ஞாயிறு, 11 மார்ச், 2018

பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு - பகுதி - 9

பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு.


பகுதி - 9 எந்த லக்னத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் லக்னத்திற்கு ஒன்பதாமிடத்தில் கேது இருந்தால்.
செவ்வாய்க்கிழமை நாளில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, செவ்வரளி மலர் சாற்றி, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, வேக வைத்த கொள்ளும் சர்க்கரையும் கலந்து செய்த உருண்டை படையலிட்டு, கொள்ளு பொடி கலந்த சாதம், விளாம்பழம் படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு குறைந்தது 10 பேருக்காவது தானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை பைரவர் நீக்கி நலம் புரிவார்.
பித்ரு தோஷம் நிவர்த்தியடைந்து விட்டால் மட்டும் போதாது. பித்ரு தோஷத்திற்கு வழி தரும் செயல்களை செய்யகூடாது, முன்னோர்களை நிந்தனை செய்வதை நிறுத்திவிட வேண்டும்.
இந்த தோஷப் பரிகாரங்களை சிவாலயத்தில் விளங்கும் பைரவர் சன்னதியில் செய்யலாம்.

 .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக