பின்னரே திலா ஹோமம் செய்ய வேண்டும். திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இராமேஸ்வரத்தில் தங்க வேண்டும். ஹோமம் முடிந்ததும் புறப்பட்டு அன்றே தமது ஊருக்குப் போகக்கூடாது. சிரத்தையுடனும், முழு மனதுடனும் ஹோமம் செய்ய வேண்டும். திலா ஹோமம் செய்து பிண்டத்தைக் கடல் நீரில் கரைக்கும்போது கருடபகவான் ( இக்காலத்தில் கழுகு) அங்கே அந்த நேரத்தில் வானில் வட்டமிட வேண்டும். அப்படி வட்டமிட்டால் மகாவிஷ்ணுவின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும். இதனை முறைப்படி செய்வதற்க்கு நபர்கள் குறைவு, பணம் மட்டுமே நோக்கமாக செய்யப்படும் ஹோமம் மற்றும் யாகம் சிறந்த பலன்களை தராது.
வைஷ்ணவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் திருப்புல்லாணிக்கரையில் திலா ஹோமம் செய்யலாம். கேரளாவில் திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள பரசுராம க்ஷேத்திரம் என்ற கிராமத்தில் பிண்டம் கொடுத்து பிதுர்சாந்தி எனப்படும் திலா ஹோமம் செய்ய வேண்டும்.
ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம்.
குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்து கொண்டிருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும். அனைவரும் இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்யவேண்டியதில்லை.
துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும்.
இதனை நிவர்த்திக்க இறந்தவர்களின் நினைவு நாளில் அன்னதானம் செய்வதுடன், அதன் புண்ணிய பலன் அனைத்தும் இறந்த நம் முன்னோர்களுக்கே செல்ல வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். அவர்களின் நினைவாக ஆலயங்களில் தீபமேற்றுவது இறந்தவர்களுக்கு மேலும் மேலும் நன்மையைத் தரக் கூடியதாகும்.
இதை செய்ய முடியாதவர்கள்.
பரிகாரம்-1
நூறு கிராம் சந்தனக்கட்டை வாங்கிக் கொண்டு ஏதேனும் சிவன் கோயிலுக்கு சென்று, அங்கு சந்தனத்தை உரசி எடுக்க வேண்டும் உரசி எடுத்த சந்தனத்தை அர்ச்சகரிடம் கொடுத்து சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்ய சொல்ல வேண்டும் இந்த அபிஷேகம் அமாவாசை அன்று செய்ய வேண்டும் அந்த அபிஷேகத்தை பார்த்த நாள் முதல் உங்கள் பித்ருதோஷம் விலகும்.
பரிகாரம்-2
நூறுகிராம் பச்சரிசி, ஒரு கட்டு அகத்திகீரை, 10கிராம் கருப்பு எள், 100 கிராம் வெல்லம், 5 வாழைக்காய் ஆகியவற்றை ஒரு பெரிய தலை வாழ இலையில் வைத்து அமாவாசை தினத்தன்று பசுமாட்டிற்கு கொடுக்க வேண்டும், ( இதை வசிக்கும் வீட்டில் செய்தால் உத்தமம்) வசதியில்லாத வீட்டில் இருப்பவர்கள் பசு இருக்கும் இடத்தில் கொடுக்க வேண்டும். பித்ருதோஷம் நீங்கும் தொடர்ந்து ஒன்பது அமாவாசைக்கு தொடர்ந்து பரிகாரத்தை செய்ய வேண்டும் இதனால் பித்ரு தோஷம் முழுமையாக நீங்கும்
கேரளாவில் பித்ரு தோஷம் நீங்கிட பசுவுக்கு அவரவர் ஜன்ம நட்சத்திரத்தன்று பருத்திக்கொட்டையில் பால் எடுத்து வெல்லம் கலந்து பித்ருக்களை வேண்டி உண்பதற்குக் கொடுத்துவருகின்றனர். (நாமும் இப்படிச் செய்யலாம்)
தோஷத்தில் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம்.
இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிர்ஷ்ட்டமான (யோகம்) கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும், பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள்.
பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியுடையது.
சிலர் ஏராளமான பரிகாரங்கள் தானங்கள் செய்தும் துன்பத்திலிருந்து விடுபடுவதில்லை. தொடர்ந்து கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். இதற்கான காரணங்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்று செய்ய வேண்டிய தர்ப்பணம் சிரார்த்தம் போன்ற பித்ருக்களுக்கான கடமைகளை செய்யாமல் இருத்தல் அல்லது சிரத்தை ( கவனம்) குறைவுடன் செய்தல் காரணமாகும்.
பித்ரு பூஜை வழிபாடு செய்யாமல், நீங்கள் என்னதான் கோவில், கோவிலாக அலைந்து பரிகார பூஜைகள் செய்தாலும் நிச்சயமாக பலன்கள் கிடைக்கப்போவதில்லை.
ஜாதகத்தையும், நவகிரகத்தையும் நம்பி பலவித வழிபாடுகளை - பரிகாரங்களை செய்பவர்கள் தான் செய்ய வேண்டிய பித்ரு கடமையில் அவ்வளவாக ஈடுபாடு காட்டுவதில்லை. இதனால்தான் தொடர்ந்து கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள்.
முறையாக பித்ரு பூஜை செய்தால், ஜாகத்தில் உள்ள தோஷங்கள் எல்லாம் நிச்சயம் அகன்று விடும்.

வியாழன், 3 மார்ச், 2016

கோயில்களில் நம் செய்யும் பரிகாரமும், முன்னோர்கள் கூறியதும்

கோயில்களில் நம் செய்யும் பரிகாரமும், முன்னோர்கள் கூறியதும்.
கோயில்களில் நம் முன்னோர்கள் கூறிய பரிகார முறைகள் அடிப்பிரதட்சனம், அங்கப்பிரதட்சனம், வெற்றிலை மாலை, ஸ்ரீ ராம ஜெய மாலை, விளக்குகள் ஏற்றுவதால் போன்ற பல பரிகார முறைகளின் காரணம் ஏன் என்று தெரியாமல் நம் செய்கின்றோம்.
அதன் காரணம் ஒவ்வொரு கோயிலுக்கும் தனித்தனி சக்திகள் ( different COSMIC ENERGY) உள்ளன. அதனால் தான் ஒரே தெய்வத்திற்கு பல பெயர்களில் பல கோயில்கள் உள்ளது. அந்த கதிர்வீச்சுகளை (சக்திகளை) மனிதர்கள் பெறவே இம்மாதிரியான பரிகாரங்கள் செய்யவேண்டும் என்றனர்.
நம் உடலுக்கு தேவையான சக்திகளை பெறவேண்டும் என்பதற்காகவே (வெகு நேரம்) கூறினார்கள். ஆலயத்திற்கு சென்றால் சற்று நேரமாவது அமர்ந்து விட்டு வரவேண்டும், மற்றும் திருமணம், குழந்தை பிறப்பு போன்ற நேரத்தில் ஒரு இரவு தங்கி வரவேண்டும் என்றார்கள்.
அனால் நாம் இப்போது செய்து என்ன சிறப்பு தரிசனம், VIP தரிசனத்தில் வெளியே கடையில் விற்கும் பூ மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, அகல் விளக்குகள், போன்றவற்றை வாங்கி கெடுத்துவிட்டு வந்துவிடுகிறேம் இதில் என்ன கிடைக்கும்,
இந்த கலியுகத்தில் நாம் தெரிந்து செய்யும் பாவம் அதிகம் அதைவிட தெரியாமல் செய்யும் பாவம் மிக அதிகம். (அசைவம், பொய், மது, மாது சூது போன்ற பல)
இப்படி இருக்க கற்று போல் கோயிலுக்கு சென்று வந்து என் கஷ்டங்கள் பிரச்சனைகள் தீரவில்லை என்பார்கள்.
முன்னோர்கள் கூறியபடி வழிபடுவதே இல்லை,
அப்படி வழிபட்டால் கஷ்டங்களை தீர்த்துக்கொள்ள முடியும்.

வெற்றிலை மாலை

வெற்றிலை மாலை.
சீதாதேவி அசோகவனத்தினில் சிறைபட்டிருந்த சமயம் ஸ்ரீ ஆஞ்சநேயர் அங்கு சென்று சீதையை வணங்கி, தான் ராமதூதன் என்பதை நிரூபித்து சூடாமனியினைப் பெற்றுக் கொண்டு ராமனிடம் திரும்ப எண்ணி சீதா தேவியிடம் ஆசிர்வாதங்களை வேண்டி நின்றான்.
அச்சமயம் சீதை தன் அருகில் இருந்த வெற்றிலைக் கொடியிருந்து, வெற்றிலைகளைக் கிள்ளி ஆசீர்வாதங்களை அருளினாள். ஆதலால் ஹனுமாருக்கு வெற்றிலை மாலை அணிவித்தால் ஸ்ரீமகாலஷ்மியின் ஸ்வரூபமான சீதையின் ஆசிர்வாதங்களால் நாம் பிராத்திப்பவைகள் எல்லாம் லஷ்மிகரமாக நிறைவேறும் என்பது திண்ணம்.
ஆனால் அதை நாம் செய்யும் முறையை தெரிந்துகொள்ள வேண்டும்.
கடைகளில் விற்கும் மாலைகளை வாங்கி இறைவனுக்கு சாற்றுவதில் எந்த பயனும் இல்லை.
நம் முன்னோர்கள் கூறிய காரணம் வேறு, நம் வெற்றிலைகளை வாங்கி கோயிலில் உள்ளே சென்று அமர்ந்து ஏதேனும் மந்திரம் சொல்லிக்கொண்டே வெற்றிலையை நம் கையாலேயே கட்டி சற்றும் போது கிடைக்கும் பலன் சொல்லில் அடங்காத, இங்கே நம் கோயிலில் இருக்கும் நேரம் அதிகமாகும், அங்கு இருக்ககூடிய சக்திகளை நம்மால் முழுமையாக பெறமுடியும். இதே காரணத்தினால் தான் ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவது, அங்க பிரதட்சணம், அடிப்பிரதட்சனம் ஆகியவைகள் செய்யா நம் முன்னோர்கள் கூறினார்கள்.

யோக நரசிம்மர் திருக்கோயில்

அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோயில்.
தொன்மையான குடைவரைக் கோவில். இக்கோவில் மதுரைப் பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையன் (கி.பி. 8ஆம் நூற்றாண்டு) காலத்தில் அவரது அமைச்சரான மதுரகவி என்ற மாறன் காரி என்பவரால் கி.பி. 770இல் உருவாக்கப்பட்டது. மாறங்காரியின் சகோதரர் மாறன் எயினன் இக்கோவிலுக்கு ஒரு முகமண்டபத்தைக் கட்டினார்.
கருவறையிலுள்ள நரசிங்கப் பெருமாளின் பெரிய (ஆறரை அடி உயரமுள்ள )திருவுருவம் ஆனைமலையின் பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டதாகும்.
இக்கோயிலின் மூலவராக யோக நரசிம்மர் மார்பில் மகாலட்சுமியுடன் மேற்கு பார்த்தும், நரசிங்கவல்லிதாயார் தெற்கு பார்த்தும் அமர்ந்துள்ளனர். கோயிலில் ஸ்ரீநரசிங்கவல்லித் தாயாரின் சன்னதி தனியாக உள்ளது. யோக நரசிம்மர் கோயிலின் முகப்பில் அழகான குளம் அமைந்துள்ளது. இது, நரசிம்மர் தலங்களில் மிகப்பெரிய உருவம் உடைய கோயிலாகும். இக்கோயிலை ஒட்டியுள்ள மலையில் சமணர் படுகைகள் அமைந்துள்ளது.
இங்கு
மூலவர் -- யோக நரசிம்மர்
தாயார் -- நரசிங்கவல்லி
முகவரி அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோயில்,
யானைமலை, ஒத்தக்கடை - மதுரை மாவட்டம்.
கோயில் சிறப்பு
ரோமச முனிவர் தனக்கு புத்திர பாக்கியம் வேண்டி இங்கு வந்து சக்கர தீர்த்தத்தில் நீராடி யாகத்தை தொடங்கினார். அப்போது நரசிம்ம மூர்த்தியை அவரது அவதார காலத்தில் எப்படி இருந்தாரோ அதே போல் தரிசிக்க ஆசைப்பட்டார். இவரது ஆசையை நிறைவேற்ற பெருமாள் உக்கிர நரசிம்மராக காட்சி தந்தார். உக்கிர கோல வெப்பத்தால் உலகே தத்தளித்தது. தேவர்களும், முனிவர்களும் பயந்து நரசிம்மரின் உக்கிரத்தை தணிக்க வர வேண்டுமென பிரகலாதனிடம் கேட்டுக் கொண்டனர்.பிரகலாதனும் இத்தலத்துக்கு வந்தான். அப்போது. நரசிம்மரின் உக்கிரம் குறைந்ததே தவிர முற்றிலுமாக நீங்கவில்லை. எனவே மகாலட்சுமியிடம் விஷயத்தை கூறினர் தேவர்கள்.உலகைக் காக்கும் அந்தத் தாயார் வந்ததுமே, உக்கிர நரசிம்மரின் கோபம் தணிந்தது. அத்துடன் அவளை ஆலிங்கனம் செய்து யோகநரசிம்மராக கேட்டதையெல்லாம் தருபவராக அருள்பாலித்து வருகிறார்.
இந்த கோயிலில் கொடி மரம் கிடையாது, ஏனெனில் கொடிமரம் என்பது, கருவறைக்கு மேலுள்ள விமானத்தின் நீள அகல அளவைப்பொறுத்தே அமையும். இத்தலத்தில் கருவறைக்கு மேல் யானைமலை மிகவும் உயர்த்து இருப்பதால் கொடிமரம் வைக்கவில்லை என கூறப்படுகிறது.
நீங்கள் சிவாலயங்களில் பிரதோஷ பூஜை செய்திருப்பீர்கள் ஆனால், விஷ்ணு கோயிலான இங்கும் மிகச்சிறப்பாக பிரதோஷ பூஜை நடத்தப்படுகிறது.
நரசிம்மர் அவதாரம் எடுத்தது தேய்பிறை சதுர்த்தி பிரதோஷ காலத்தில் தான். எனவே, அந்த நேரத்தில் இந்த யோக நரசிம்மரை வழிபட்டால் கல்வி சிறக்கும், வியாபாரம் விருத்தியாகும், எதிாி பயம் இருக்காது, மரணபயம் நீங்கம்.
தாயார் நரசிங்கவல்லியை இந்நேரத்தில் வேண்டினால் ( கழுத்தில் உள்ள தாலியை தரிசித்து) திருமணத்தடை நீங்கும். கோபக்கார கணவன் இங்கு வழிபட்டால் மனைவியை நெஞ்சில் தாங்கும் சாந்த சொரூபியாகி விடுவார் என்பது நம்பிக்கை.
SRJ Astrology, Numerology, Gemology, Vastu Shastra's photo.