செவ்வாய், 27 மார்ச், 2018

சுபமுகூர்த்தம்

திருமண சுபமுகூர்த்தம்.

திருமணத்திற்கு ஒரு ஆணும் பெண்ணும் எப்படி அவசியமோ, அதே போலத் தான் முகூர்த்த நாள் குறிப்பதும். முகூர்த்தம் என்பது மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேர அளவுள்ள காலமாகும்).
முகூர்த்தம் என்றால் நேரம் என்று பொருள், சுப முகூர்த்த என்றால் மட்டுமே நல்ல நேரம் என்று பொருள்.
திருமணம் செய்ய சுபமுகூர்த்தம் பார்ப்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம்.

இன்று திருமண வாழ்வில் பல இன்னல்களும், பிரிவுகளும் வர காரணம் சுப முகூர்த்த நாட்களில் திருமணம் நடைபெறததே முக்கிய காரணம்.
சாதாரண காலண்டரில் முகூர்த்த நாள் பார்த்து அல்லது திருமண மண்டபத்தில் காலியாக உள்ள நாட்களில் திருமணம் நடைபெறுகிறது.

சுப முகூர்த்த என்றால் என்னென்ன பார்க்க வேண்டும் என்று பார்க்கலாம்.
முதலில் திருமணம் செய்ய என்னென்ன பார்க்க வேண்டும் என்றால் ஆண் பெண் இருவருக்கும் இடையே நட்சத்திர பொருத்தம் இருக்க வேண்டும், இன்று பலர் இதை மட்டுமே பார்த்து திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். திருமண வாழ்க்கையில் பல பிரச்னைகளுக்கு இதுவும் ஒரு காரணம்.

அடுத்த திருமணம் செய்யும் மணமக்களின் நட்சத்திர பொருத்தம் மட்டுமல்ல. இருவருக்கும் ஜாதக பொருத்தமும் பார்க்க வேண்டும், ராசி பொருத்தம், லக்ன பொருத்தம், 2,7,8,12 ஆம் இட பொருத்தம் பார்க்க வேண்டும். இருவரது ராசியும் ஒருவருக்கொருவர் 6,8,12 ஆக கூடாது. இருவரது லக்னமும் ஒருவருக்கொருவர் 6,8,12 ஆக கூடாது. இருவரது குருவும், சுக்கிரனும் மறைய கூடாது கெடக்கூடாது. அப்போதுதான் இருவருக்கும் ஒற்றுமையும், அன்பும், பாசமும் பலமாகும். இருவருக்கும் ஒரே திசா / புக்தி நடக்க கூடாது.

அடுத்து திருமணம் நாள் தேர்ந்து எடுப்பது, ஜாதகத்தில் சில பொருத்தங்கள் ஒத்து வரவில்லை என்றாலும் மாங்கல்யம் ஏறும் நாள் நேரம் மிக சிறப்பாக அமைந்தால் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அதற்காக தான் நல்லநாள் பார்த்து செய்ய வேண்டும் என்பது.

முதலில் வருடம் - குருபகவான் அவரவர் ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ம் இடங்களில் பிரவேசம் செய்யும் போது குரு பலம் ஏற்படும். இருவருக்கும் குருபலம் இருந்தால் நல்லது. அல்லது மணப்பெண்ணுக்காவது குருபலம் இருக்க வேண்டும்.

அடுத்து மாதம் - வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மற்றும் மாசி, மாதங்ளைத் தேர்வு செய்து இவைகளில் மலமாதம் இல்லாத மாதத்தைத் தேர்வு செய்ய வேண்டும். (இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருமேயானால் அதற்கு மலமாதம் என்று பெயர்).
இயன்றவரை வளர்பிறை காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது.

அடுத்தது நட்சத்திரம் - ரோகிணி, மிருகசிரீடம், மகம், உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், உத்திரட்டாதி, ரேவதி ஆகியவை மிக உத்தமம்.
அசுவினி, புனர்பூசம், பூசம், சித்திரை, திருவோணம், அவிட்டம், சதயம் ஆகிய நட்சத்திரங்களிலும் செய்யலாம்.

அடுத்து கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளிக்கிழமை உத்தமம்.

அடுத்து திதி - வளர்பிறையின் துவிதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி, தசமி மற்றும் திரயோதசி சிறப்பானவை.

இருவர் நட்சத்திரத்திற்கும் தாராபலம் ஏற்றார்போல் உள்ள நாட்கள்.
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி. தாரா பலன் பார்த்துதான் முகூர்த்த நாளை குறிக்க வேண்டும் எல்லா முகூர்த்தமும் எல்லோருக்கும் ஏற்றது அல்ல.

அன்றைக்கு சந்திரன் ஐன்ம ராசிக்கு 1, 3, 6, 7, 10, 11 ராசிகளில் இருப்பது.
திருமணநாள் மணமக்களின் ஜென்ம நட்சத்திரமாகவோ, ஜென்ம கிழமையாகவோ அமையாமல் இருப்பது மிக நல்லது.
கரிநாள், மரணயோகம், இவைகள் ஆகாது.
கரணங்களில் அசுப கரணங்களை ஒதுக்கவேண்டும். சித்தயோகத்தை மாங்கல்ய தாரணத்திற்கும் அமிர்தயோகத்தை சாந்தி முகூர்த்தத்திற்க்கும் தேர்வு செய்தல் வேண்டும்.

பஞ்சகம்” என்ற முறையில் நல்ல நாளை தேர்வு செய்ய வேண்டும். (சுப கார்யம் செய்யத் தேர்ந்தெடுத்த நாளின் திதி, வாரம் (கிழமை), நட்சத்திரம், தேர்ந்தெடுத்த லக்கினம், லக்ன துருவ எண், இவற்றைக் கூட்டி ஒன்பதால் வகுத்து வரும் மீதி 0, 3, 5, 7, 9 ஆகில் உத்தம பஞ்சகம். பிரதமை -1, துதிதியை - 2 என்று கணக்கிடவேண்டும். அதுபோல் அஸ்வினி -1, பரணி - 2 என வரிசை எண்ணையே அந்த நட்சத்திரத்தின் எண்ணாகக் கொள்ளவேண்டும். அதுபோல் ஞாயிறு -1, திங்கள்-2, செவ்-3 என்று கிழமைக்கும், மேஷம் -1, ரிஷபம்-2 ... மீனம் -12 என இலக்னங்களுக்கும் எண் தெரிந்துகொள்ளவேண்டும். இது தவிர லக்ன துருவம் (4 இலக்னங்களுக்கு மட்டும்) மேஷம் - 5, ரிஷபம் - 7, மகரம் -2, கும்பம் - 4, மீனம் -6 இவற்றையும் கூட்டிப் பின் 9 ஆல் வகுக்க வேண்டும். 0,3,5,7,9 ஆகியவை நிஷ் பஞ்சகம் உத்தமம் என்றும் மற்ற 1, 2, 4, 6, 8 ஆகிய கூடாது.

அடுத்து திருமணம் நேரம்(சுபமுகூர்த்த) தேர்ந்து எடுப்பது,
முகூர்த்த லக்னம் - ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் உத்தமம்,
முகூர்த்த லக்னத்திற்க்கு ஏழாமிடம், எட்டாம் இடம் சுத்தமாக இருக்க வேண்டும்.

இராகு காலம், குளிகை காலம் மற்றும் எமகண்டம் போன்ற நேரங்களை ஒதுக்க வேண்டும். க் கூட தவிர்ப்பது சிறந்தது.
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதியில் திருமணம் செய்ய கூடாது.

சாந்தி முகூர்த்தம் நேரம் மிக முக்கியம். திருமணம் நடக்கும் நாள் முகூர்த்த நாளாக இருப்பதால் அன்றே வைப்பதும் நல்லதுதான். வேறு நாளில் வைப்பதாக இருப்பின் ஒரு லக்னம் குறித்துதான் நேரம் வைக்க வேண்டும், அந்த லக்னத்துக்கு 1,7,8ஆம் இடம் சுத்தம். ஜென்ம நட்சத்திரம் அன்று ஆகாது. எமகண்டம்,ராகுகாலம் ஆகாது, இரவிலும் எமகண்டம் உண்டு. அதை கவனித்து நேரம் குறிக்க வேண்டும். முதல்முறை நல்ல நேரத்தில் தாம்பத்யம் கொள்வதே நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக