அஷ்டவர்க்கம்
அஷ்டகவர்க்கம் (அஷ்ட = எட்டு) (வர்க்கம் = பலம்) எட்டு வகையான பலம் என்பதே பொருளாகும். கிரகங்கள் 7 மற்றும் லக்னம் சேர்த்து 8. இதில் நிழல் கிரகங்களுக்கு (ராகு, கேது) இடமில்லை.
லக்னம், சூரியன், சந்திரனுக்கு, செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய எட்டையும் கொண்டு கணக்கிட படும்.
ஜாதக பலன்களை தீர்மானிப்பதில் அஷ்டகவர்க்கத்திற்கு தனி பங்கு இருக்கிறது.
ஒவ்வொரு கிரகமும் தான் இருக்கும் ராசியிலிருந்து குறிப்பிட்ட ராசிகளில் சுபமான பாதிப்பை ஏற்படுத்தும். அது எந்தெந்த ராசிகளில் சுபத்தை ஏற்படுத்துகிறதோ அந்த ராசிகளுக்கெல்லம் அது ஒரு பரலை வழங்கியிருக்கிறது என்று அஷ்டகவர்க்க கணிதம் கூறுகிறது.
உதாரணமாக சூரியனுடைய அஷ்டகவர்க்க சக்கரத்தில் சுக்கிரன் தான் இருக்கும் ராசியில் இருந்து 6,7,12 ஆகிய ராசிகளில் சுபமான தாக்கத்தை உண்டாக்குவார்.
ஆதலால் அந்த சுக்கிரனால் அந்த மூன்று ஸ்தானங்களும் ஒவ்வொரு பரலை (பிந்து) பெறுவதாக கொள்ள வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு கிரகத்தின் அஷ்டகவர்க்க சக்கரத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு பரல்கள் வழங்கும்.
கிரகங்கள் கொடுக்கின்ற பரல்களை யெல்லாம் சேர்த்து மொத்தம் ஒவ்வொரு கிரகமும் எத்தனை பரல்களை பெறுகின்றது என்ற தனித்தனியாக சக்கரத்தில் உருவாக்கி கொள்ள வேண்டும்.
இதில் பிரஸ்தார அஷ்டகவர்க்கம், பின்னாஷ்டக வர்க்கம் என்று இருவித சக்கரங்கள் உண்டு.
பின்னாஷ்டக வர்க்கத்தில் ஒரு கிரகம் பெற்றிருக்கின்ற பரல்களுக்கு ஏற்ப, அக்கிரகத்தின் பலம் அமையும். ஆதலால் இது முக்கியமானது.
பின்னாஷ்டக வர்க்கம் கணிக்க முதலில் பிரஸ்தார அஷ்டகவர்க்கம் காண்பது அவசியம்.
முதலில் ஒரு கிரகத்திற்கு அதன் சுய பரல்கள் இட வேண்டும், பின் அந்த சக்கரத்தில் மற்ற கிரகங்கள் தரும் பரல்களை சேர்த்து குறிப்பிட வேண்டும். இம்முறைப்படியே தனித்தனியாக சக்கரம் அமைக்க வேண்டும். இது தான் பிரஸ்தார அஷ்டகவர்க்கம், பின்னர் இப்படி ஒவ்வொரு ராசியும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பரல்களை பெற்றிருக்கின்ற. ஒவ்வொரு ராசியிலும் உள்ள பரல்களின் எண்ணிக்கையை கொண்டு ஒரு சக்கரம் அமைக்க வேண்டும் அதுதான் அந்த கிரகத்தின் பின்னாஷ்டக வர்க்க சக்கரம்.
இதில் ஒவ்வொரு கிரகத்திற்கு தனித்தனி எண்ணிக்கை உண்டு
ஒவ்வொரு கிரகங்களுக்கும் மொத்த பரல்கள் எத்தனை என்று பார்க்கலாம்.
சூரியன் - 48
சந்திரன் - 49
செவ்வாய் - 39
புதன் - 54
குரு - 56
சுக்கிரன் - 52
சனி - 39
பிரஸ்தார சக்கரத்தில் ஒரு கிரகத்திற்கு கூட்டும்போது அந்த பரல்கள் அந்த எண்ணிக்கையில் வர வேண்டும், அப்படி வந்தால் தான் பரல்களை நாம் சரியாக அமைத்திருக்கிறோம் என்று பொருள்.
இந்த பிரஸ்தார சக்கரத்தில் ஒரு கிரகம் அமர்ந்த இடத்தில் 4 பரல்களுக்கு மேல் இருந்தால் அக்கிரகம் பலம் பெற்றிருக்கிறது என்று கொள்ள வேண்டும். 4 பரல்களுக்கு குறைவாக இருந்தால் பலம் குன்றியிருக்கிறது என்று கருத வேண்டும், சரியாக 4 பரல் இருந்தால் அக்கிரகம் சமமான பலத்தில் இருப்பதாக எண்ண வேண்டும்.
பின் திரிகோண சோதனை, ஏகாதிபத்திய சோதனை என்று இரண்டு சோதனை முறை உண்டு.
பின்னர் இறுதியாக சர்வாஷ்டக வர்க்கம் அமைக்க வேண்டும்.
ஏழு கிரகங்களுக்கும் உரிய அஷ்டகவர்க்க சக்கரத்தில் ஒவ்வொரு ராசியிலும் உள்ள பரல்களை கூட்டி காண்பதே சர்வாஷ்டக வர்க்கம். இந்த சர்வாஷ்டக வர்க்கத்தின் மொத்த பரல்களையும் (12 ராசிகளிலுள்ள பரல்கள்) கூட்டினால் 337 பரல்கள் வர வேண்டும்.
இதுதான் அஷ்டகவர்க்கம் கணித முறை, கொஞ்சம் சிக்கலானது போல் தோன்றும், இருப்பினும் இப்பொது பல மென்பொருள் (software) மூலமாக சுலபமாக கணித்துவிடலாம்.
தெரிந்து கொள்ளவே கூறுகிறேன்.
அடுத்த பதிவில் பலன்களை பார்க்கலாம்
அஷ்டகவர்க்கம் (அஷ்ட = எட்டு) (வர்க்கம் = பலம்) எட்டு வகையான பலம் என்பதே பொருளாகும். கிரகங்கள் 7 மற்றும் லக்னம் சேர்த்து 8. இதில் நிழல் கிரகங்களுக்கு (ராகு, கேது) இடமில்லை.
லக்னம், சூரியன், சந்திரனுக்கு, செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய எட்டையும் கொண்டு கணக்கிட படும்.
ஜாதக பலன்களை தீர்மானிப்பதில் அஷ்டகவர்க்கத்திற்கு தனி பங்கு இருக்கிறது.
ஒவ்வொரு கிரகமும் தான் இருக்கும் ராசியிலிருந்து குறிப்பிட்ட ராசிகளில் சுபமான பாதிப்பை ஏற்படுத்தும். அது எந்தெந்த ராசிகளில் சுபத்தை ஏற்படுத்துகிறதோ அந்த ராசிகளுக்கெல்லம் அது ஒரு பரலை வழங்கியிருக்கிறது என்று அஷ்டகவர்க்க கணிதம் கூறுகிறது.
உதாரணமாக சூரியனுடைய அஷ்டகவர்க்க சக்கரத்தில் சுக்கிரன் தான் இருக்கும் ராசியில் இருந்து 6,7,12 ஆகிய ராசிகளில் சுபமான தாக்கத்தை உண்டாக்குவார்.
ஆதலால் அந்த சுக்கிரனால் அந்த மூன்று ஸ்தானங்களும் ஒவ்வொரு பரலை (பிந்து) பெறுவதாக கொள்ள வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு கிரகத்தின் அஷ்டகவர்க்க சக்கரத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு பரல்கள் வழங்கும்.
கிரகங்கள் கொடுக்கின்ற பரல்களை யெல்லாம் சேர்த்து மொத்தம் ஒவ்வொரு கிரகமும் எத்தனை பரல்களை பெறுகின்றது என்ற தனித்தனியாக சக்கரத்தில் உருவாக்கி கொள்ள வேண்டும்.
இதில் பிரஸ்தார அஷ்டகவர்க்கம், பின்னாஷ்டக வர்க்கம் என்று இருவித சக்கரங்கள் உண்டு.
பின்னாஷ்டக வர்க்கத்தில் ஒரு கிரகம் பெற்றிருக்கின்ற பரல்களுக்கு ஏற்ப, அக்கிரகத்தின் பலம் அமையும். ஆதலால் இது முக்கியமானது.
பின்னாஷ்டக வர்க்கம் கணிக்க முதலில் பிரஸ்தார அஷ்டகவர்க்கம் காண்பது அவசியம்.
முதலில் ஒரு கிரகத்திற்கு அதன் சுய பரல்கள் இட வேண்டும், பின் அந்த சக்கரத்தில் மற்ற கிரகங்கள் தரும் பரல்களை சேர்த்து குறிப்பிட வேண்டும். இம்முறைப்படியே தனித்தனியாக சக்கரம் அமைக்க வேண்டும். இது தான் பிரஸ்தார அஷ்டகவர்க்கம், பின்னர் இப்படி ஒவ்வொரு ராசியும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பரல்களை பெற்றிருக்கின்ற. ஒவ்வொரு ராசியிலும் உள்ள பரல்களின் எண்ணிக்கையை கொண்டு ஒரு சக்கரம் அமைக்க வேண்டும் அதுதான் அந்த கிரகத்தின் பின்னாஷ்டக வர்க்க சக்கரம்.
இதில் ஒவ்வொரு கிரகத்திற்கு தனித்தனி எண்ணிக்கை உண்டு
ஒவ்வொரு கிரகங்களுக்கும் மொத்த பரல்கள் எத்தனை என்று பார்க்கலாம்.
சூரியன் - 48
சந்திரன் - 49
செவ்வாய் - 39
புதன் - 54
குரு - 56
சுக்கிரன் - 52
சனி - 39
பிரஸ்தார சக்கரத்தில் ஒரு கிரகத்திற்கு கூட்டும்போது அந்த பரல்கள் அந்த எண்ணிக்கையில் வர வேண்டும், அப்படி வந்தால் தான் பரல்களை நாம் சரியாக அமைத்திருக்கிறோம் என்று பொருள்.
இந்த பிரஸ்தார சக்கரத்தில் ஒரு கிரகம் அமர்ந்த இடத்தில் 4 பரல்களுக்கு மேல் இருந்தால் அக்கிரகம் பலம் பெற்றிருக்கிறது என்று கொள்ள வேண்டும். 4 பரல்களுக்கு குறைவாக இருந்தால் பலம் குன்றியிருக்கிறது என்று கருத வேண்டும், சரியாக 4 பரல் இருந்தால் அக்கிரகம் சமமான பலத்தில் இருப்பதாக எண்ண வேண்டும்.
பின் திரிகோண சோதனை, ஏகாதிபத்திய சோதனை என்று இரண்டு சோதனை முறை உண்டு.
பின்னர் இறுதியாக சர்வாஷ்டக வர்க்கம் அமைக்க வேண்டும்.
ஏழு கிரகங்களுக்கும் உரிய அஷ்டகவர்க்க சக்கரத்தில் ஒவ்வொரு ராசியிலும் உள்ள பரல்களை கூட்டி காண்பதே சர்வாஷ்டக வர்க்கம். இந்த சர்வாஷ்டக வர்க்கத்தின் மொத்த பரல்களையும் (12 ராசிகளிலுள்ள பரல்கள்) கூட்டினால் 337 பரல்கள் வர வேண்டும்.
இதுதான் அஷ்டகவர்க்கம் கணித முறை, கொஞ்சம் சிக்கலானது போல் தோன்றும், இருப்பினும் இப்பொது பல மென்பொருள் (software) மூலமாக சுலபமாக கணித்துவிடலாம்.
தெரிந்து கொள்ளவே கூறுகிறேன்.
அடுத்த பதிவில் பலன்களை பார்க்கலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக