வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

சர்வாஷ்டக வர்க்கம் பலன்கள்.
சர்வாஷ்டக வர்க்க சக்கரத்தில் லக்னம் முதல் 4 ஆவது ராசி வரை பரல்களையும், 5 ஆவது ராசி முதல் 8 ஆவது ராசி வரை உள்ள பரல்களையும், 9 ஆவது ராசி முதல் 12 ஆவது ராசி வரை உள்ள பரல்களையும் தனித்தனியே கூட்டிக்கொள்ள வேண்டும்.
இவற்றில் முதல் பகுதி அதிக பரல்கள் கொண்டதாய் இருந்தால் ஜாதகரின் இளமை பருவத்தில் சிறப்பான வாழ்க்கை அமையும்.
இரண்டாம் பகுதியில் அதிக பரல்கள் இருந்தால் நடுத்தர வயது காலகட்டத்தில் சிறப்பான வாழ்க்கை அமையும்.
மூன்றாம் பகுதியில் அதிக பரல்கள் இருந்தால் வயோதிக பிராயத்தில் சிறப்பான வாழ்க்கை சேரும். ( மொத்த வாழ்நாளில் 3ல் ஒரு பகுதி).

சர்வாஷ்டக வர்க்கத்தில் எந்தெந்த வீடுகளில் 30 க்கும் மேற்பட்ட பரல்கள் உள்ளனவோ, அந்தந்த வீடுகள் சார்ந்த பலன்கள் முழுமையாக நடைபெறும்.
25 க்கும் மேலான பரல்கள் இருந்தால் மத்திமமான பலன்கள் நடக்கும்.
25 க்கும் குறைவான பரல்கள் இருந்தால் அற்பமான பலன்களே கிட்டும்.
சர்வாஷ்டக வர்க்கத்தில் 11ம் இடத்தை விட 12 ஆம் இடத்தில் பரல்கள் அதிகமாக இருந்ததால் அந்த ஜாதகருக்கு வரவுக்கு மேல் செலவுகள் அதிகமாயிருக்கும்.
10ம் இடத்தை விட 12 ஆம் இடத்தில் பரல்கள் கூடுதலாயிருந்தால் அந்த ஜாதகருக்கு சகட யோகம் உண்டாகும். ( வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் மாறி மாறி நடைபெறும்).
12 ஆம் இடத்திலும் 10 ஆம் இடத்திலும் உள்ள பரல்களை விட 11 ஆம் இடத்தில் கூடுதலாயிருந்தால் அந்த ஜாதகர் குறைந்த உழைப்பில் நிறைந்த லாபம் ஈட்டக்கூடியவனாகவும், செலவு ஆவதைவிட அதிக வரவுகள் உடையவனாகவும் இருப்டபார்.
6,8,12 ஆம் இடங்களில் உள்ள மொத்த பரல்களின் கூட்டு தொகையைவிட, 2,9,11 ஆம் இடங்களில் உள்ள பரல்களின் கூட்டு தொகை மிகுந்திருக்குமானால் அது நல்ல யோக அமைப்பு பெற்ற ஜாதகம்.
லக்கினத்தில் பரல்கள் அதிகமாக இருக்குமானால் அந்த ஜாதகர் பல்வேறு யோகங்களை அடைபவராயிருப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக