பஞ்ச பட்சி சாஸ்திரம்.
பகுதி - 1
சிவபெருமான் இந்த பஞ்ச பட்சி சாஸ்திரத்தை முதலில் தன் குமரனான முருகப்பெருமானுக்கு அசுரர்களை அழிக்கும் பொருட்டு உபதேசித்தார் எனவும், முருகன் அதை அகத்தியருக்கு உபதேசித்தார் எனவும், அகத்தியர் பதினென் சித்தர்களுக்கு உபதேசித்தார் எனவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது”. (அண்டம் = உலகம்) (பிண்டம் = உடல்) பஞ்ச பூதங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன. அதே போல் மனித உடலிலும் பஞ்ச பூதங்கள் உள்ளது.
ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனுக்கு உடல் காரகன், மனோக்காரகன் என்று பெயர் உண்டு, மனித உடலிலும், மனதிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு சந்திரனின் சுழற்சியே காரணம் என்பதை சித்தர்கள் கண்டறிந்தார்கள். மனிதர்களின் உடற்கூறு அவர்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு தகுந்தாற்போல் அமைந்தூள்ளது என்பதையும் கண்டறிந்தார்கள். உடலை இயக்குவது மின் காந்த ஆற்றலாகும். அந்த மின் காந்த ஆற்றாலானது சந்திரனினின் சுழற்சிக்கு தகுந்தார்போல் சில நேரங்களில் வலிமையடைவதையும், சில நேரங்களில் வலுவிழந்துபோவதையும் கண்டறிந்தார்கள். ( அமாவாசை மற்றும் பெளர்ணமி அன்று சில மன நோயாளிகள் மனநிலை மாறுவது, கடல் சீற்றம் அடைதல்)
உடலில் மின் காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும்போது, உடல் வலிமை,மனவலிமை கூடுவதையும், எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறுவதையும்,
உடலில் மின் காந்த ஆற்றல் வலிமை குன்றியிருக்கும்போது, உடல் வலிமை, மனவலிமை குறைவதையும்,எண்ணிய எண்ணங்கள் நடைபெறாமல் தடைபடுவதையும் கண்டறிந்தார்கள்.
உடலில் ஏற்படும் இத்தகை மாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட கால சுழற்சியில் இயங்குகிறது என்பதையும், அந்த
கால சுழற்சிக்குத்தகுந்தார் போல் செயல்பட்டால் வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றி நடை போடலாம் என்பதையும் மானிடர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு அதை பஞ்ச பட்சி சாஸ்திரம் என்னும் தலைப்பில் உலகுக்கு வெளிப்படுத்தினார்கள்.
“பஞ்ச”என்றால் “ஐந்து”
“பட்சி” என்றால் “பறவை”
ஐந்து பறவைகள் வைத்து கணக்கிடப்பட்டது ( பஞ்ச பூதங்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்).
மனிதனுடைய எல்லா செயல்களையும் செய்ய வைப்பதும், கட்டுப்படுத்துவதும் ஐந்து பறவைகள் என நம்பப்படுகிறது. இந்த ஐந்து வகையான சக்திகள் சுக்லபட்சம் கிருஷ்ணபட்சம், பகல் இரவு என மாறி மாறி செயல்களை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு நாளும் முதலில் உதிக்கின்ற சக்தியும் பின்னர் வருகின்ற சக்தி வாரத்தையும், பட்சத்தையும் சார்ந்துள்ளது.
பிறந்த (ஜென்ம) நட்சத்திரத்தையும், பிறந்த நேரத்தின் பட்சத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொருவருக்கும் பஞ்ச பட்சியில் ஒன்று முக்கிய பட்சியாக (ஜென்ம பட்சி) அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்சிகள் மொத்தம் ஐந்து.
அவை முறையே
வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்.
ஒருவர் தொழில் நிமித்தமாகவோ வேறு எதற்காகவேனும் தங்களுடைய பட்சியின் நிலையறிந்து செயல்பட்டால் அதில் வெற்றி நிச்சயம் பெறலாம். இதுவே பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் அடிப்படை தத்துவமாகும்.
இந்த பட்சிகளின் தொழில்கள்
ஆட்சி, ஊண், நடை, துயில், சாவு என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலைகளில் பட்சிகளின் பலம் கீழ் கண்டவாறு இருக்கும் என்று சொல்லலாம்.
ஆட்சி - 100% பலம்
ஊண் - 80% "
நடை - 50% "
துயில் - 25% "
சாவு - 0% "
ஒவ்வொரு பட்சிக்கு சுக்லபட்சம்/ கிருஷ்ணபட்சம், பகல்/இரவு என நேரம் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு அந்த நேரத்தில் எந்த நிலையில் இருக்கிறது என்று சொல்லப் பட்டிருக்கிறது.
எந்த பறவை எந்த நாளில் எந்த நேரத்தில் என்ன தொழில் செய்யும் என்று பார்ப்போம்.
ஒரு நாளில் மொத்தம் 24 மணி = 60 நாளிகை. பகல் = 30 நாளிகை, இரவு = 30 நாளிகை. அது ஐந்து பறவைகளுக்கும் ஐந்து பிரிவாக பிரிக்கப்பட்டு பகல் (அல்லது இரவில்) தன் தொழிலைச் செய்ய ஒவ்வொரு பறவையும் 6 நாழிகைகள் எடுத்துக் கொள்ளும். 6 நாழிகைகள் என்பது 2 மணி 24 நிமிடங்கள். முதல் 6 நாழிகை ஊண் என்றால் அடுத்த 6 நாழிகை நடை அல்லது வேறு ஒரு தொழில் என்று வரும்.
இந்த 6 நாழிகையை 5 உட்பிரிவாக பிரிந்து ஐந்து பட்சிகளும் தங்கள் தொழிலை செய்யும் இதை அபஹாரம் எனப்படும்.
இது தவிர இந்த பட்சிகளுக்கு மிகவும் பலவீனமான நாட்கள் (செயல் இழந்து விடும் நாட்கள் - Death Days) என்று இருக்கிறது. இவை படுபட்சி நாட்கள் அல்லது மரண நாட்கள் எனப்படும். இந்த நாட்களில் எந்த முக்கியமான வேலை, புது முயற்சி, சுப காரியம், பிரயாணம், அறுவை சிகிச்சை, மருத்துவ சிகிச்சை இவை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. இவை பகல், இரவு இரண்டு வேளைகளுக்கும் பொருந்தும்.
அடுத்து இந்த பட்சிகளுக்கு ஆட்சி நாட்கள் (Ruling Days) என்று இருக்கின்றன. அந்த நாட்களில் அந்த பட்சி பலமாக இருக்கும். முன்பு சொன்ன படு பட்சி நாட்களுக்கு நேர் எதிரானது. மேலே விலக்கச் சொன்ன எல்லாக் காரியங்களையும் மேற்கொள்ள ஏதுவான (சிறந்த) நாள். இவை படு பட்சி நாட்கள் போல் இல்லாமல் பகல் இரவு இரு வேளைகளுக்கும் வெவ்வேறாக இருக்கும்.
பின் பட்சிகளில் சந்துரு / மித்துருக்கள் (நட்பு /பகை ) உண்டு.
ஒரு முக்கியமான காரியம் செய்வதற்கு ஏற்ற நல்ல நேரம் கண்டுபிடப்பதற்கு முதலாவது பஞ்சாங்கத்திலோ, காலண்டரிலோ பார்த்து விருப்பமுள்ள நாளின் வாரத்தையும், திதியையும் குறித்து கொண்டு, விரும்புகின்ற நாளின் பொழுது (இரவு அல்லது பகல்) ஜென்ம பட்சியின் ஆட்சி அல்லது ஊண் என்ற நாள் மிக நல்லது. துயில் அல்லது சாவு என்ற நாள் மிக தோஷகாரமானது. இதே போல் நேரத்தை உட் பிரிவை வைத்து (அபஹாரம்) தேர்வு செய்ய வேண்டும்.
ஒருவரின் நட்சத்திரத்தின் மூலம் பட்சியை நிர்ணயிக்கலாம். இது நட்சத்திரப் பட்சி எனப்படும். (இதில் பலரும் பட்சம் பாகுபாடு இல்லாமல் கூறுகிறார் இது தவறு, உதாரணமாக அஸ்வினி வல்லூறு என்று)
சுக்லபட்சம் (வளர்பிறையில்) அஸ்வினி என்றால் மட்டுமே வல்லூறு,
கிருஷ்ணபட்சம் (தேய்பிறையில்) அஸ்வினி என்றால் மயில் தான் ஜென்ம பட்சி ஆகும். (சுக்லபட்சம் (வளர்பிறை) பிரதமை முதல் பெளர்ணமி வரை, கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) பிரதமை முதல் அமாவாசை வரை).
நட்சத்திரம் தெரியாதவர்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தங்களுடைய பட்சிகளை முடிவு செய்யலாம். இவை அட்சரப் பட்சிகள் எனப்படும்.
வளர்பிறை (சுக்லபட்சம்)
அ, ஆ - வல்லூறு
இ, ஈ - ஆந்தை
உ, ஊ - காகம்
எ, ஏ - கோழி
ஒ, ஓ - மயில்
தேய்பிறை (கிருஷ்ணபட்சம்)
அ, ஆ - கோழி
இ, ஈ - வல்லூறு
உ, ஊ - ஆந்தை
எ, ஏ - மயில்
ஒ, ஓ - காகம்
- - -தொடரும்....
பகுதி - 1
சிவபெருமான் இந்த பஞ்ச பட்சி சாஸ்திரத்தை முதலில் தன் குமரனான முருகப்பெருமானுக்கு அசுரர்களை அழிக்கும் பொருட்டு உபதேசித்தார் எனவும், முருகன் அதை அகத்தியருக்கு உபதேசித்தார் எனவும், அகத்தியர் பதினென் சித்தர்களுக்கு உபதேசித்தார் எனவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது”. (அண்டம் = உலகம்) (பிண்டம் = உடல்) பஞ்ச பூதங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன. அதே போல் மனித உடலிலும் பஞ்ச பூதங்கள் உள்ளது.
ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனுக்கு உடல் காரகன், மனோக்காரகன் என்று பெயர் உண்டு, மனித உடலிலும், மனதிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு சந்திரனின் சுழற்சியே காரணம் என்பதை சித்தர்கள் கண்டறிந்தார்கள். மனிதர்களின் உடற்கூறு அவர்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு தகுந்தாற்போல் அமைந்தூள்ளது என்பதையும் கண்டறிந்தார்கள். உடலை இயக்குவது மின் காந்த ஆற்றலாகும். அந்த மின் காந்த ஆற்றாலானது சந்திரனினின் சுழற்சிக்கு தகுந்தார்போல் சில நேரங்களில் வலிமையடைவதையும், சில நேரங்களில் வலுவிழந்துபோவதையும் கண்டறிந்தார்கள். ( அமாவாசை மற்றும் பெளர்ணமி அன்று சில மன நோயாளிகள் மனநிலை மாறுவது, கடல் சீற்றம் அடைதல்)
உடலில் மின் காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும்போது, உடல் வலிமை,மனவலிமை கூடுவதையும், எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறுவதையும்,
உடலில் மின் காந்த ஆற்றல் வலிமை குன்றியிருக்கும்போது, உடல் வலிமை, மனவலிமை குறைவதையும்,எண்ணிய எண்ணங்கள் நடைபெறாமல் தடைபடுவதையும் கண்டறிந்தார்கள்.
உடலில் ஏற்படும் இத்தகை மாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட கால சுழற்சியில் இயங்குகிறது என்பதையும், அந்த
கால சுழற்சிக்குத்தகுந்தார் போல் செயல்பட்டால் வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றி நடை போடலாம் என்பதையும் மானிடர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு அதை பஞ்ச பட்சி சாஸ்திரம் என்னும் தலைப்பில் உலகுக்கு வெளிப்படுத்தினார்கள்.
“பஞ்ச”என்றால் “ஐந்து”
“பட்சி” என்றால் “பறவை”
ஐந்து பறவைகள் வைத்து கணக்கிடப்பட்டது ( பஞ்ச பூதங்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்).
மனிதனுடைய எல்லா செயல்களையும் செய்ய வைப்பதும், கட்டுப்படுத்துவதும் ஐந்து பறவைகள் என நம்பப்படுகிறது. இந்த ஐந்து வகையான சக்திகள் சுக்லபட்சம் கிருஷ்ணபட்சம், பகல் இரவு என மாறி மாறி செயல்களை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு நாளும் முதலில் உதிக்கின்ற சக்தியும் பின்னர் வருகின்ற சக்தி வாரத்தையும், பட்சத்தையும் சார்ந்துள்ளது.
பிறந்த (ஜென்ம) நட்சத்திரத்தையும், பிறந்த நேரத்தின் பட்சத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொருவருக்கும் பஞ்ச பட்சியில் ஒன்று முக்கிய பட்சியாக (ஜென்ம பட்சி) அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்சிகள் மொத்தம் ஐந்து.
அவை முறையே
வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்.
ஒருவர் தொழில் நிமித்தமாகவோ வேறு எதற்காகவேனும் தங்களுடைய பட்சியின் நிலையறிந்து செயல்பட்டால் அதில் வெற்றி நிச்சயம் பெறலாம். இதுவே பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் அடிப்படை தத்துவமாகும்.
இந்த பட்சிகளின் தொழில்கள்
ஆட்சி, ஊண், நடை, துயில், சாவு என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலைகளில் பட்சிகளின் பலம் கீழ் கண்டவாறு இருக்கும் என்று சொல்லலாம்.
ஆட்சி - 100% பலம்
ஊண் - 80% "
நடை - 50% "
துயில் - 25% "
சாவு - 0% "
ஒவ்வொரு பட்சிக்கு சுக்லபட்சம்/ கிருஷ்ணபட்சம், பகல்/இரவு என நேரம் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு அந்த நேரத்தில் எந்த நிலையில் இருக்கிறது என்று சொல்லப் பட்டிருக்கிறது.
எந்த பறவை எந்த நாளில் எந்த நேரத்தில் என்ன தொழில் செய்யும் என்று பார்ப்போம்.
ஒரு நாளில் மொத்தம் 24 மணி = 60 நாளிகை. பகல் = 30 நாளிகை, இரவு = 30 நாளிகை. அது ஐந்து பறவைகளுக்கும் ஐந்து பிரிவாக பிரிக்கப்பட்டு பகல் (அல்லது இரவில்) தன் தொழிலைச் செய்ய ஒவ்வொரு பறவையும் 6 நாழிகைகள் எடுத்துக் கொள்ளும். 6 நாழிகைகள் என்பது 2 மணி 24 நிமிடங்கள். முதல் 6 நாழிகை ஊண் என்றால் அடுத்த 6 நாழிகை நடை அல்லது வேறு ஒரு தொழில் என்று வரும்.
இந்த 6 நாழிகையை 5 உட்பிரிவாக பிரிந்து ஐந்து பட்சிகளும் தங்கள் தொழிலை செய்யும் இதை அபஹாரம் எனப்படும்.
இது தவிர இந்த பட்சிகளுக்கு மிகவும் பலவீனமான நாட்கள் (செயல் இழந்து விடும் நாட்கள் - Death Days) என்று இருக்கிறது. இவை படுபட்சி நாட்கள் அல்லது மரண நாட்கள் எனப்படும். இந்த நாட்களில் எந்த முக்கியமான வேலை, புது முயற்சி, சுப காரியம், பிரயாணம், அறுவை சிகிச்சை, மருத்துவ சிகிச்சை இவை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. இவை பகல், இரவு இரண்டு வேளைகளுக்கும் பொருந்தும்.
அடுத்து இந்த பட்சிகளுக்கு ஆட்சி நாட்கள் (Ruling Days) என்று இருக்கின்றன. அந்த நாட்களில் அந்த பட்சி பலமாக இருக்கும். முன்பு சொன்ன படு பட்சி நாட்களுக்கு நேர் எதிரானது. மேலே விலக்கச் சொன்ன எல்லாக் காரியங்களையும் மேற்கொள்ள ஏதுவான (சிறந்த) நாள். இவை படு பட்சி நாட்கள் போல் இல்லாமல் பகல் இரவு இரு வேளைகளுக்கும் வெவ்வேறாக இருக்கும்.
பின் பட்சிகளில் சந்துரு / மித்துருக்கள் (நட்பு /பகை ) உண்டு.
ஒரு முக்கியமான காரியம் செய்வதற்கு ஏற்ற நல்ல நேரம் கண்டுபிடப்பதற்கு முதலாவது பஞ்சாங்கத்திலோ, காலண்டரிலோ பார்த்து விருப்பமுள்ள நாளின் வாரத்தையும், திதியையும் குறித்து கொண்டு, விரும்புகின்ற நாளின் பொழுது (இரவு அல்லது பகல்) ஜென்ம பட்சியின் ஆட்சி அல்லது ஊண் என்ற நாள் மிக நல்லது. துயில் அல்லது சாவு என்ற நாள் மிக தோஷகாரமானது. இதே போல் நேரத்தை உட் பிரிவை வைத்து (அபஹாரம்) தேர்வு செய்ய வேண்டும்.
ஒருவரின் நட்சத்திரத்தின் மூலம் பட்சியை நிர்ணயிக்கலாம். இது நட்சத்திரப் பட்சி எனப்படும். (இதில் பலரும் பட்சம் பாகுபாடு இல்லாமல் கூறுகிறார் இது தவறு, உதாரணமாக அஸ்வினி வல்லூறு என்று)
சுக்லபட்சம் (வளர்பிறையில்) அஸ்வினி என்றால் மட்டுமே வல்லூறு,
கிருஷ்ணபட்சம் (தேய்பிறையில்) அஸ்வினி என்றால் மயில் தான் ஜென்ம பட்சி ஆகும். (சுக்லபட்சம் (வளர்பிறை) பிரதமை முதல் பெளர்ணமி வரை, கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) பிரதமை முதல் அமாவாசை வரை).
நட்சத்திரம் தெரியாதவர்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தங்களுடைய பட்சிகளை முடிவு செய்யலாம். இவை அட்சரப் பட்சிகள் எனப்படும்.
வளர்பிறை (சுக்லபட்சம்)
அ, ஆ - வல்லூறு
இ, ஈ - ஆந்தை
உ, ஊ - காகம்
எ, ஏ - கோழி
ஒ, ஓ - மயில்
தேய்பிறை (கிருஷ்ணபட்சம்)
அ, ஆ - கோழி
இ, ஈ - வல்லூறு
உ, ஊ - ஆந்தை
எ, ஏ - மயில்
ஒ, ஓ - காகம்
- - -தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக