சனி, 31 மார்ச், 2018

பஞ்ச பட்சி சாஸ்திரம் பகுதி - 6

பஞ்ச பட்சி சாஸ்திரம்.
பகுதி - 6
இன்று சுக்லபட்சம் திருவோணம் முதல் அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி வரை பிறந்த நட்சத்திரகாரர்கள் ஜென்ம பட்சி மயில், சுக்லபட்சம் மற்றும் கிருஷ்ணபட்சத்திற்கு ஏற்ற நேர கணித அட்டவணை சுலபமாக புரியும் வகையில் காண்பிக்கபட்டு உள்ளன.
இந்த உதாரண நேர அட்டவணை சூரிய உதயம் சரியாக காலை 6.00 மணி என்ற கணக்கில் கட்டப்பட்டுள்ளன, நீங்கள் கணக்கிடும் நாளின் சூரிய உதயத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து கொள்ளவோண்டும்.

முழு பஞ்ச பட்சி சாஸ்திரம் விபரங்களை, 15 பக்கம் கொண்ட PDF உங்கள் தனிப்பட்ட நட்சத்திரம், பட்சம், அபஹாரம், முறையில் வேண்டுமெனில் மின்அஞ்சல் முலம் தொடர்பு கொண்டு பெறலாம்,
srjastrology@gmail.com.



வெள்ளி, 30 மார்ச், 2018

பஞ்ச பட்சி சாஸ்திரம் பகுதி - 5

பஞ்ச பட்சி சாஸ்திரம்.
பகுதி - 5
இன்று சுக்லபட்சம் அனுஷம் முதல் கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் வரை பிறந்த நட்சத்திரகாரர்கள் ஜென்ம பட்சி கோழி, சுக்லபட்சம் மற்றும் கிருஷ்ணபட்சத்திற்கு ஏற்ற நேர கணித அட்டவணை சுலபமாக புரியும் வகையில் காண்பிக்கபட்டு உள்ளன.
இந்த உதாரண நேர அட்டவணை சூரிய உதயம் சரியாக காலை 6.00 மணி என்ற கணக்கில் கட்டப்பட்டுள்ளன, நீங்கள் கணக்கிடும் நாளின் சூரிய உதயத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து கொள்ளவோண்டும்.
முழு பஞ்ச பட்சி சாஸ்திரம் விபரங்களை, 15 பக்கம் கொண்ட PDF உங்கள் தனிப்பட்ட நட்சத்திரம், பட்சம், அபஹாரம், முறையில் வேண்டுமெனில் மின்அஞ்சல் முலம் தொடர்பு கொண்டு பெறலாம்,
srjastrology@gmail.com.


வியாழன், 29 மார்ச், 2018

பஞ்ச பட்சி சாஸ்திரம் பகுதி - 4

பஞ்ச பட்சி சாஸ்திரம்.
பகுதி - 4
இன்று சுக்லபட்சம் உத்திரம் முதல் அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் வரை பிறந்த நட்சத்திரகாரர்கள் ஜென்ம பட்சி காகம்,
சுக்லபட்சம் மற்றும் கிருஷ்ணபட்சத்திற்கு ஏற்ற நேர கணித அட்டவணை சுலபமாக புரியும் வகையில் காண்பிக்கபட்டு உள்ளன.

இந்த உதாரண நேர அட்டவணை சூரிய உதயம் சரியாக காலை 6.00 மணி என்ற கணக்கில் கட்டப்பட்டுள்ளன, நீங்கள் கணக்கிடும் நாளின் சூரிய உதயத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து கொள்ளவோண்டும்.




முழு பஞ்ச பட்சி சாஸ்திரம், 15 பக்கம் கொண்ட PDF உங்கள் தனிப்பட்ட நட்சத்திரம், பட்சம், முறையில் வேண்டுமெனில் மின்அஞ்சல் முலம் தொடர்பு கொண்டு பெறலாம்,
srjastrology@gmail.com

பஞ்ச பட்சி சாஸ்திரம் பகுதி - 3

பஞ்ச பட்சி சாஸ்திரம்.
பகுதி - 3
இன்று சுக்லபட்சம் திருவாதிரை முதல் புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் வரை பிறந்த நட்சத்திரகாரர்கள் ஜென்ம பட்சி ஆந்தை, சுக்லபட்சம் மற்றும் கிருஷ்ணபட்சத்திற்கு ஏற்ற நேர கணித அட்டவணை சுலபமாக புரியும் வகையில் காண்பிக்கபட்டு உள்ளன.
இந்த உதாரண நேர அட்டவணை சூரிய உதயம் சரியாக காலை 6.00 மணி என்ற கணக்கில் கட்டப்பட்டுள்ளன, நீங்கள் கணக்கிடும் நாளின் சூரிய உதயத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து கொள்ளவோண்டும்.



78 people reached

செவ்வாய், 27 மார்ச், 2018

சுபமுகூர்த்தம்

திருமண சுபமுகூர்த்தம்.

திருமணத்திற்கு ஒரு ஆணும் பெண்ணும் எப்படி அவசியமோ, அதே போலத் தான் முகூர்த்த நாள் குறிப்பதும். முகூர்த்தம் என்பது மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேர அளவுள்ள காலமாகும்).
முகூர்த்தம் என்றால் நேரம் என்று பொருள், சுப முகூர்த்த என்றால் மட்டுமே நல்ல நேரம் என்று பொருள்.
திருமணம் செய்ய சுபமுகூர்த்தம் பார்ப்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம்.

இன்று திருமண வாழ்வில் பல இன்னல்களும், பிரிவுகளும் வர காரணம் சுப முகூர்த்த நாட்களில் திருமணம் நடைபெறததே முக்கிய காரணம்.
சாதாரண காலண்டரில் முகூர்த்த நாள் பார்த்து அல்லது திருமண மண்டபத்தில் காலியாக உள்ள நாட்களில் திருமணம் நடைபெறுகிறது.

சுப முகூர்த்த என்றால் என்னென்ன பார்க்க வேண்டும் என்று பார்க்கலாம்.
முதலில் திருமணம் செய்ய என்னென்ன பார்க்க வேண்டும் என்றால் ஆண் பெண் இருவருக்கும் இடையே நட்சத்திர பொருத்தம் இருக்க வேண்டும், இன்று பலர் இதை மட்டுமே பார்த்து திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். திருமண வாழ்க்கையில் பல பிரச்னைகளுக்கு இதுவும் ஒரு காரணம்.

அடுத்த திருமணம் செய்யும் மணமக்களின் நட்சத்திர பொருத்தம் மட்டுமல்ல. இருவருக்கும் ஜாதக பொருத்தமும் பார்க்க வேண்டும், ராசி பொருத்தம், லக்ன பொருத்தம், 2,7,8,12 ஆம் இட பொருத்தம் பார்க்க வேண்டும். இருவரது ராசியும் ஒருவருக்கொருவர் 6,8,12 ஆக கூடாது. இருவரது லக்னமும் ஒருவருக்கொருவர் 6,8,12 ஆக கூடாது. இருவரது குருவும், சுக்கிரனும் மறைய கூடாது கெடக்கூடாது. அப்போதுதான் இருவருக்கும் ஒற்றுமையும், அன்பும், பாசமும் பலமாகும். இருவருக்கும் ஒரே திசா / புக்தி நடக்க கூடாது.

அடுத்து திருமணம் நாள் தேர்ந்து எடுப்பது, ஜாதகத்தில் சில பொருத்தங்கள் ஒத்து வரவில்லை என்றாலும் மாங்கல்யம் ஏறும் நாள் நேரம் மிக சிறப்பாக அமைந்தால் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அதற்காக தான் நல்லநாள் பார்த்து செய்ய வேண்டும் என்பது.

முதலில் வருடம் - குருபகவான் அவரவர் ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ம் இடங்களில் பிரவேசம் செய்யும் போது குரு பலம் ஏற்படும். இருவருக்கும் குருபலம் இருந்தால் நல்லது. அல்லது மணப்பெண்ணுக்காவது குருபலம் இருக்க வேண்டும்.

அடுத்து மாதம் - வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மற்றும் மாசி, மாதங்ளைத் தேர்வு செய்து இவைகளில் மலமாதம் இல்லாத மாதத்தைத் தேர்வு செய்ய வேண்டும். (இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருமேயானால் அதற்கு மலமாதம் என்று பெயர்).
இயன்றவரை வளர்பிறை காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது.

அடுத்தது நட்சத்திரம் - ரோகிணி, மிருகசிரீடம், மகம், உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், உத்திரட்டாதி, ரேவதி ஆகியவை மிக உத்தமம்.
அசுவினி, புனர்பூசம், பூசம், சித்திரை, திருவோணம், அவிட்டம், சதயம் ஆகிய நட்சத்திரங்களிலும் செய்யலாம்.

அடுத்து கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளிக்கிழமை உத்தமம்.

அடுத்து திதி - வளர்பிறையின் துவிதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி, தசமி மற்றும் திரயோதசி சிறப்பானவை.

இருவர் நட்சத்திரத்திற்கும் தாராபலம் ஏற்றார்போல் உள்ள நாட்கள்.
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி. தாரா பலன் பார்த்துதான் முகூர்த்த நாளை குறிக்க வேண்டும் எல்லா முகூர்த்தமும் எல்லோருக்கும் ஏற்றது அல்ல.

அன்றைக்கு சந்திரன் ஐன்ம ராசிக்கு 1, 3, 6, 7, 10, 11 ராசிகளில் இருப்பது.
திருமணநாள் மணமக்களின் ஜென்ம நட்சத்திரமாகவோ, ஜென்ம கிழமையாகவோ அமையாமல் இருப்பது மிக நல்லது.
கரிநாள், மரணயோகம், இவைகள் ஆகாது.
கரணங்களில் அசுப கரணங்களை ஒதுக்கவேண்டும். சித்தயோகத்தை மாங்கல்ய தாரணத்திற்கும் அமிர்தயோகத்தை சாந்தி முகூர்த்தத்திற்க்கும் தேர்வு செய்தல் வேண்டும்.

பஞ்சகம்” என்ற முறையில் நல்ல நாளை தேர்வு செய்ய வேண்டும். (சுப கார்யம் செய்யத் தேர்ந்தெடுத்த நாளின் திதி, வாரம் (கிழமை), நட்சத்திரம், தேர்ந்தெடுத்த லக்கினம், லக்ன துருவ எண், இவற்றைக் கூட்டி ஒன்பதால் வகுத்து வரும் மீதி 0, 3, 5, 7, 9 ஆகில் உத்தம பஞ்சகம். பிரதமை -1, துதிதியை - 2 என்று கணக்கிடவேண்டும். அதுபோல் அஸ்வினி -1, பரணி - 2 என வரிசை எண்ணையே அந்த நட்சத்திரத்தின் எண்ணாகக் கொள்ளவேண்டும். அதுபோல் ஞாயிறு -1, திங்கள்-2, செவ்-3 என்று கிழமைக்கும், மேஷம் -1, ரிஷபம்-2 ... மீனம் -12 என இலக்னங்களுக்கும் எண் தெரிந்துகொள்ளவேண்டும். இது தவிர லக்ன துருவம் (4 இலக்னங்களுக்கு மட்டும்) மேஷம் - 5, ரிஷபம் - 7, மகரம் -2, கும்பம் - 4, மீனம் -6 இவற்றையும் கூட்டிப் பின் 9 ஆல் வகுக்க வேண்டும். 0,3,5,7,9 ஆகியவை நிஷ் பஞ்சகம் உத்தமம் என்றும் மற்ற 1, 2, 4, 6, 8 ஆகிய கூடாது.

அடுத்து திருமணம் நேரம்(சுபமுகூர்த்த) தேர்ந்து எடுப்பது,
முகூர்த்த லக்னம் - ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் உத்தமம்,
முகூர்த்த லக்னத்திற்க்கு ஏழாமிடம், எட்டாம் இடம் சுத்தமாக இருக்க வேண்டும்.

இராகு காலம், குளிகை காலம் மற்றும் எமகண்டம் போன்ற நேரங்களை ஒதுக்க வேண்டும். க் கூட தவிர்ப்பது சிறந்தது.
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதியில் திருமணம் செய்ய கூடாது.

சாந்தி முகூர்த்தம் நேரம் மிக முக்கியம். திருமணம் நடக்கும் நாள் முகூர்த்த நாளாக இருப்பதால் அன்றே வைப்பதும் நல்லதுதான். வேறு நாளில் வைப்பதாக இருப்பின் ஒரு லக்னம் குறித்துதான் நேரம் வைக்க வேண்டும், அந்த லக்னத்துக்கு 1,7,8ஆம் இடம் சுத்தம். ஜென்ம நட்சத்திரம் அன்று ஆகாது. எமகண்டம்,ராகுகாலம் ஆகாது, இரவிலும் எமகண்டம் உண்டு. அதை கவனித்து நேரம் குறிக்க வேண்டும். முதல்முறை நல்ல நேரத்தில் தாம்பத்யம் கொள்வதே நல்லது.

திங்கள், 26 மார்ச், 2018

பஞ்ச பட்சி சாஸ்திரம் பகுதி - 2

பகுதி - 2

சென்ற பதிவில் ஜென்ம நட்சத்திர பட்சியின் ஆட்சி நாட்கள் மிகநல்லது என்றும், பட்சியின் மரண நாட்கள் தீங்கு என்றும் பார்த்தோம்,
இனி எந்த நட்சத்திரத்திற்கு எந்த பட்சி என பார்க்கலாம்.

சுக்லபட்சம் அஸ்வினி முதல் பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம் வரை வல்லூறு.
சுக்லபட்சம் திருவாதிரை முதல் புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் வரை ஆந்தை.
சுக்லபட்சம் உத்திரம் முதல் அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் வரை காகம்
சுக்லபட்சம் அனுஷம் முதல் கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் வரை கோழி.
சுக்லபட்சம் திருவோணம் முதல் அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி வரை மயில்

கிருஷ்ணபட்சம் அஸ்வினி முதல் பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம் வரை மயில்.
கிருஷ்ணபட்சம் திருவாதிரை முதல் புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் வரை கோழி.
கிருஷ்ணபட்சம் உத்திரம் முதல் அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் வரை காகம்
கிருஷ்ணபட்சம் அனுஷம் முதல் கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் வரை ஆந்தை.
கிருஷ்ணபட்சம் திருவோணம் முதல் அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி வரை வல்லூறு.

இன்று சுக்லபட்சம் அஸ்வினி முதல் பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம் வரை பிறந்த நட்சத்திரகாரர்கள் சுக்லபட்சம் மற்றும் கிருஷ்ணபட்சத்திற்கு ஏற்ற நேர கணித அட்டவணை சுலபமாக புரியும் வகையில் காண்பிக்கபட்டு உள்ளன.
இந்த உதாரண நேர அட்டவணை சூரிய உதயம் சரியாக காலை 6.00 மணி என்ற கணக்கில் கட்டப்பட்டுள்ளன, நீங்கள் கணக்கிடும் நாளின் சூரிய உதயத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து கொள்ளவோண்டும்.



பஞ்ச பட்சி சாஸ்திரம்.

பஞ்ச பட்சி சாஸ்திரம்.

பகுதி - 1

சிவபெருமான் இந்த பஞ்ச பட்சி சாஸ்திரத்தை முதலில் தன் குமரனான முருகப்பெருமானுக்கு அசுரர்களை அழிக்கும் பொருட்டு உபதேசித்தார் எனவும், முருகன் அதை அகத்தியருக்கு உபதேசித்தார் எனவும், அகத்தியர் பதினென் சித்தர்களுக்கு உபதேசித்தார் எனவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது”. (அண்டம் = உலகம்) (பிண்டம் = உடல்) பஞ்ச பூதங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன. அதே போல் மனித உடலிலும் பஞ்ச பூதங்கள் உள்ளது.

ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனுக்கு உடல் காரகன், மனோக்காரகன் என்று பெயர் உண்டு, மனித உடலிலும், மனதிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு சந்திரனின் சுழற்சியே காரணம் என்பதை சித்தர்கள் கண்டறிந்தார்கள். மனிதர்களின் உடற்கூறு அவர்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு தகுந்தாற்போல் அமைந்தூள்ளது என்பதையும் கண்டறிந்தார்கள். உடலை இயக்குவது மின் காந்த ஆற்றலாகும். அந்த மின் காந்த ஆற்றாலானது சந்திரனினின் சுழற்சிக்கு தகுந்தார்போல் சில நேரங்களில் வலிமையடைவதையும், சில நேரங்களில் வலுவிழந்துபோவதையும் கண்டறிந்தார்கள். ( அமாவாசை மற்றும் பெளர்ணமி அன்று சில மன நோயாளிகள் மனநிலை மாறுவது, கடல் சீற்றம் அடைதல்)
உடலில் மின் காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும்போது, உடல் வலிமை,மனவலிமை கூடுவதையும், எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறுவதையும்,
உடலில் மின் காந்த ஆற்றல் வலிமை குன்றியிருக்கும்போது, உடல் வலிமை, மனவலிமை குறைவதையும்,எண்ணிய எண்ணங்கள் நடைபெறாமல் தடைபடுவதையும் கண்டறிந்தார்கள்.

உடலில் ஏற்படும் இத்தகை மாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட கால சுழற்சியில் இயங்குகிறது என்பதையும், அந்த
கால சுழற்சிக்குத்தகுந்தார் போல் செயல்பட்டால் வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றி நடை போடலாம் என்பதையும் மானிடர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு அதை பஞ்ச பட்சி சாஸ்திரம் என்னும் தலைப்பில் உலகுக்கு வெளிப்படுத்தினார்கள்.
“பஞ்ச”என்றால் “ஐந்து”
“பட்சி” என்றால் “பறவை”
ஐந்து பறவைகள் வைத்து கணக்கிடப்பட்டது ( பஞ்ச பூதங்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்).

மனிதனுடைய எல்லா செயல்களையும் செய்ய வைப்பதும், கட்டுப்படுத்துவதும் ஐந்து பறவைகள் என நம்பப்படுகிறது. இந்த ஐந்து வகையான சக்திகள் சுக்லபட்சம் கிருஷ்ணபட்சம், பகல் இரவு என மாறி மாறி செயல்களை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு நாளும் முதலில் உதிக்கின்ற சக்தியும் பின்னர் வருகின்ற சக்தி வாரத்தையும், பட்சத்தையும் சார்ந்துள்ளது.
பிறந்த (ஜென்ம) நட்சத்திரத்தையும், பிறந்த நேரத்தின் பட்சத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொருவருக்கும் பஞ்ச பட்சியில் ஒன்று முக்கிய பட்சியாக (ஜென்ம பட்சி) அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்சிகள் மொத்தம் ஐந்து.

அவை முறையே
வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்.
ஒருவர் தொழில் நிமித்தமாகவோ வேறு எதற்காகவேனும் தங்களுடைய பட்சியின் நிலையறிந்து செயல்பட்டால் அதில் வெற்றி நிச்சயம் பெறலாம். இதுவே பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் அடிப்படை தத்துவமாகும்.

இந்த பட்சிகளின் தொழில்கள்
ஆட்சி, ஊண், நடை, துயில், சாவு என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலைகளில் பட்சிகளின் பலம் கீழ் கண்டவாறு இருக்கும் என்று சொல்லலாம்.
ஆட்சி - 100% பலம்
ஊண் - 80% "
நடை - 50% "
துயில் - 25% "
சாவு - 0% "
ஒவ்வொரு பட்சிக்கு சுக்லபட்சம்/ கிருஷ்ணபட்சம், பகல்/இரவு என நேரம் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு அந்த நேரத்தில் எந்த நிலையில் இருக்கிறது என்று சொல்லப் பட்டிருக்கிறது.
எந்த பறவை எந்த நாளில் எந்த நேரத்தில் என்ன தொழில் செய்யும் என்று பார்ப்போம்.
ஒரு நாளில் மொத்தம் 24 மணி = 60 நாளிகை. பகல் = 30 நாளிகை, இரவு = 30 நாளிகை. அது ஐந்து பறவைகளுக்கும் ஐந்து பிரிவாக பிரிக்கப்பட்டு பகல் (அல்லது இரவில்) தன் தொழிலைச் செய்ய ஒவ்வொரு பறவையும் 6 நாழிகைகள் எடுத்துக் கொள்ளும். 6 நாழிகைகள் என்பது 2 மணி 24 நிமிடங்கள். முதல் 6 நாழிகை ஊண் என்றால் அடுத்த 6 நாழிகை நடை அல்லது வேறு ஒரு தொழில் என்று வரும்.
இந்த 6 நாழிகையை 5 உட்பிரிவாக பிரிந்து ஐந்து பட்சிகளும் தங்கள் தொழிலை செய்யும் இதை அபஹாரம் எனப்படும்.

இது தவிர இந்த பட்சிகளுக்கு மிகவும் பலவீனமான நாட்கள் (செயல் இழந்து விடும் நாட்கள் - Death Days) என்று இருக்கிறது. இவை படுபட்சி நாட்கள் அல்லது மரண நாட்கள் எனப்படும். இந்த நாட்களில் எந்த முக்கியமான வேலை, புது முயற்சி, சுப காரியம், பிரயாணம், அறுவை சிகிச்சை, மருத்துவ சிகிச்சை இவை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. இவை பகல், இரவு இரண்டு வேளைகளுக்கும் பொருந்தும்.

அடுத்து இந்த பட்சிகளுக்கு ஆட்சி நாட்கள் (Ruling Days) என்று இருக்கின்றன. அந்த நாட்களில் அந்த பட்சி பலமாக இருக்கும். முன்பு சொன்ன படு பட்சி நாட்களுக்கு நேர் எதிரானது. மேலே விலக்கச் சொன்ன எல்லாக் காரியங்களையும் மேற்கொள்ள ஏதுவான (சிறந்த) நாள். இவை படு பட்சி நாட்கள் போல் இல்லாமல் பகல் இரவு இரு வேளைகளுக்கும் வெவ்வேறாக இருக்கும்.
பின் பட்சிகளில் சந்துரு / மித்துருக்கள் (நட்பு /பகை ) உண்டு.

ஒரு முக்கியமான காரியம் செய்வதற்கு ஏற்ற நல்ல நேரம் கண்டுபிடப்பதற்கு முதலாவது பஞ்சாங்கத்திலோ, காலண்டரிலோ பார்த்து விருப்பமுள்ள நாளின் வாரத்தையும், திதியையும் குறித்து கொண்டு, விரும்புகின்ற நாளின் பொழுது (இரவு அல்லது பகல்) ஜென்ம பட்சியின் ஆட்சி அல்லது ஊண் என்ற நாள் மிக நல்லது. துயில் அல்லது சாவு என்ற நாள் மிக தோஷகாரமானது. இதே போல் நேரத்தை உட் பிரிவை வைத்து (அபஹாரம்) தேர்வு செய்ய வேண்டும்.

ஒருவரின் நட்சத்திரத்தின் மூலம் பட்சியை நிர்ணயிக்கலாம். இது நட்சத்திரப் பட்சி எனப்படும். (இதில் பலரும் பட்சம் பாகுபாடு இல்லாமல் கூறுகிறார் இது தவறு, உதாரணமாக அஸ்வினி வல்லூறு என்று)
சுக்லபட்சம் (வளர்பிறையில்) அஸ்வினி என்றால் மட்டுமே வல்லூறு,
கிருஷ்ணபட்சம் (தேய்பிறையில்) அஸ்வினி என்றால் மயில் தான் ஜென்ம பட்சி ஆகும். (சுக்லபட்சம் (வளர்பிறை) பிரதமை முதல் பெளர்ணமி வரை, கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) பிரதமை முதல் அமாவாசை வரை).
நட்சத்திரம் தெரியாதவர்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தங்களுடைய பட்சிகளை முடிவு செய்யலாம். இவை அட்சரப் பட்சிகள் எனப்படும்.
வளர்பிறை (சுக்லபட்சம்)
அ, ஆ - வல்லூறு
இ, ஈ - ஆந்தை
உ, ஊ - காகம்
எ, ஏ - கோழி
ஒ, ஓ - மயில்
தேய்பிறை (கிருஷ்ணபட்சம்)
அ, ஆ - கோழி
இ, ஈ - வல்லூறு
உ, ஊ - ஆந்தை
எ, ஏ - மயில்
ஒ, ஓ - காகம்


                                                                                                                           - - -தொடரும்....

வெள்ளி, 23 மார்ச், 2018

ரத்தினங்கள் பகுதி - 5

ரத்தினங்கள்
பகுதி - 5
அலெக்ஸாண்ட்ரைட் (Alexandrite)
நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும், உறுதிப்படுத்தும்.
கை கால் நடுக்கம் உள்ளவர்கள் இதை அணிந்து கொள்ளலாம்.
பக்கவாதம், சிறுநீரை அடக்க முடியாத தன்மை (Incontinence), தேவையற்ற பரபரப்பு (hyper activity) போன்ற நோய்கள் உள்ளவர்கள் இதை அணிந்து கொண்டால் பலன் கிடைக்கும்.
மண்ணீரல், கணையம், விரைகள் ஆகியவற்றின் இயக்கங்களை உறுதிப்படுத்தும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகாரிக்கும்.
ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை நீரிழிவு நோய்கள் உள்ளவர்கள் இந்த கற்களை அணிந்து பயன் பெறலாம்.
ஆன்மிக அதிர்வுகள் அதிகம் உள்ள கல், ஆன்மிக பாதையில் வளர்ச்சியடைய விரும்புகிறவர்கள் இதை அணிந்து பயன் பெறலாம்.

செவ்வாய், 13 மார்ச், 2018

வசந்த நவராத்திரி வளங்களை பெருக்கும்.

வசந்த நவராத்திரி வளங்களை பெருக்கும்.
17-03-2018 - 25-03-2018

தேவி வழிபாடு என்பது சக்தியை, அம்பிகையை, அகிலாண்ட நாயகியை, அன்னை பராசக்தியை வழிபடும் முறையாகும். தேவி வழிபாட்டின், பண்டிகைகளில் முக்கியமானவை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச்சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாக்கள்தான்.
குளிர்கால (புரட்டாசி மாதம்) ஆரம்பமும் கோடைகால (பங்குனி மாதம்) ஆரம்பமும் எமனின் இரு தாடைகளாக விளங்குவதாக அக்கினி புராணம் கூறுகிறது. அந்த இரு தாடைகளிலும் படாமல், அந்த இரு மாதங்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி பெற்று, நீண்ட நல்வாழ்வு வாழ அருளக் கூடியவள் அம்பிகை மட்டுமே. இந்த இரு காலங்களுக்குள் அமையும் நவராத்திரிகளை அனுசரித்தால் நன்மை பயக்கும்.
பன்னிரண்டு மாதங்களுக்கும் பன்னிரண்டு விதமான நவராத்திரிகள் உண்டு என்கின்றன சாக்த சாஸ்திரங்கள். அந்த பன்னிரண்டிலும் மிக முக்கியமானவை நான்கு. பங்குனி மாதத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி, ஆடி மாதத்தில் ஆஷாட நவராத்திரி; புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரி; தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. சக்தி வழிபாடு செய்யும் ஸ்ரீவித்யா உபாசகர்கள் இந்த நான்கு நவராத்திரிகளையும் கொண்டாடுவது வழக்கம். வருடத்தை ஆறு ருதுக்களாக ஆன்றோர்கள் பிரித்துள்ளார்கள். ஒரு ருதுவுக்கு இரண்டு மாதங்கள். அந்த ருதுக்களில் ‘ரிதூநாம் குஸுமாகர:’ என்று ஸ்ரீ கிருஷ்ண பகவானால் சொல்லப்படுவது வஸந்தருது.
பருவங்களில் சிறந்ததாகச் சொல்லப்படுவது வஸந்தருது. இந்த வஸந்த ருதுவே வசந்த காலம். அதாவது, வாழ்வில் வசந்தம் தொடங்கக் கூடிய காலம். வயல்களில் அறுவடை முடிந்து, வளம் பொங்கக் கூடிய காலம். மக்களின் மனதில் ஆனந்தம் குடிகொள்ளும் காலம். வசந்த நவராத்திரி, பங்குனி மாத அமாவாசை முதல் தொடங்கப்படும். மறுநாள், தெலுங்கு வருடப் பிறப்பாகிய யுகாதிப் பண்டிகை அமையும். இந்த நவராத்திரி ஸ்ரீராம நவமியுடன் முடியும் (நவராத்திரி நிர்ணயம் எனும் புத்தகத்தில், வசந்த நவராத்திரி 9 நாட்கள் கொண்டாடினால் உலகம் க்ஷேமம் அடையும் என்றும்,
ஒரு பட்சம் அதாவது, 15 நாட்கள் (அமாவாசை முதல் பௌர்ணமி வரை) கொண்டாடினால் வேண்டும் வரங்கள் கிட்டும் என்றும்,
ஒரு மண்டலம், அதாவது, பங்குனி அமாவாசை முதல் சித்ரா பௌர்ணமி வரை 45 நாட்கள் கொண்டாடுவது சகல கார்யங்களிலும் வெற்றியைத் தரும் என்றும் கூறுகின்றது.)
பொதுவாக வட இந்தியாவிலும் தென் இந்தியாவில் சில கோயில்களிலும் மட்டுமே கொண்டாடப்படுகிறது இந்த வசந்த நவராத்திரி. வசந்த நவராத்திரி யோகம் எனும் பக்தி நிலையை தரக் கூடியது. மேரு எனும் ஸ்ரீசக்ரம் அமைந்திருக்கும் ஆலயங்களில் வசந்த நவராத்திரி பொதுவாகக் கொண்டாடப்படும். ஒன்பது தினங்களிலும் காலை வேளையில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பெறும். ஒன்பது தினங்களிலும் அம்பிகை ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருவாள். மாலை வேளையில் அம்பிகைக்கு உகந்த, சாக்தத்தின் மிக உயர்நிலை பூஜையான ஸ்ரீநவாவரண பூஜையும் லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனையும் கன்யா பூஜையும் ஸுவாஸினி பூஜையும் நடைபெறும்.
வசந்த நவராத்திரி வழிபாட்டால், பெண் குழந்தைகள் மகிழ்ச்சி அடைவார்கள்.
கன்னியர்கள் திருமணம் நிறைவேறப் பெறுவார்கள். சுமங்கலிகள் மாங்கல்ய பலம் பெறுவார்கள்.
வசந்த நவராத்திரியை அனுஷ்டிக்கிறவர்களுக்கு கடன் தொல்லைகள் தீர்வதோடு, கணவன்-மனைவி உறவு பலப்படும்,அன்யோன்யம் உண்டாகும்.
அக்கினி புராணத்தில் ஒரு வருடத்தில் 4 நவராத்திரிகளையும் கொண்டாட முடியாதவர்கள் சாரதா நவராத்திரி மற்றும் வசந்த நவராத்திரியையாவது விரதம் அனுஷ்டித்து கொண்டாடுவது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே பங்குனி மாதம் அனுஷ்டிக்கப்படும் வசந்த நவராத்திரியை சக்தி வழிபாடாகச் செய்து சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். புரட்டாசி நவராத்திரி மாதிரி கோலாகலமாகக் கொண்டாடாவிட்டாலும், அவரவர் இல்லத்தில் எளிய முறையில் கொண்டாடலாம். அருகில் உள்ள அம்மன் கோயில்களுக்கு சென்றும் வசந்த நவராத்திரி விழாவில் பங்கேற்கலாம்.
வசந்த நவராத்திரி நாட்களில் வீட்டுக்கு வரும் பெண்களை சக்திகளாக நினைத்து கௌரவிக்க வேண்டும். அவர்களுக்கு தாம்பூலம், மஞ்சள், கண்ணாடி, சீப்பு, குங்குமச்சிமிழ் தேங்காய், பழம், புத்தகங்கள், ரவிக்கைத் துணி கொடுத்து அனுப்ப வேண்டும். நவராத்திரி 9 நாட்களும் 9 கன்னியரை சக்தியாக பூஜிப்பது குடும்பத்துக்கு நல்லது. அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே வசந்த நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாடலாவது பாட வேண்டும். முத்தாலத்தி என்றொரு வகை கோலம் உள்ளது. வசந்த நவராத்திரி நாட்களில் இந்த வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும். வசந்த நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
வசந்த நவராத்திரி தொடர்பான சுலோகம், மந்திரம் தெரியவில்லையா? கவலைப் படாதீர்கள். ‘ஓம் ஸ்ரீ லலிதா தேவ்யை நமஹ’ என்பதை 108 தடவை சொன்னால் போதும், உரிய பலன் கிடைக்கும். சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும் வேலையிலும் பதவி தொடர வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் வசந்த நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும். தர்மபுரி கல்யாணகாமாட்சி ஆலயத்தில் வசந்த நவராத்திரி விரதத்தை ஸ்ரீராமன் கடைப்பிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது. தேவியை இந்த வசந்த நவராத்திரி நாட்களில் கட்கமாலா துதி, லலிதா த்ரிசதி, லலிதா ஸஹஸ்ரநாமம், ஸௌந்தர்யலஹரி, ஆச்ரேய அஷ்டோத்திரம் போன்ற துதிகளால் அர்ச்சித்து வளங்கள் பெறலாம்.

திங்கள், 12 மார்ச், 2018

பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு - பகுதி -10 ( முற்று)

பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு.

பகுதி -10 ( முற்று) லக்னம் தெரியாதவர்கள் ( ஜாதகம் இல்லாதவர்கள்).
ஞாயிற்றுக்கிழமை நாளில் ராகு காலத்தில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, நாகலிங்கம் மலர் சாற்றி, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, எள் கலந்த சாதம் படையலிட்டு, இனிப்பு பதார்த்தம், பழங்கள், பாயாசம் படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு குறைந்தது 10 பேருக்காவது தானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை பைரவர் நீக்கி நலம் புரிவார்.
பித்ரு தோஷம் நிவர்த்தியடைந்து விட்டால் மட்டும் போதாது. பித்ரு தோஷத்திற்கு வழி தரும் செயல்களை செய்யகூடாது, முன்னோர்களை நிந்தனை செய்வதை நிறுத்திவிட வேண்டும்.
இந்த தோஷப் பரிகாரங்களை சிவாலயத்தில் விளங்கும் பைரவர் சன்னதியில் செய்யலாம்.
இது பொது பரிகாரம், இதை எவர் வேண்டுமானாலும் செய்யலாம்.

ஞாயிறு, 11 மார்ச், 2018

பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு - பகுதி - 9

பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு.


பகுதி - 9 எந்த லக்னத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் லக்னத்திற்கு ஒன்பதாமிடத்தில் கேது இருந்தால்.
செவ்வாய்க்கிழமை நாளில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, செவ்வரளி மலர் சாற்றி, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, வேக வைத்த கொள்ளும் சர்க்கரையும் கலந்து செய்த உருண்டை படையலிட்டு, கொள்ளு பொடி கலந்த சாதம், விளாம்பழம் படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு குறைந்தது 10 பேருக்காவது தானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை பைரவர் நீக்கி நலம் புரிவார்.
பித்ரு தோஷம் நிவர்த்தியடைந்து விட்டால் மட்டும் போதாது. பித்ரு தோஷத்திற்கு வழி தரும் செயல்களை செய்யகூடாது, முன்னோர்களை நிந்தனை செய்வதை நிறுத்திவிட வேண்டும்.
இந்த தோஷப் பரிகாரங்களை சிவாலயத்தில் விளங்கும் பைரவர் சன்னதியில் செய்யலாம்.

 .

சனி, 10 மார்ச், 2018

பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு - பகுதி - 8

பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு.

பகுதி - 8 எந்த லக்னத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் லக்னத்திற்கு ஒன்பதாமிடத்தில் ராகு இருந்தால்.
சனிக்கிழமை நாளில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, மந்தாரை மலர் சாற்றி, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, உளுந்து கஞ்சி, உளுந்து களி படையலிட்டு, உளுந்து பொடி கலந்த சாதம், வாழைப்பழம் படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு குறைந்தது 10 பேருக்காவது தானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை பைரவர் நீக்கி நலம் புரிவார்.
பித்ரு தோஷம் நிவர்த்தியடைந்து விட்டால் மட்டும் போதாது. பித்ரு தோஷத்திற்கு வழி தரும் செயல்களை செய்யகூடாது, முன்னோர்களை நிந்தனை செய்வதை நிறுத்திவிட வேண்டும்.
இந்த தோஷப் பரிகாரங்களை சிவாலயத்தில் விளங்கும் பைரவர் சன்னதியில் செய்யலாம்.

வெள்ளி, 9 மார்ச், 2018

பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு - பகுதி -7

பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு.

பகுதி -7 தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள்.
ஞாயிற்றுக்கிழமை நாளில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, செந்தாமரை மலர் சாற்றி, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, கோதுமை அல்வா, அவல் கேசரி படையலிட்டு, சப்பாத்தி, கேரட், ஆப்பிள் படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு குறைந்தது 10 பேருக்காவது தானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை பைரவர் நீக்கி நலம் புரிவார்.
பித்ரு தோஷம் நிவர்த்தியடைந்து விட்டால் மட்டும் போதாது. பித்ரு தோஷத்திற்கு வழி தரும் செயல்களை செய்யகூடாது, முன்னோர்களை நிந்தனை செய்வதை நிறுத்திவிட வேண்டும்.
இந்த தோஷப் பரிகாரங்களை சிவாலயத்தில் விளங்கும் பைரவர் சன்னதியில் செய்யலாம்.

வியாழன், 8 மார்ச், 2018

பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு - பகுதி - 6

பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு.

பகுதி - 6 விருச்சிகம் லக்னத்தில் பிறந்தவர்கள்.
திங்கட்கிழமை நாளில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, அல்லி மலர் சாற்றி, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, பச்சரிசி சாதம், முள்ளங்கி பொறியல்/ கூட்டு படையலிட்டு, சாத்துக்குடி, ஜவ்வரிசி பாயாசம் படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு குறைந்தது 10 பேருக்காவது அன்னதானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை பைரவர் நீக்கி நலம் புரிவார்.
பித்ரு தோஷம் நிவர்த்தியடைந்து விட்டால் மட்டும் போதாது. பித்ரு தோஷத்திற்கு வழி தரும் செயல்களை செய்யகூடாது, முன்னோர்களை நிந்தனை செய்வதை நிறுத்திவிட வேண்டும்.
இந்த தோஷப் பரிகாரங்களை சிவாலயத்தில் விளங்கும் பைரவர் சன்னதியில் செய்யலாம்.

புதன், 7 மார்ச், 2018

பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு - பகுதி - 5

பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு.

பகுதி -5 துலாம், கும்பம் லக்னத்தில் பிறந்தவர்கள்.
புதன்கிழமை நாளில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, வெண்காந்தாள்/மல்லிகை மலர் சாற்றி, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, பாசிபருப்பு பொடி கலந்த சாதம் படையலிட்டு, கொய்யாபழம், பாசிபருப்பு பாயாசம் படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு குறைந்தது 10 பேருக்காவது அன்னதானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை பைரவர் நீக்கி நலம் புரிவார்.
பித்ரு தோஷம் நிவர்த்தியடைந்து விட்டால் மட்டும் போதாது. பித்ரு தோஷத்திற்கு வழி தரும் செயல்களை செய்யகூடாது, முன்னோர்களை நிந்தனை செய்வதை நிறுத்திவிட வேண்டும்.
இந்த தோஷப் பரிகாரங்களை சிவாலயத்தில் விளங்கும் பைரவர் சன்னதியில் செய்யலாம்.

செவ்வாய், 6 மார்ச், 2018

பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு - பகுதி - 4

பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு.

பகுதி -4 கன்னி, கும்பம் லக்னத்தில் பிறந்தவர்கள்.
வெள்ளிக்கிழமை நாளில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, வெண்தாமரை மலர் சாற்றி, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, சர்க்கரை பொங்கல், சாதம், (வெண் மொச்சை) பிதுக்கு பருப்பு சாம்பார் படையலிட்டு, மாம்பழம், சேமியா பாயாசம் படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு குறைந்தது 10 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை பைரவர் நீக்கி நலம் புரிவார்.
பித்ரு தோஷம் நிவர்த்தியடைந்து விட்டால் மட்டும் போதாது. பித்ரு தோஷத்திற்கு வழி தரும் செயல்களை செய்யகூடாது, முன்னோர்களை நிந்தனை செய்வதை நிறுத்திவிட வேண்டும்.
இந்த தோஷப் பரிகாரங்களை சிவாலயத்தில் விளங்கும் பைரவர் சன்னதியில் செய்யலாம்.

திங்கள், 5 மார்ச், 2018

பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு - பகுதி - 3

பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு.

பகுதி -3 சிம்மம், மீனம் லக்னத்தில் பிறந்தவர்கள்.
செவ்வாய்க்கிழமை நாளில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, செண்பகம்/செவ்வலரி மலர் சாற்றி, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, துவரம் பருப்பு பொடி கலந்த சாதம், பீட்ரூட் கூட்டு படையலிட்டு, (நாட்டு)மாதுளம் பழம், பால் பாயாசம் படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு குறைந்தது 10 பேருக்காவது அன்னதானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை பைரவர் நீக்கி நலம் புரிவார்.
பித்ரு தோஷம் நிவர்த்தியடைந்து விட்டால் மட்டும் போதாது. பித்ரு தோஷத்திற்கு வழி தரும் செயல்களை செய்யகூடாது, முன்னோர்களை நிந்தனை செய்வதை நிறுத்திவிட வேண்டும்.
இந்த தோஷப் பரிகாரங்களை சிவாலயத்தில் விளங்கும் பைரவர் சன்னதியில் செய்யலாம்.

ஞாயிறு, 4 மார்ச், 2018

பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு - பகுதி - 2

பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு.

பகுதி -2 ரிஷபம், மிதுனம் லக்னத்தில் பிறந்தவர்கள்.
சனிக்கிழமை நாளில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, கருங்குவளை மலர் சாற்றி, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, கறிவேப்பிலை பொடி கலந்த சாதம், பாகற்காய் கூட்டு படையலிட்டு, கருப்பு எள் உருண்டை, கரும் திராட்சை பழம், பால் பாயாசம் படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு குறைந்தது 10 பேருக்காவது அன்னதானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை பைரவர் நீக்கி நலம் புரிவார்.
பித்ரு தோஷம் நிவர்த்தியடைந்து விட்டால் மட்டும் போதாது. பித்ரு தோஷத்திற்கு வழி தரும் செயல்களை செய்யகூடாது, முன்னோர்களை நிந்தனை செய்வதை நிறுத்திவிட வேண்டும்.


சனி, 3 மார்ச், 2018

பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு - பகுதி - 1

பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு.

பகுதி -1 மேஷம், கடகம் லக்னத்தில் பிறந்தவர்கள்.
வியாழக்கிழமை நாளில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, முல்லை மலர் சாற்றி, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, வறுத்த கடலைப்பருப்பு பொடி கலந்த சாதம் படையலிட்டு, வேக வைத்த பருப்பும் சக்கரையும் கலந்து செய்த உருண்டை, ஆரஞ்சு பழம், பால் பாயாசம் படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு குறைந்தது 10 பேருக்காவது அன்னதானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை பைரவர் நீக்கி நலம் புரிவார்.
பித்ரு தோஷம் நிவர்த்தியடைந்து விட்டால் மட்டும் போதாது. பித்ரு தோஷத்திற்கு வழி தரும் செயல்களை செய்யகூடாது, முன்னோர்களை நிந்தனை செய்வதை நிறுத்திவிட வேண்டும்.

வெள்ளி, 2 மார்ச், 2018

நாட்டு சர்க்கரையாஅல்லது வெள்ளை சர்க்கரையா ?

நாட்டு சர்க்கரையாஅல்லது வெள்ளை சர்க்கரையா

கால மாற்றத்தின் காரணமாகவும், நாகரீகத்தின் வளர்ச்சினாலும், மனதை மாற்றும் விளம்பரங்களினாலும் கருப்பாக இருப்பதெல்லாம் கெட்டது. வெளுப்பாக இருப்பதெல்லாம் நல்லது என நினைத்து வெள்ளையாக பாலிஷ் செய்யப்பட்டு பளபளக்கும் உணவு பொருட்களை தேடி நாம் உண்ணுகிறோம் இதன் விளைவு, இன்றைய இளம் தலைமுறையினர் பலர், நாம் கேள்வி படாத பல்வேறு நோய்களின் படையெடுப்பில் சிக்கி தினம் தோறும், பல மாத்திரை மருந்துகளையும் சேர்த்து தின்பதே ஆகும்.
அப்படி நாம் தேடி உண்ணும் உணவு பொருட்களில் சர்க்கரைக்கு மிகப்பெரிய இடம் உண்டு. பெரும்பாலான இல்லங்களின் உணவுகளில் வெள்ளை சர்க்கரை நீங்காத இடத்தை பிடித்துக்கொண்டது. வெறும் இனிப்பு என்ற சுவை மட்டுமே இருக்கும் இந்த வெள்ளை சர்க்கரை என்றைக்கு நம் அன்றாட உபயோகதிற்கு வந்ததோ,அன்றைகே நாம் நோயாளிகளாக மாற்றப்பட்டுவிட்டோம்.
நாம் தினமும் உண்ணும் சக்கரையில் எவ்வளவு நச்சுத் தன்மை இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டால் நமக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும்.
நாம் காலையில் எழுந்தவுடன் குடிக்கும் டீ அல்லது காபியில் இருந்து இரவு படுக்கும் முன் குடிக்கும் பால் வரை நாம் சக்கரையைப் பயன்படுத்துகிறோம்.
இந்த வெள்ளை சக்கரை தயாராகும் விதத்தை நாம் தெரிந்து கொண்டால் அது உடலுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். இந்த வெள்ளைச் சக்கரை தயாரிக்க பயன்படுத்தும் ரசயான‌ப் பொருட்கள் மிகவும் ஆபத்தானவை.
கரும்பிலிருந்து சாறு பிழியப்படும்போது, பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை ஃபுளுய்டு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.
பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் அமிலம் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த அமிலம் அழுக்கு நீக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.
பின்னர் சுண்ணாம்பை 2 சதவிகித அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயுவை செலுத்துகிறார்கள்.
இதை 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.
இதையடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு பெறப்படுகிறது.
காஸ்டிக் சோடா, சலவை சோடா சேர்த்து சுடுகலனில் அடர்த்தி மிகுந்த சாறு தயாரிக்கப்படுகிறது.
மீண்டும் சல்பர்-டை-ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க, படிகநிலைக்கு சக்கரை வருகிறது. சல்பர்-டை-ஆக்சைடு நஞ்சு சக்கரையில் கலந்துவிடுகிறது. இவ்வாறு தயாராகும் சக்கரையில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரி மட்டும்தான்.
இது, தயாரான நாளில் இருந்து, ஆறு மாத காலத்திற்கு மேல் இந்த சக்கரையை சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாப்பிட்டால் அதில் உள்ள சல்பர்-டை-ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள விஷமாக மாறிவிடும்.
அது, குடல் புண், உடல் பருமன், பல் சொத்தை, சளித்தொல்லை, இதய நோய், இரத்த அழுத்தம், மற்றும் சக்கரை நோய் போன்ற பெரிய வியாதிகள் அனைத்திற்கும் இதுதான் முக்கிய காரணமாக இருக்கிறது.
நமக்கு ஏற்படும் எந்த நோயாக இருந்தாலும் அதற்கு அடிப்பை வயறு, அதாவது ஜீரணம் கெடுவதுதான்.இந்த அடிப்படையான வயிற்றை ஆட்டங்கான வைத்து, இன்று நாம் அனுபவிக்கும் நோய்கள் உருவாவதற்கு மூல காரணங்களில் ஒன்றாக இந்த வெள்ளை சர்க்கரையை சொல்லலாம்.
இந்த வெள்ளை சர்க்கரை வருவதற்கு முன்னர் நாம் எதை பயன்படுத்திகொண்திருந்தோம். கரும்பு சர்க்கரை (நாட்டுச் சர்க்கரை), வெல்லம்,பனை வெல்லம் போன்ற இயற்கை தன்மை நிறைந்த எந்த விதத்திலும் கெடாத இனிப்பை நாம் பயன்படுத்தி வந்தோம்.
கரும்பு சாறு பாகாக காய்ச்சப்பட்டு அவை குறிப்பிட்ட கொதிநிலை வரும்போது அதன் சத்துக்களில் மாற்றம் ஏற்படுகிறது. அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் என்று மாற்றம் அடைந்த பின்னர் பிரவுன் நிறத்தில் கிடைக்கும் பொருளே கரும்பு சர்க்கரையாகும். இந்த கரும்பு சர்க்கரையில் வெல்லத்தை காட்டிலும் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய அனைத்து சத்துக்களும் உள்ளன.மேலும் அது உடலில் தேங்கும் கழிவுகளை வெளியேற்றும் செயலையும் செய்கிறது. மேலும் பல கரும்பு சாறு மற்றும் கரும்பு சர்க்கரையின் மகத்துவத்தை பற்றி இப்போது பார்ப்போம்.
மேற்கிந்திய தீவுகளில் கரும்பு தோட்டங்களில் வாழும் மக்கள் மிகவும் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். அவர்களின் அன்றாட உணவில் கரும்பு சாறு இடம் பிடித்துள்ளது. மேலும் கறுப்பு நிற கரும்பு சர்க்கரையை அவர்கள் தினம்தோறும் உட்கொள்கிறோம். இதனால் இவர்களுக்கு நோய் வரும் வாய்ப்பு குறைவாக உள்ளது மேலும் கேன்சர் நோய் இவர்களில் யாருக்குமே இல்லை என்கிறார்.
கரும்பு சாற்றில் உள்ள கனிம சத்துக்கள் கரையக்கூடிய வகையை சார்ந்தவை. அதனால் அவை நமது உடலில் எளிதில் ஜீரணம் அடைகிறது.அதுவுமில்லாமல் கரும்பு சாற்றில் உள்ள உப்புகளும், கனிமங்களும் நமது வயிற்றில் சுரக்கும் ஜீரண நீரில் உள்ள உப்புகளையும் கனிமங்களையும் ஒத்திருக்கிறது. அதனால் அவை உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தருகிறது என்கிறார்.
அதுமில்லாமல் உடலில் நோயை உண்டு பண்ணும் அமில தன்மையை வெளியேற்றி ஆரோக்கியத்தை வழங்கும் கார தன்மையை வழங்கிறதாம்.
இந்த வெள்ளை சக்கரைக்கு பதில், வெல்லம், கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதனால் ரத்த அழுத்தம், இதய நோயோ, சர்க்கரை நோய் ஆகியவற்றில் இருந்து தப்பிக்கலாம்.
ஆக, ஆரோக்கியமற்ற வெள்ளை சர்க்கரையை தவிர்த்து, நாட்டு சர்க்கரைகளை உணவில் சேர்த்து, நலம்மோடு வாழுங்கள்.

வியாழன், 1 மார்ச், 2018

#மஹா_கால_பைரவாஷ்டமி ;
-
🍀நட்சத்திரம், திதிகள், கிழமைகள் போன்றவற்றில் பல்வேறு வழிபாடுகள் செய்கிறோம். சாதாரணமாக சுபகாரியங்கள் செய்வதற்கு தவிர்க்கும் திதிகளில், இறைவனுக்குரிய வழிபாடுகளை மேற்கொள்கிறோம். 🍀கிருஷ்ணருக்கு அஷ்டமி திதியிலும், ராமருக்கு நவமி திதியிலும் ஜெயந்தி கொண்டாடுகிறோம்.🍀
-
🍀அந்த வகையில் இறைவனின் அம்சமாக, அவதாரமாக இருக்கும் பைரவருக்கு தேய்பிறையில் வரும் அஷ்டமி வழிபாடு மிக சிறப்பானதாகும். பைரவர் வழிபாடு ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்டு காலம், காலமாக நடைபெற்று வருகிறது. (திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்) 🍀பைரவ மூர்த்திகளில் 64 திருவடிவங்கள் உள்ளதாகவும் மேலும் 108 வரை உள்ளதாகவும் அறியப்படுகிறது. 🍀ஒவ்வொரு பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் வடகிழக்குப் பகுதியில் பைரவருக்கு தனி சந்நதி இருக்கும். அனைத்து சிவாலயங்களிலும் காலையில் சிவபூஜை சூரியனிடமிருந்து தொடங்கி அர்த்த ஜாமத்தில் பைரவருடன் முடிவடைகிறது.🍀
-
🍀நட்சத்திரம், திதிகள் இணைந்து வருவதும், தனியாக வருவதும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்ததாகும். பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி திதி சிறப்பானதாகும். 🍀கார்த்திகை மாதத்தில் வரும் அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. (திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்) பைரவரை தினசரி வணங்கினாலும், அஷ்டமி திதிகளில் வணங்குவது சிறப்பாகும். 🍀அன்றைய தினம் அஷ்டலட்சுமிகளும் வழிபடுவதாக புராண, சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அதனால் தான் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு அடைமொழி கொடுத்துள்ளனர்.🍀
-
திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்
-
01 🍀சித்திரை #ஸ்நாதனாஷ்டமி🍀
.
02 🍀வைகாசி #சதாசிவாஷ்டமி🍀
.
03 🍀ஆனி #பகவதாஷ்டமி🍀
.
04 🍀ஆடி #நீலகண்டாஷ்டமி🍀
.
05 🍀ஆவணி #ஸ்தாணு_அஷ்டமி🍀
.
06 🍀புரட்டாசி #சம்புகாஷ்டமி🍀
.
07 🍀ஐப்பசி #ஈசான_சிவாஷ்டமி🍀
.
08 🍀கார்த்திகை #கால_பைரவாஷ்டமி🍀
.
09 🍀மார்கழி #சங்கராஷ்டமி🍀
.
10 🍀தை #தேவதாஷ்டமி🍀
.
11 🍀மாசி #மகேஸ்வராஷ்டமி🍀
.
12 🍀பங்குனி #திரியம்பகாஷ்டமி🍀 - இப்படி ஒவ்வொரு அஷ்டமி வழிபாடுகளுக்கும் தனிச் சிறப்புக்கள் உள்ளன.🍀
-
திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்
-
🍀சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார். 🍀அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும் உண்டு. (திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்) ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்தது ஆகும். 🍀அந்நாள் பைரவாஷ்டமி என்று வழங்கப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று வழங்கப்பட்டு சிறப்பு பெறுகிறது.🍀
-
🍀ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் பஞ்ச எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஐந்து வகை எண்ணெய் கொண்டு ஏற்றப்பட வேண்டும், ஐந்து தனி தனி அகல் எடுத்துக் கொண்டு ஒரு அகலில் நல்லெண்ணெய். இன்னொரு அகலில் இலுப்ப எண்ணெய். மற்றொன்றில் விளக்கு எண்ணெய். அடுத்ததில் பசு நெய். அடுத்த அகலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பைரவ சுவாமியை நோக்கி அகலின் திரி முகம் வைத்து தனித்தனியாக ஏற்ற வேண்டும், (திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்) 🍀ஒரு அகலில் ஏற்றிய நெருப்பில் இருந்து இன்னொரு தீபம் ஏற்றக்கூடாது, (ஒவ்வொரு எண்ணெய் கொண்டு எரியும் தீபத்தின் சக்தி வெவ்வேறாகும், ஒன்று இன்னுமொன்றோடு சேரக்கூடாது சக்தி மோதல் உண்டாகும்) இவ்வாறு தனித்தனியாக ஏற்றி வழிபட்டால் தீரா பிரச்சினையும் தீரும், காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும்.🍀
-
திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்
-
🍀பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்று பொருள். படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தெழில்களை செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்கு திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. (திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்) 🍀படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும்.🍀
-
🍀எந்தவித பூஜைகள் செய்யா விட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார். (திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்) 🍀முதலில் துவங்கும் காலை பூஜையும், இரவில் நடக்கும் இறுதியான பூஜையும் ஸ்ரீ பைரவருக்கே உரியது. 🍀பற்றற்ற நிலையில் நிர்வாண கோலத்தில் பைரவர் வீற்றிருப்பதால் பைரவர் விக்ரகத்தை தொட்டு வணங்குதல் நாமே சென்று புஷ்பம் சாற்றுதல் ஆகியவை கூடாது.🍀
-
திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்
-
🍀சித்திரை, ஐப்பசி மாதங்களில் வரும் பரணி நட்சத்திர நாட்கள் ஸ்ரீ பைரவருக்கு மிக உகந்த நாட்கள் ஆகும். 🍀ஞாயிறு முதல் சனி வரையிலான வாரத்தின் அனைத்து நாட்களும் ஸ்ரீ பைரவரை வழிபட உகந்த நாட்கள் தான். (திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்) 🍀ஆயினும், தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்களில் வரும் அஷ்டமி திதி ஸ்ரீ பைரவரை வணங்குவதற்கு மிக விசேஷமான நாட்களாக நடைமுறையில் உள்ளது.🍀
-
🍀‘‘அட்ட பைரவருமோருருவாகி கிருட்ண பட்ச யட்டமியந்தியில்
அருள் பரிபாலிக்க தொழுதிருப் பாருக்காததேது’’ 🍀
-(என்கிறது #அகஸ்தியர் நாடி)
-
🍀சீர்காழியில் உள்ள சட்டை நாதர் என்னும் பைரவரை வழிபடுவதன் சிறப்பை இப்படி விளக்குகிறது அகஸ்திய நாடி.🍀
-
திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்
-
🍀திருஞானசம்பந்தராகப் போற்றப்படும் ஆளுடைப் பிள்ளை என்ற ஞானக் குழந்தை ஞானம் பெற்ற கோயில் இது. பிரம்ம தீர்த்தக் கரையில் அம்பாள் பொற்கிண்ணத்தில் ஞானசம்பந்தருக்கு பால் ஊட்டிய தலம். (திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்) 🍀நாம் ஒவ்வொரு வரும் தொழ வேண்டிய அற்புதக் கோயில். ஆதி சங்கரர் தமது "சௌந்தர்ய லஹரி" என்ற நூலில், ‘‘ஞானப்பால் பார்வதி தேவியிடம் இந்த திராவிட சிசு உண்டது சத்தியம்’’ என கொண்டாடுகிறார்.🍀
-
🍀திருநாவுக்கரசரை "அப்பர்" என ஞானசம்பந்த பிரான் அழைத்துப் போற்றிய புண்ணிய கோயில் இந்த சட்டநாதர் கோயில். சீர்காழி என்ற ஊருக்கே புகழைச் சேர்த்த இந்த சட்டநாதர், 🍀பைரவ சுவாமியின் மறு பதிப்பு வேற்றுருதான். அ(திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்) ஷ்டமி திதி தேய்பிறையில் இங்கு எட்டு வித பைரவ மூர்த்திகளும் கூடி நின்று பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனராம். எனவே, "தேய்பிறை அஷ்டமி திதி மாலை வேளையில் சட்ட நாதனை தொழுபவர் பெரும் பாக்யவான்களே" என்கிறார் அகஸ்தியர்.🍀
-
🍀12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீ பைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே. தேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார். (திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்) 🍀சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீ பைரவரே ஆவார். சனியின் வாத நோயை நீக்கிய வரும் பைரவரே.🍀
-
திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்
-
🍀தன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன், பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான். 🍀தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி, மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும், கால வர்த்தமான நிர்ணயப்படி (ஜோதிட ரீதியாக சனிப் பெயர்ச்சிப்படி) நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார். (திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்) அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப் பிரமாணம் பெற்றுக்கொண்டார்.🍀
-
🍀சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும், அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவரகளுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பைரவபெருமானிடம் விரும்பினார். (திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்) 🍀அதனால் தான் ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமச்சனி, ஜன்மச்சனியால் அவதிப்படுவோர் பைரவ வழிபாடு பண்ணுவதன் மூலம் அத்தொல்லைகளிலிருந்து விடுபட முடியும்.🍀
-
திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்
-
🍀தேய்பிறை அஷ்டமி, குறிப்பாக கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி பைரவ வணக்கத்திற்கு மிகவும் சிறந்தது. (திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்) 🍀சாதாரணமாக நாய் வாகனம் பைரவரின் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.சில இடங்களில் இடப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.🍀
-
🍀மிக அரிதாக சில இடங்களில் மட்டுமே இருபக்கமும் நாய் வாகனங்களுடன் பைரவர் காட்சி தருகிறார். இவ்வாறு இடப்பக்கம் மற்றும் இரு வாகனங்களுடன் உள்ள பைரவ பெருமான் மிகுந்த சக்தியுடன் விளங்குவதாக ஐதீகம். (திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்) 🍀ஏவல், பில்லி, சூனியம், பேய் பிசாசு முதலியவற்றின் தொல்லைகளிலிருந்து பூரண விடுதலை அடைய, வாழ்வில் வளம் பெற, திருமணத்தடைகள் நீங்கிட, பிதுர்தோஷம், சனி தோஷம், நீங்கி பைரவர் வழிபாடு மிகவும் உதவும்.🍀
-
திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்
-
🍀தேய்பிறை அஷ்டமி நாளில் அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வணங்குகின்றனர். அந்த நாளில் நாம் பைரவரை வணங்குவதால் பைரவரின் அருளோடு அஷ்ட லஷ்மிகளின் அருளும் கிடைக்கப் பெறுவோம். (திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்) 🍀ராகு காலத்தில் பைரவர் சன்னதியில் அமர்ந்து சொர்ணாகர்ஷண பைரவரின் மூல மந்திரத்தை ஜெபித்து வந்தால் கடன் தொல்லை நீங்கும்.🍀
-
🍀#பைரவ_காயத்ரி🍀
.
🍀"ஷ்வானத் விஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரச்சோதயாத்!"🍀
-
🍀இத்தகைய சிறப்பு வாய்ந்த அஷ்டமி வழிபாட்டினை பின் பற்றி எல்லா நலமும் அடைவோமாக!. "ஈசன் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!"🍀
-
#நன்றியுடன் உங்கள் 🍀#ஆதிரை மற்றும் தில்லை 🍀#இளந்தென்றல்🍀
-
🍀தென்னாடுடைய சிவனே போற்றி!🍀
🍀எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!🍀
-
🍀காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!🍀
🍀கயிலை மலையானே போற்றி! போற்றி!🍀
|| ---🍀🍀திருச்சிற்றம்பலம்🍀🍀-- ||