SRJ ASTRO

புதன், 28 பிப்ரவரி, 2018

எள் தரும் நன்மைகள்

எள் தரும் நன்மைகள்

நவதானியங்களில் ஒன்றாய எள் நமது நாட்டிற்கே உரியதானிய வகையாகும். இளைத்தவனுக்கு எள், கொழுத்தவனுக்கு கொள்ளு என்ற பழமொழிகளில் இடம் பெற்றுள்ள எள். நம் தமிழர் உணவுப் பழக்கத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. எளிய உணவு தானியங்களில் ஒன்றான எள் நமது உடலுக்கு நன்மை தரும் பல சத்துக்களை கொண்டுள்ளது. எள் நாவுக்குச் சுவை தருவதோடு உடலுக்கு மருந்தும் ஆகிறது.
எள்ளில் கருப்பு, வெள்ளை, செம்மை என மூன்று வகைகள் உள்ளன. இவற்றில் கருப்பு எள் சற்று அதிக சத்துக்களைக் கொண்டுள்ளது.
இது இந்தியா முழுவதும் பயிரிடப்படும் சிறிய செடி வகையாகும். இதற்கு திலம் என்று மற்றொரு பெயர் உண்டு. இதன் தாவரவியல் பெயர் Sesamum Indicum . இதிலிருந்து பெறப்படும் எண்ணெய்தான் நல்லெண்ணெய். Sesamin மற்றும் sesamolin என்ற இரண்டு வேதிப் பொருட்கள் இருப்பதால் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டதுஃ மேலும் இரத்த அழுத்தத்தை சீர்படுத்துகிறது.
எள்ளில் உள்ள கால்சியம் மிக அதிகம் உள்ளதால் எலும்புகள், பற்கள், நகங்கள் வலுவடைய இது உதவுகிறது. குறிப்பாக எலும்புகளின் அடர்த்தியை அதிகப்படுத்தும் தன்மை எள்ளில் உள்ள கால்சியத்திற்கு உண்டு. வளரும் குழந்தைகளின் ஆரோக்கியமும், மூளை வளர்ச்சியும் சீராக நடைபெற தரமான கால்சியச் சத்து போதுமான அளவு உடலுக்கு தேவை. இந்த கால்சியம் எள்ளில் இருப்பதால் தினமும் இதனை உபயோகப்படுத்தும் போது ஆரோக்கியம் மேம்படும். பெரியவர்களின் கால் மூட்டு தேய்மானம் கால்சிய சத்துக் குறைவால் ஏற்படுகிறது. இதற்கு எள் ஒரு சிறந்த மருந்து உணவுப் பொருளாக உபயோகமாகிறது.
எள்ளில் உள்ள சத்துக்கள்:
எள்ளில் அதிக அளவு காப்பர் சத்தும், கால்சியச் சத்தும் உள்ளது. மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின ஈ, இரும்புச் சத்து, ஜீங்க் மற்றும் புரதச் சத்து உள்ளது என்று விஞ்ஞான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதனால் நாம் அடிக்கடி எள்ளை உட்கொள்வதினால் ஏற்படுத் நன்மைகளை காண்போம்.
சுவாச மண்டல ஆரோக்கியத்தை பராமரிக்கிறது
எலும்பு அடர்த்தியை பராமரிக்கிறது
எலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுக்கிறது.
கொழுப்பின் அளவை குறைக்கிறது
இரத்தக் குழாய்களின் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது
இத்தகைய நன்மைகளைக் கொண்ட எள்ளை நாம் ஏதாவது ஒரு பக்குவத்தில் உட்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
எள்ளும், வெல்லமும் சேர்த்து செய்யப்படும் எள்ளுருண்டை அல்லது எள்ளு மிட்டாய் அடிக்கடி உட்கொள்ளலாம்.
ஏள், வெல்லம், தேங்காய் சேர்த்து பூரணமாக கொண்டு நீராவியில் வேக வைக்கும் கொழுக்கட்மை அல்லது மோதகம் போன்றவற்றை உண்ணலாம்.
சாதத்தில் எள்ளை பொடி செய்து சேர்த்து உண்ணுதல்
எள், காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து எள்ளு பொடியை இட்லி, தோசை போன்றவற்றிற்கு தொட்டு சாப்பிட உபயோகிக்கலாம்.
எள்ளின் மருத்துவ பயன்கள்:
வைட்டமின் பி1.,பி6,நியாசின், தையாமின், ஃபோலிக் அமிலம், ரிபோபிளேவின் போன்ற வைட்டமின்கள் எள்ளில் அபரிதமான அளவில் உள்ளது. 100 கிராம் எள்ளில் 97 µp ஃபோலிக் அமிலம் இருக்கிறது. இது நமக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு தேவையோ அதில் 25 சதவித தேவையை பூர்த்தி செய்கிறது.
ஒரு கப் பாலில் உள்ள கால்சியச் சத்து ஒரு கையளவு எள்ளில் உள்ளது. பால் சாப்பிட முடியாதவர்கள் எள்ளு மிட்டாய் சாப்பிட்டாலே தேவையான கால்சியம் உடலுக்கு கிடைத்து விடும்.
மூட்டு வலி உள்ளவர்களுக்கு வலியையும், வீக்கத்தையும் எள் குறைக்கிறது. எள்ளில் உள்ள செம்பு சத்து, கால்சியச் சத்து, மக்னீசியம் சத்து போன்றவை மூட்டுகளின் ஜவ்வுகளுக்கு தேவையான பலத்தை கொடுக்கிறது.
சர்க்கரையை நோய் இருந்தால் குறைக்கும்
எள்ளில் உள்ள செம்புச்சத்து இரத்தக் குழாய்களின் சுருங்கி விரியும் தன்மை அதிகப்படுத்துகிறது. இதனால் இருதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.
மாதவிடாய் வருவதற்கு முன் உடலில் ஏற்படும் மாற்றங்களான வயிறு உப்புசம், மார்பகங்களில் வலி, தலை வலி, உடல் கனத்து போதல் போன்றவை எள் சாப்பிடுவதால் குறைகிறது. மாதவிடாய் வந்த 15 நாட்களுக்கு பின் எள்ளை உணவில் சேர்த்துக் கொண்டால் இந்த மாதவிடாய் தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.
எள்ளில் Phytpsterol என்ற வேதிப்பொருள் அதிகம் உள்ளது. அதாவது 400 – 413 மி.கி அளவு 100 கிராம் எள்ளில் உள்ளது. இது மற்ற எந்த விதைகள் கொட்டைகளின் அளவை விட அதிகம். இவை இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க செய்கிறது. மேலும் பல விதமான புற்று நோய் வராமல் தடுப்பதற்கு உதவுகிறது.
அசைவ உணவில் உள்ளதைக் காட்டிலும் சைவ உணவில் இரும்புச் சத்து மற்றும் ஜிங்க் சத்து எள்ளில் அதிக அளவு கிடைக்கிறது.
100 கிராம் எள் 573 கலோரி சக்தியை கொடுக்கிறது.
100 கிராம் எள்ளில் 18 கிராம் புரதச் சத்து உள்ளது. குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான புரதச் சத்து அதிகம் உள்ளது.

Image may contain: plant, food, nature and outdoor
இடுகையிட்டது SRJ ASTRO நேரம் 11:00 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

சோற்றுப்புக்குப் பதிலாக பாறை உப்பு ROCK SALT என்ற இந்துப்பை உபயோகப்படுத்தினால் பாதிப்புகளில் இருந்து தப்பலாம்.

உப்பில்லா பண்டம் குப்பையிலே.. என்பதைப் போல் எம்முடைய உணவில் உப்பு இல்லாமல் இருக்க இயலாது. அதே சமயத்தில் உப்பிற்கு மாற்றும் உப்பு தான். எம்முடைய உடலைப் பாதுகாக்க வேண்டும்என்றால் அயோடின் கலக்காத உப்பை பயன்படுத்தவேண்டும். இவைஇப்போதும் சந்தையில் கிடைக்கத்தான் செய்கிறது. அதை வாங்கலாம் அல்லது இந்துப்பு வாங்கலாம்.
இந்துப்பு என்பதை ஆங்கிலத்தில் ஹிமாலயன் ராக் சால்ட் என்பார்கள். இது பெருன்பான்மையாக வெள்ளை நிறத்திலும், சிவப்பு மற்றும்ஊத நிறத்திலும் காணப்படும். சித்தா மற்றும் ஆயுர்வேத முறையில்மருந்துகள் தயாரிக்கும் போது இவை ஒரு கூட்டுக்கலவையாக பயன்படுத்தப்படுகிறது.
இந்துப்பிற்கு உடலை குளிர்விக்கும் தன்மையும் உண்டு. பசியைத்தூண்டும் தன்மையும், மலத்தை இளக்கும் தன்மையும் உண்டு. சாதாரண உப்பில் இருப்பது போலவே இதிலும் சோடியம் மற்றும் குளோரைடு ஆகியவற்றுடன் இயற்கையாகவே இதில் அயோடின் சத்துடன் லித்தியம், மக்னீஷியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், குரோமியம், மாங்கனீசு,இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட நுண் சத்துகளும் இருக்கின்றன.
பெரும்பாலும் உப்பு தான் உடலில் பித்தத்தை அதிகரித்து தலை கிறுகிறுப்பு,மயக்கம், பித்தவாந்தி,உயர் இரத்த அழுத்தம் போன்ற பித்த நோய்களை உண்டாக்கும். ஆனால் இந்துப்பைப் பயன்படுத்தும் போது அது பித்தத்தை மட்டுமல்லாமல் கபத்தையும் சமன் செய்து, கப பிணிகளான சளி, இருமல் ஆகியவற்றை வராமல் தற்காக்கின்றன. ஜீரண சக்தியையும் அதிகரிக்கின்றன. கண் பார்வையையும் பாதுகாக்கிறது. இதயத்தையும் பாதுகாக்கிறது. உடல் உறுதியையும் எற்படுத்துகிறது. உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்கிறது. இரத்த சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.குடல்கள் உணவினை நன்கு உறிஞ்சி உட்கிரகிக்கவும் உதவி புரிகிறது. அத்துடன் நல்ல உறக்கத்தையும் உண்டாக்குகிறது. அயோடின் உப்பிற்கு மாற்றாக இனி இந்துப்புவை பயன்படுத்தலாம்.
Image may contain: food
இடுகையிட்டது SRJ ASTRO நேரம் 10:00 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

திங்கள், 26 பிப்ரவரி, 2018

தருமம் வழியில் செல்லுங்கள்.

தருமம் அல்லது அறம் என்பது இந்து சமயம், புத்தம், சமணம் போன்ற சமயங்களில் வாழ்க்கைக்கான சரியான வழிமுறையாகச் சொல்லப்பட்டிருக்கும் நீதி நெறி அல்லது போதனைகள் ஆகும். இது கொடை, கருணை, தயை போன்ற பல்வேறு பொருள் தரும் சொல்லாகவும் உள்ளது. இந்து சமயத்தை ’சனாதன தருமம்’ என்று அழைப்பர். வட மொழி நூலான மனுதரும சாத்திரம் வருணாசிரம தருமம் என நான்கினைக் குறிகிறது. பொதுவாக கொடையாளர்கள் அல்லது யாசிப்பவர்கள் தருமம் என்ற சொல்லை பயன்படுத்துவர்.
மனிதர்களைப் பொறுத்தவரை தருமம் என்றால் சரியான செயல்களைச் செய்வது, சரியான பாதையில் நடப்பது ஆகும். உலகத்திலுள்ள மனிதர்கள் இவ்வாறு நீதி நெறியில் வாழ்வது மட்டுமல்லாமல், வான் வெளியில் உலகம் உழல்வதும், அண்ட சராசரங்கள் ஒரு ஒழுங்கில் இயங்குவதும் தருமம் எனப்படும் இறைவனின் விதிகளில்தான் என்கிறது இந்து சமயம்.
வேதாந்த சாத்திரங்களின்படி ”எது தாங்குகின்றதோ அதுவே தர்மம்” என்று வரையறுத்துக் கூறுகிறது. அவைகள் தனி மனித தருமம், சமூக தருமம், இராஷ்டிர தருமம் அல்லது தேசிய தருமம் மற்றும் மனித சமூகத்திற்க்கான தருமம் என்று ஐந்தாக தருமங்கள் உள்ளது.
தனி மனித தருமம் அல்லது வியக்தி தருமம்
என்பது ஒரு தனி மனிதன் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய தருமமாகும். வேதாந்த சாத்திரங்கள் கூறும் இல்லற தருமம், சமூக தருமம், இராஷ்டிர தருமம், மானவ தருமம் ஆகிய தருமங்களில் தனி மனிதன் கடைபிடிக்க வேண்டிய வியக்தி தருமங்கள் பின்வருமாறு:
தம: புற உறுப்புகளை அடக்கி ஆள்வது
சம: அக உறுப்புகளை அடக்கி ஆள்வது
அகிம்சை: எவ்வுயிருக்கும் தீங்கு இழைக்காமல் இருத்தல்
வாய்மை அல்லது சத்தியம்: மனதாலும் செயலாலும் வாய்மையைக் கடைப்பிடித்தல்
பிரம்மச்சரியம் : உடல் தொடர்பான ஆசைகளையும் உணர்ச்சிகளையும் அடக்குதல்.
அக்ரோதா: கோபப்படாதிருத்தல்.
மகிழ்ச்சி: மனநிறைவு, மனத்திருப்தி
தியாகம்: தன்னலத்தைத் துறத்தல்.
அபைஷுண: புறங்கூறாமை, இழித்துப் பேசாது இருத்தல்
அலோலுப்த்வ: பேராசைப்படாதிருத்தல்.
அபரிக்கிரகம்: பிறரிடமிருந்து தேவையற்ற வெகுமதிகளைப் பெறாதிருத்தல்.
ஹ்ரீ; அடக்கத்துடன் இருத்தல்.
மார்தவ: மென்மையுடன் இருத்தல்.
தயா: கருணையுடன் இரக்கத்துடனும் இருத்தல்.
சாந்தி: மனதை அடக்கி அதனால் உண்டாகும் மன அமைதி.
க்ஷமா: மன்னிக்கும் தன்மை
சௌசம்: உடல் மற்றும் மனதை தூய்மையாக வைத்திருத்தல்.
அத்ரோஹ: தீங்கு செய்யும் எண்ணம் இல்லாதிருத்தல்
சமூக தருமம்.
தனி மனித தருமங்களை கடைப்பிடிக்கவர்கள் இணைந்தவர்களின் கூட்டமே சமூகம் ஆகும். இத்தகைய சமூகம் சீரிய முறையில் செயல்படும். அதுவே சமூக தர்மம் எனப்படும் சமாஜ தருமம் ஆகும். ஒரு சமூகம் பல்வேறு வகைப்பட்ட தியாகங்களைச் செய்வது என்பது மனித சமுதாய தர்மத்தின் அடிக்கல்லாக அமைகிறது.
ஒரு சமூகம் கடைப்பிடிக்க வேண்டிய தருமங்கள்;
அனைவரிடமும் அன்புகாட்டுதல்
ஈகையை கடைப்பிடித்தல்.
வாய்மையை கடைப்பிடித்தல்.
விருந்தோம்பல்
கீழ்த்தரமான உணர்வுகளை அடக்குதல்.
பிறர்க்குத் துன்பத்தை தரவல்ல உண்மையத் தவிர்த்தல்.
இராஷ்டிர தருமம் அல்லது தேசிய தருமம் .
நாடு சிதறுண்டால் சமூகம் நிலைக்காது. நாடு நல்ல நிலையில் இருக்க வேண்டுமானால் தனி நபர்கள் மற்றும் சமூகம் தியாகங்கள் மேற்கொள்ள வேண்டும். அதுவே இராஷ்ட்டிர தருமம் அல்லது தேசிய தருமம் ஆகும்.
மனித சமூகத்திற்கான தருமம்.
மனித இனம் இன்றேல் நாடு, சமூகம் மற்றும் தனி நபர் இல்லை. எனவே மனித இனம் நிலை பெற்று இருக்க, தனி நபர்கள், சமூகங்கள் மற்றும் நாடுகள் ஒன்றிணைந்து பல விசயங்களை தியாகம் செய்ய வேண்டும்.
No automatic alt text available.
இடுகையிட்டது SRJ ASTRO நேரம் 10:30 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே ....

நரகத்தில் உள்ள மிகமுக்கிய 28 நகரங்களும் அதன் தண்டனையும்
பகுதி - 2
பூயோகம்
சிறிதும் வெட்கம் இன்றி இழிவான பெண்களுடன் கூடி, ஒழுக்கக்குறைவாக
நடந்து, வாழ்க்கையில் எந்த லட்சியமும் இல்லாமல் மிருகங்கள் போல் வாழ்ந்தவன் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனன,விஷமுடைய பூச்சிகளாலும், பிராணிகளும் கடிக்கும்.
பிரயணயோகம்
பிராணிகளை கொடுமைப்படுத்தி கொலை செய்யும் கொடுமைக்காரர்கள்
அடையும் நரகம் இது. இங்கு கூர்னமயான பாணங்களை ஜீவன்களின் மீது
எய்தி துன்புறுத்துவார்கள்.
விசஸவம்
பசுவில் எல்லா தேவதைகளும் இருக்கிறார்கள். அந்தப்பசுக்களை கொடுமை செய்பவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனுக்கு எமகிங்கரர்கள் சவுக்கடி
கொடுத்து துன்புறுத்துவார்கள்.
லாலாபசூக்ஷம்
மனைவியை கொடுமை படுத்தி முறையற்ற மோக இச்சைக்கு ஆளாக்கிக்கெடுக்கும் கொடியவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனும் அதே முறையில் வதைபடும்.
சாரமேயதனம்
வீடுகளுக்கு தீ வைப்பது, சூறையாடுவது, உயிர்களை வதைப்பது, விஷத்தை கொடுத்து கொல்லுதல், மக்களை கொன்று குவித்தல் போன்ற கொடிய பாவங்களை செய்தவர்கள் அடையும் நரகமிது. இங்கு விசித்திரமான கொடிய மிருகங்கள் ஜீவனை வதைக்கும்.
அவீசி
பொய் சாட்சி சொல்லி ஒருவருக்கு கெடுதலை விளைவிப்பவர் அடையும் நரகம் இது. நீர் நிலைகளில் ஜீவன்களை தூக்கி வீசி அழுத்துவார்கள்.
பரிபாதனம்
மதுவை தானும் உட்கொண்டு, பிறர்க்கும் கொடுத்து குடிமக்களை கெடுப்பவர்கள் அடையும் நரகம் இது. நெருப்புக்குழம்பை குடிக்கச்சொல்லி இங்கு வதைப்பார்கள்.
க்ஷாரகர்த்தமம்
தீய செயல்களை புரிந்தும், நல்லோரையும், பெரியோரையும் அவமதித்து, நானென்ற அகந்தையுடன் வாழ்ந்த ஜீவன்கள் அடையும் நரகம் இது. இங்கு கோரமான உருவம் கொண்ட பிசாசுகள் ஜீவனன துன்புறுத்தும்.
ரக்ஷோகனம்
நரமேத யாகம் செய்தவனும், மனித மாமிசத்தை புசித்தவனும், வாயில்லா சாதுவான பிராணிகளை வதைத்து கொடுஞ்செயல் புரிந்த பாவிகளும்
அடையும் நரகமிது. இங்கு ஜீவன்களால் பாதிக்கப்பட்டவர்களே முன்னின்று வதைப்பார்கள். பாதிக்கப்பட்ட மிருகங்களும் வதைக்கும்.
சூலப்ரோகம்
தனக்கு எந்தவித கெடுதல்களையும் செய்யாதவர்களை கொல்லுதல், சூழ்ச்சி செய்து கொல்லுதல், தற்கொலை செய்து கொல்லுதல், நம்பிக்கை துரோகம் செய்தல் ஆகிய பாவச்செயல்களை செய்த ஜீவன்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவன்களை, கொடிய பறவைகள் குத்திக் குத்திக் குதறும், சூலத்தாலும் குத்துவார்கள்.
சுசீமுகம்
அறத்தை செய்யாமல் தீய வழிகளில் பொருளைச் சேர்த்து, பிறரை துன்புறுத்தி
கர்வத்துடன் நடந்து, பொருள்கனளயும், பணத்தையும் பதுக்கி வைத்தவர்கள் அடையும் நரகம் இது. இங்கும் ஜீவன், உதவி செய்ய யாருமின்றி பசியாலும், தாகத்தாலும் தவிக்கும். எம தூதர்கள் துன்புறுத்துவார்கள்.
குந்தசூதம்
வாழ்க்கையில் பிறருக்கு நன்மை எதும் செய்யாமல் தீமையே செய்து வந்த
பாவிகள் அடையும் நரகம் இது. இங்கு தேள் போன்று கொடிய விஷமுள்ள பிராணிகள், ஜீவன்களை கொடுக்குகளால் கொட்டித் துன்புறுத்தும்.
வடாரோகம்
பிராணிகளை கொடுமையாக வதைத்த பாவிகள் அடையும் நரகம் இதுவாகும். ஜீவன்களின் கைகளை கட்டி, நெருப்பு வைத்து துன்புறுத்துவார்கள்.
பர்யாவர்த்தனம்
விருந்தினர்களை உபசரிக்காமல் அவர்களை வெறுத்து நிந்தனை செய்த கஞ்சத்தனம் உள்ளவர்களும், விருந்தினர்களுக்கு உணவளிக்காமல் விரட்டியவர்களும் அடையும் நரகம் இது. இங்கு ஜீவன், உணவும்-நீரும் இன்றி பசியாலும் தாகத்தாலும் தவிக்கும்.
Image may contain: night
இடுகையிட்டது SRJ ASTRO நேரம் 11:30 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

சனி, 24 பிப்ரவரி, 2018

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே ....

நரகத்தில் உள்ள மிகமுக்கிய 28 நகரங்களும் அதன் தண்டனையும்
பகுதி - 1
தாமிஸ்ரம்
பிறருக்கு சொந்தமான பொருளை அகபரிப்பது குற்றமாகும். பிறருக்கு சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும், அபகரிப்பதும் பாவச்செயலாகும். அதே போல பிறரது குழந்தையை அபகரிப்பது மகாப்பாவமாகும். பிறரது பொருளை ஏமாற்றி அபகரிப்பது, நமக்கு தீராத துன்பத்தை தரும். இதற்க்கு தண்டனையாக, நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும், கதைகளாலும் னநய புடைப்பார்கள்.
அந்ததாமிஸ்ரம்
கணவனும் மனைவியும் சேர்ந்து மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரையொருவர் ஏமாற்றுதல் தவறாகும். கணவன் மனைவியை வஞ்சித்தலும், மனைவி கணவனை வஞ்சித்தலும் பாவச்செயலாகும் இத்தகையவர்கள் இன்னரகத்தில் உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள் சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிக்க வேண்டியது வரும்.
ரௌரவம்
பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தை பிரிப்பது, அழிப்பது, அவர்களின் வபாருள்களை பறிப்பது என்பது குற்றமாகும். இதற்கு தண்டனனயாக, ஜீவன்களை எமகிங்கரர்கள் சேலத்தில் குத்தி துன்புறுத்துவார்கள்.
மகாரௌரவம்
மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தவர்கள் அடையும் நரகம் மகாரௌரவம் ஆகும். இங்கு குரு என்று சொல்லக்கூடிய, பார்ப்பதற்கு கோரமான மிருகம் காணப்படும். இவை பாவிகளை சூழ்ந்து முட்டி மோதி பலவகையில் துன்புறுத்தும்.
கும்பிபாகம்
சுவையான உணவுக்காக, வாயில்லா உயிர்களை வதைத்தும், கொன்றும்
பலவிதங்களில் கொடுமை படுத்தும் பாவிகள் அடையும் நரகமிது.
காலசூத்திரம்
பெரியோர்களையும், பெற்றோர்களையும் அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும், பட்டினி பொட்டும் வதைத்து உதாசீனம் செய்த பாவிகள் செல்லும் நரகம் இதுவாகும். இங்கு அதே முறையில் அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கப்படுவது உறுதி.
அசிபத்திரம்
தெய்வ நிந்தனை செய்தவர்களும், தர்மநேரியை விட்டு, அதர்ம நேரியைப்
பின்பற்றியவர்களும் அடையும் நரகம் இது. இங்கு பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு அவதிபடுவார்கள். இனம் புரியாத பயம் உண்டாகும்.
பன்றி முகம்
குற்றமற்றவரை தண்டிப்பது கொடுமையாகும். நீதிக்கு புறம்பாக அநீதிக்கு துணைபோவதும் அதர்மமாகும். இந்நரகத்தில், பன்றிமுகத்துடனும்
கூர்னமயான பற்களுடனும் ஒரு வகை மிருகம் காணப்படும். அதன் வாயில்
அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் அவதி படுவார்கள்.
அந்தகூபம்
உயிர்களை சித்ரவதை செய்தல், கொடுமையாக கொலை செய்தல் ஆகிய
குற்றங்கள் புரிந்த பாவிகள் அடையும் நரகமிது. கொடிய மிருகங்கள் கடித்து
குதறும் நிலை ஏற்ப்படும். விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்து துன்புறுத்தும்.
அக்னி குண்டம்
பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும் செல்வாக்கலும் அபகரித்து வாழ்ந்த பாவிகள், பலாத்காரமாக தனது காரியங்களை நிறைவேற்றி கொள்பவர்கள் இந்த நகரத்தை அடைவார்கள். இங்கு பாவிகள் ஒரு நீண்ட தடியில் மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னி குண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.
வஜ்ர கண்டகம்
சேரக்கூடாத ஆணையோ, பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடையும் நரகம் வஜ்ர கண்டகம். நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளை கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்பந்திக்கப்படுவார்கள். இதனால் உடல் எரிந்து துன்பப்படுவார்கள்.
கிருமிபோஜனம்
தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் சுரண்டிப் பிழைத்த பாவிகள்
இங்கு தான் வர வேண்டும். பிறவற்றை துனளத்து செல்லும் இயல்புடையது
கிருமிகள். இந்த நரகத்தில், பாவிகளை பலவிதமான கிருமிகள் கடித்து
துனளயிட்டு துன்புறுத்தும்.
சான்மலி
நன்மை, தீமை, பாபம் ஆகியவற்றை பாராமல், உறவுமுறையை கூட பாராமல் யாருடனாவது எப்படியாவது கூடி மகிழும் காமுகர்கள் அடையும் நரகம் இது. இங்கு இத்தகைய பாவிகளை முல்லாலான தடிகளாலும், முட்செடிகளாலும் எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள்.
வைதரணி
அதிகாரபலத்தாலும் கபட நாடகத்தாலும் நயவஞ்சகத்தாலும் நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்கு புறம்பாக நடந்தவர்கள் அடையும் நரகமிது.
வைதரணி என்பது நதியல்ல, இந்த ஆற்றில் தண்ணீருக்கு பதிலாக ரத்தமும், சீழும், சிறுநீரும், மலமும் கலந்த கலவையே ஆறாக ஓடும். இந்த நதியில் கொடிய பிராணிகளும் வாசஞ்செய்யும். பாவிகள் இந்நதியை கடக்க
முடியாமல், இதில் வீழ்ந்து துன்பப்படுவார்கள்.
No automatic alt text available.
இடுகையிட்டது SRJ ASTRO நேரம் 10:30 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

சர்வாஷ்டக வர்க்கம் பலன்கள்.
சர்வாஷ்டக வர்க்க சக்கரத்தில் லக்னம் முதல் 4 ஆவது ராசி வரை பரல்களையும், 5 ஆவது ராசி முதல் 8 ஆவது ராசி வரை உள்ள பரல்களையும், 9 ஆவது ராசி முதல் 12 ஆவது ராசி வரை உள்ள பரல்களையும் தனித்தனியே கூட்டிக்கொள்ள வேண்டும்.
இவற்றில் முதல் பகுதி அதிக பரல்கள் கொண்டதாய் இருந்தால் ஜாதகரின் இளமை பருவத்தில் சிறப்பான வாழ்க்கை அமையும்.
இரண்டாம் பகுதியில் அதிக பரல்கள் இருந்தால் நடுத்தர வயது காலகட்டத்தில் சிறப்பான வாழ்க்கை அமையும்.
மூன்றாம் பகுதியில் அதிக பரல்கள் இருந்தால் வயோதிக பிராயத்தில் சிறப்பான வாழ்க்கை சேரும். ( மொத்த வாழ்நாளில் 3ல் ஒரு பகுதி).

சர்வாஷ்டக வர்க்கத்தில் எந்தெந்த வீடுகளில் 30 க்கும் மேற்பட்ட பரல்கள் உள்ளனவோ, அந்தந்த வீடுகள் சார்ந்த பலன்கள் முழுமையாக நடைபெறும்.
25 க்கும் மேலான பரல்கள் இருந்தால் மத்திமமான பலன்கள் நடக்கும்.
25 க்கும் குறைவான பரல்கள் இருந்தால் அற்பமான பலன்களே கிட்டும்.
சர்வாஷ்டக வர்க்கத்தில் 11ம் இடத்தை விட 12 ஆம் இடத்தில் பரல்கள் அதிகமாக இருந்ததால் அந்த ஜாதகருக்கு வரவுக்கு மேல் செலவுகள் அதிகமாயிருக்கும்.
10ம் இடத்தை விட 12 ஆம் இடத்தில் பரல்கள் கூடுதலாயிருந்தால் அந்த ஜாதகருக்கு சகட யோகம் உண்டாகும். ( வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் மாறி மாறி நடைபெறும்).
12 ஆம் இடத்திலும் 10 ஆம் இடத்திலும் உள்ள பரல்களை விட 11 ஆம் இடத்தில் கூடுதலாயிருந்தால் அந்த ஜாதகர் குறைந்த உழைப்பில் நிறைந்த லாபம் ஈட்டக்கூடியவனாகவும், செலவு ஆவதைவிட அதிக வரவுகள் உடையவனாகவும் இருப்டபார்.
6,8,12 ஆம் இடங்களில் உள்ள மொத்த பரல்களின் கூட்டு தொகையைவிட, 2,9,11 ஆம் இடங்களில் உள்ள பரல்களின் கூட்டு தொகை மிகுந்திருக்குமானால் அது நல்ல யோக அமைப்பு பெற்ற ஜாதகம்.
லக்கினத்தில் பரல்கள் அதிகமாக இருக்குமானால் அந்த ஜாதகர் பல்வேறு யோகங்களை அடைபவராயிருப்பார்.
இடுகையிட்டது SRJ ASTRO நேரம் 11:00 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

வியாழன், 22 பிப்ரவரி, 2018

அஷ்டவர்க்கம்
அஷ்டகவர்க்கம் (அஷ்ட = எட்டு) (வர்க்கம் = பலம்) எட்டு வகையான பலம் என்பதே பொருளாகும். கிரகங்கள் 7 மற்றும் லக்னம் சேர்த்து 8. இதில் நிழல் கிரகங்களுக்கு (ராகு, கேது) இடமில்லை.
லக்னம், சூரியன், சந்திரனுக்கு, செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய எட்டையும் கொண்டு கணக்கிட படும்.
ஜாதக பலன்களை தீர்மானிப்பதில் அஷ்டகவர்க்கத்திற்கு தனி பங்கு இருக்கிறது.
ஒவ்வொரு கிரகமும் தான் இருக்கும் ராசியிலிருந்து குறிப்பிட்ட ராசிகளில் சுபமான பாதிப்பை ஏற்படுத்தும். அது எந்தெந்த ராசிகளில் சுபத்தை ஏற்படுத்துகிறதோ அந்த ராசிகளுக்கெல்லம் அது ஒரு பரலை வழங்கியிருக்கிறது என்று அஷ்டகவர்க்க கணிதம் கூறுகிறது.
உதாரணமாக சூரியனுடைய அஷ்டகவர்க்க சக்கரத்தில் சுக்கிரன் தான் இருக்கும் ராசியில் இருந்து 6,7,12 ஆகிய ராசிகளில் சுபமான தாக்கத்தை உண்டாக்குவார்.
ஆதலால் அந்த சுக்கிரனால் அந்த மூன்று ஸ்தானங்களும் ஒவ்வொரு பரலை (பிந்து) பெறுவதாக கொள்ள வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு கிரகத்தின் அஷ்டகவர்க்க சக்கரத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு பரல்கள் வழங்கும்.
கிரகங்கள் கொடுக்கின்ற பரல்களை யெல்லாம் சேர்த்து மொத்தம் ஒவ்வொரு கிரகமும் எத்தனை பரல்களை பெறுகின்றது என்ற தனித்தனியாக சக்கரத்தில் உருவாக்கி கொள்ள வேண்டும்.
இதில் பிரஸ்தார அஷ்டகவர்க்கம், பின்னாஷ்டக வர்க்கம் என்று இருவித சக்கரங்கள் உண்டு.
பின்னாஷ்டக வர்க்கத்தில் ஒரு கிரகம் பெற்றிருக்கின்ற பரல்களுக்கு ஏற்ப, அக்கிரகத்தின் பலம் அமையும். ஆதலால் இது முக்கியமானது.
பின்னாஷ்டக வர்க்கம் கணிக்க முதலில் பிரஸ்தார அஷ்டகவர்க்கம் காண்பது அவசியம்.
முதலில் ஒரு கிரகத்திற்கு அதன் சுய பரல்கள் இட வேண்டும், பின் அந்த சக்கரத்தில் மற்ற கிரகங்கள் தரும் பரல்களை சேர்த்து குறிப்பிட வேண்டும். இம்முறைப்படியே தனித்தனியாக சக்கரம் அமைக்க வேண்டும். இது தான் பிரஸ்தார அஷ்டகவர்க்கம், பின்னர் இப்படி ஒவ்வொரு ராசியும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பரல்களை பெற்றிருக்கின்ற. ஒவ்வொரு ராசியிலும் உள்ள பரல்களின் எண்ணிக்கையை கொண்டு ஒரு சக்கரம் அமைக்க வேண்டும் அதுதான் அந்த கிரகத்தின் பின்னாஷ்டக வர்க்க சக்கரம்.
இதில் ஒவ்வொரு கிரகத்திற்கு தனித்தனி எண்ணிக்கை உண்டு
ஒவ்வொரு கிரகங்களுக்கும் மொத்த பரல்கள் எத்தனை என்று பார்க்கலாம்.
சூரியன் - 48
சந்திரன் - 49
செவ்வாய் - 39
புதன் - 54
குரு - 56
சுக்கிரன் - 52
சனி - 39
பிரஸ்தார சக்கரத்தில் ஒரு கிரகத்திற்கு கூட்டும்போது அந்த பரல்கள் அந்த எண்ணிக்கையில் வர வேண்டும், அப்படி வந்தால் தான் பரல்களை நாம் சரியாக அமைத்திருக்கிறோம் என்று பொருள்.
இந்த பிரஸ்தார சக்கரத்தில் ஒரு கிரகம் அமர்ந்த இடத்தில் 4 பரல்களுக்கு மேல் இருந்தால் அக்கிரகம் பலம் பெற்றிருக்கிறது என்று கொள்ள வேண்டும். 4 பரல்களுக்கு குறைவாக இருந்தால் பலம் குன்றியிருக்கிறது என்று கருத வேண்டும், சரியாக 4 பரல் இருந்தால் அக்கிரகம் சமமான பலத்தில் இருப்பதாக எண்ண வேண்டும்.
பின் திரிகோண சோதனை, ஏகாதிபத்திய சோதனை என்று இரண்டு சோதனை முறை உண்டு.
பின்னர் இறுதியாக சர்வாஷ்டக வர்க்கம் அமைக்க வேண்டும்.
ஏழு கிரகங்களுக்கும் உரிய அஷ்டகவர்க்க சக்கரத்தில் ஒவ்வொரு ராசியிலும் உள்ள பரல்களை கூட்டி காண்பதே சர்வாஷ்டக வர்க்கம். இந்த சர்வாஷ்டக வர்க்கத்தின் மொத்த பரல்களையும் (12 ராசிகளிலுள்ள பரல்கள்) கூட்டினால் 337 பரல்கள் வர வேண்டும்.
இதுதான் அஷ்டகவர்க்கம் கணித முறை, கொஞ்சம் சிக்கலானது போல் தோன்றும், இருப்பினும் இப்பொது பல மென்பொருள் (software) மூலமாக சுலபமாக கணித்துவிடலாம்.
தெரிந்து கொள்ளவே கூறுகிறேன்.
அடுத்த பதிவில் பலன்களை பார்க்கலாம்

இடுகையிட்டது SRJ ASTRO நேரம் 11:30 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

புதன், 21 பிப்ரவரி, 2018

ரத்தினங்கள்.
பகுதி - 4
அமீதிஸ்ட் (Amethyst)
இக்கற்கள் படிகம் (Quartz) குடும்பத்தை சார்ந்தது, ஆழ்ந்த கருநீல வண்ணத்தில்( கத்திரிக்காய் - Indico) காணப்படும்.
தன்மைகளும் பலன்களும்
ஆன்மீகத்தில் அதிக நட்டம் தரும்.
மூளையோடு நேரடியாக தொடர்பு கொள்ளகூடிய ஒரு ரத்தினமாகும்.
நரம்பு மண்டல செல்களுக்கிடையேயான செய்தி பரிமாற்றத்தை (Transmission of Neural Signals) அமீதிஸ்ட் அதிகரிப்பதாக ஒரு ஜெர்மனி நாட்டு விஞ்ஞானி கண்டறிந்துள்ளார்.
மனதையும் மூளையையும் நரம்பு மண்டலத்தையும் உறுதியாக்கும்.
மனதை ஒருமுகப்படுத்தும்
நினைவாற்றலை அதிகரிக்கும்
தியானத்தில் உயர் நிலைகளை அடைய முடியும்.
சிந்தனை, பேச்சு, எழுத்து ஆகியவை தெளிவாகும், இவற்றில் ஞானம் மிளிரும்.
கலைத்துறையில் உள்ளவர்கள் (குறிப்பாக ஓவியர்கள், கவிஞர்கள், இசையமைப்பாளர், எழுத்தாளர்கள்) அமீதிஸ்ட் பயன்படுத்தினால் அவர்களது படைப்புத்திறன் அதிகமாகும். கோபம் ஆத்திரம், பரபரப்பு ஆகியவை அடங்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு நிம்மதியான தூக்கத்தை தரும்.
போதை பழக்கத்திற்கு அடிமையானோர்கள் இக்கற்கள் சற்று அதிக எடையில் பயன்படுத்தினால் அதிலிருந்து திருந்திவிட முடியும்.
குடியினை மறக்க முடியாதவர்களுக்கு இந்த கல்லை அணிவிப்பதின் மூலம் குடிப்பழக்கத்தை விரைவில் விட்டு விடுவார்கள்.
18 வயதுக்கு உட்பட்டவர்கள் இதை பயன்படுத்த கூடாது, பயணத்தினால் அதிக ஆன்மிக நட்டத்தில் துறவு மேற்கொள்ளும் நிலை ஏற்படும்.
முற்றிய மனநோய் உள்ளவர்கள் அமீதிஸ்ட் அணியக்கூடாது.
இடுகையிட்டது SRJ ASTRO நேரம் 10:30 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
ரத்தினங்கள்.
பகுதி - 3
ஆம்பர் (Amber).
மனித குலம் முதன் முதலாக பயன்படுத்த துவங்கிய கல் ஆம்பர், கற்கால மனிதர்கள் ஆம்பர் மற்றும் லாபிஸ் லசூலி (Lapiz Lazuli) கற்களை தாயத்துகளிலும், மாலைகளிலும் கட்டி வைத்து உபயோகப்படுத்தியுள்ளது அகழ்வாராய்ச்சிகளில் சான்று கிடைத்துள்ளது.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மரங்களில் இருந்து வெளிவரும் பிசின் (Resin) பூமிக்குள் புதைந்து, பூமியின் கீழுள்ள வெப்பத்தாலும் அழுத்தத்தாலும் இறுகி, கற்களாக மாறிவிட்டன (நிலக்கரி போல), ஆம்பர் கற்களின் உட்புறத்தில் சிறு பூச்சிகள், வண்டுகள் அல்லது தாவர பாகங்கள் உறைந்து காணப்படும்.
ஆம்பர் பிசினாக இருந்து காலத்தில் அதன் மேல் ஒட்டிக் கொண்டவையே இவை. மேலும் மேலும் அதில் பிசின் படிய, அவை உட்புறத்தில் மாட்டிக் கொண்டன. பின்னர் கற்களாக மாறும்போது இந்த பூச்சிகளும் மம்மிகள் போன்று உள்ளே அழியாது தங்கிவிடுகின்றன.
ஆம்பர் கற்கள் இளம் மஞ்சள் நிறத்திலிருந்து தேன் போன்ற அடர்ந்த மஞ்சள் நிறம் வரையிலுள்ள பல வண்ணங்களில் கிடைக்கின்றன.

தன்மைகளும் பலன்களும்
வாழ்க்கையில் ஒரு நிலைத் தன்மையை உருவாக்கும்
எதிர்மறை எண்ணங்களை நீக்கி, நம்பிக்கையை வளர்க்கும்
உடலில் உள்ள நேர்சக்தி, எதிர்சக்திகளை (+/-) சமநிலைபடுத்தும் ( திருஷ்டி சுற்றுவது போல்).
நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடத்தில் ஆம்பர் கல்லை வைத்தால் நோயுற்ற இடத்திலுள்ள எதிர்மறையான சக்திகளை (Negative Energy) உறிஞ்சி அகற்றிவிடும், நோய்களை உடலே குணப்படுத்தி கொள்ள வழிவகுக்கும்.
நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்தும்
காது நரம்புகளை வலுவாக்கும்
சுவாசக் கோளாறுகளை நீக்கும்
தைராய்ட், மண்ணீரல் ஆகியவற்றின் இயக்கங்களை அதிகரிக்கும்
நாளமில்லாச் சுரப்பிகள் அனைத்தையும் வலுவடையச் செய்யும்
பல்வலி, தலைவலி, தொண்டைவலி ஆகியவற்றை தடுக்கும்
இக்கற்களை மோதிரத்திலோ மாலையிலோ பதித்து பயன்படுத்த கூடாது.
இடுகையிட்டது SRJ ASTRO நேரம் 10:30 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

ரத்தினங்கள்.
பகுதி - 2
அகேட் (Agate).
இந்த வகை கற்கள் (Chalcedony) சால்சிடோனி என்ற குடும்பத்தை சார்ந்தது. குவார்ட்ஸ் படிகங்கள் ஒன்றின்மேல் ஒன்றாக இணைந்து இக்கற்கள் உருவாகின்றன.
மேற்பரப்பு வழவழப்பாக (மெழுகு போன்று) இருக்கும், குறுக்காக பலவண்ண கோடுகள் ஒரு கை தேர்ந்த ஒவியனால் உருவாக்கப்பட்டவை போன்று காட்சியளிக்கும். பெரும்பாலும் இவற்றில் ஒளி ஊடுருவும் தன்மை கிடையாது. உலகின் பல இடங்களில், பல வண்ணங்களில் கிடைக்கிறது.

தன்மைகளும் பலன்களும்.
நிலைப்படுத்தும் அல்லது சமன் படுத்தும் தன்மை இக்கற்களுக்கு உண்டு, தேவையற்ற பரபரப்பு, படபடப்பு, கை-கால் நடுக்கங்கள் உள்ளவர்கள் இந்த கற்களை பயன்படுத்தினால் உடல் அமைதியடையும்.
மனதை அமைதிப்படுத்தும் சக்தியும் இக்கற்களுக்கு உண்டு, அலைபாயும் மனம், கவன சிதறல்கள், வாழ்க்கையில் எவ்வித பிடிப்பும் குறிக்கோளும் இல்லாது மனம் போனபடி வாழ்க்கை என இருப்பவர்கள் இந்த கற்களை பயன்படுத்தினால் மனம் அமைதியடையும், ஒருமுகப்படும் வாழ்க்கையில் ஒரு படிப்பும் குறிக்கோளும் தோன்றும்.
வயதின் காரணமாக (50 வயதிற்கு மேற்பட்ட) தளர்வடைந்து இருப்பவர்கள் இந்த கற்களை பயன்படுத்தினால் புதிய உற்சாகமும் தெம்பும் ஏற்படும்.
தன்னம்பிக்கையை வளர்க்கும்
பேச்சு திறனை வளர்க்கும்
இல்லற வாழ்க்கையில் நெருக்கத்தையும் புரிதலையும் உருவாக்கும்.
ஆன்மிக அதிர்வுகள் உண்டு, தியானம் போன்றவற்றை தொடர்ந்து செய்பவர்கள் இக்கற்கள் அணிந்தால் மனம் ஒரு நிலைப்படுவது எளிதாகும்.
செரிமான மண்டலத்தை (Digestive System) இக்கற்கள் சமநிலைபடுத்தும், அஜீரண கோளாறுகள், வயிற்றுப்புண், வாயு தொல்லைகள் உள்ளவர்கள் இக்கற்கள் அணிந்தால் நோயின் தீவிரம் குறையும்.
முக்கியமான வகைகள்
Botswana Agate (போட்ஸ்வானா) சாம்பல் நிறத்தில் இருக்கும்.
Fire Agate (நெருப்பு) ஆரஞ்சு, நீலம், பச்சை ஆகிய நிறத்தில் இருக்கும்.
Moss Agate (பாசி) கறுப்பு, கருநீலம், காவி நிறத்தில் இருக்கும்.
ஒவ்வொரு நிறத்திற்கு பலன்கள் மாறுபடும்.
இடுகையிட்டது SRJ ASTRO நேரம் 10:30 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

திங்கள், 19 பிப்ரவரி, 2018

ரத்தினங்கள்.
பகுதி - 1
ரத்தினங்களில் இரு வகைகள் உண்டு.
1. Precious Stones (நவரத்தினம்).
விலை உயர்ந்த ஜாதி கற்களை இந்த வகையில் கூறுவார்கள்,
அவை
1. மாணிக்கம் (Ruby)
2. முத்து (Pearl)
3. மஞ்சள் புஷ்பராகம் (Yellow sapphire)
4. கோமேதகம் (Hessonite)
5. மரகதம் (Emerald)
6. வைரம் (Diamond)
7. வைடூரியம் (Cat's eye)
8. நீலம் (Blue sapphire)
9. பவளம் (Coral).
இந்த ஒன்பது ரத்தினங்களை தவிர இதர பல ரத்தினங்கள் உண்டு, அவைகளை உபரத்தினங்கள் அல்லது அதிர்ஷ்டக்கற்கள் என்று கூறியுள்ளனர்.
2. Semi-Percious Stones (உபரத்தினம்)
இந்த வகையான ரத்தினங்களில் பல நூற்றுக்கணக்கான கற்கள் உள்ளது, இருப்பினும் 75 வகையான கற்கள் தான் அதிக பயன்பாட்டில் உள்ளது.
அவைகள்.
Agate
Albite
Alexandrite
Amazonite
Amber
Amethyst
Andalusite
Apatite
Aquamarine
Arogonite
Aueturine
Azurite
Beryl Stone
Blood Stone
Byrite Stone
Calcite
Carnelian
Celestine
Chalce dony
Chrysolite
Chrysocolla
Citrine
Fluorite
Garnet
Gold Stone
Hematite
Jade Stone
Jasper Stone
Jet Stone
Jacinth Stone
Kidney Stone
Kunzite
Labradorite
Lapiz Lazuli
Larli
Lime Stone
Load Stone
Magnetite
Malachite
Meteorite
Moon Stone
Morganite
Neeli Stone
Obsidian
Onyx
Opal
Paras Stone
Peridot
Pyrite
Pyrope Garnet
Quartz Stone
Rhodonite
Rock Crystal Stone
Romni Stone
Rutile
Sard Stone
Sardonyx
Serpentine
Smithsonite
Sodalite
Sonamakki Stone
Spinel
Star Ruby Stone
Topaz
Tourmaline
Turquoise
Tiger's eye
White Coral
White Sapphire
Zircon.
இதிலும் 35 வகையான கற்களை மட்டுமே மிகுதியாக பயன்படுத்தப்படுகிறது.
இடுகையிட்டது SRJ ASTRO நேரம் 10:30 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

சனி, 17 பிப்ரவரி, 2018

கோச்சாரம்.

கோச்சார பலன்களை பற்றி பலரும் என்னிடத்தில் (கேட்ட) கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறும் வகையில் இந்த பதிவு இருக்கும்.
கோச்சாரம் = கோள் (கிரகம்) + சாரம்(பயணம் செய்யும் பாதை). ஒரு கிரகம் தான் பயணம் செய்யும் பாதையை வைத்து பலன்கள் கூறும் விதமே கோச்சார பலன்கள் ஆகும்.
அவைகள் பயணம் செய்யும் பாதைகள் தன் நட்சத்திரங்கள். இதில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் உண்டு. இதில் பயணம் செய்யும் போது ஒருசில ராசிகளின் மீது அவைகளின் பார்வை (கதிர்வீச்சு) படும், அது நம் ராசிக்கு எந்தெந்த பாவங்களின் மீது விழுகிறது அதை பெருத்து நல்ல/ தீய பலன்கள் கிடைக்கும். (குருவின் பார்வை என்று கூறுவார்கள் அல்லவா அது போல)
இதில் ஒரு கிரகத்தை மட்டுமே வைத்து எந்த பலன்களையும் கூற முடியாது. ஏனென்றால் ஒரு கிரகத்தால் வரும் நன்மை தீமைகள் மற்ற கிரகங்களின் பார்வையால், சேர்க்கையால் மாறிவிடும்.

கோச்சாரம் கிரகங்கள் மற்றும் நம் பிறக்கும் போது இருந்த கிரகங்களும் (கிரகம் இருந்த இடம்) சந்திக்கும் நிகழ்வு தான் நாம் நம் வாழ்வில் சந்திக்கும் பலபலன்கள் ஆகும். ( கிரகங்கள் சுற்றி கொண்டே தான் இருக்கும், நாம் பிறந்த போது இருக்கும் இடத்தை கட்டுவது தான் ஜாதகம்.)
இவை அனைத்தையும் தண்டி ஒரு கிரகத்தால் சில/பல தீமைகளை தனித்து நின்று தர முடியும் என்று சில பாவங்கள் உண்டு.
அவைகளை கடும் கேடு செய்யும் இடங்கள் / ஸ்தானங்கள் என்று கூற முடியும்.
அவை சந்திரன் நின்ற ராசிக்கு ( நம் ஜென்ம ராசிக்கு இந்த ஸ்தானங்கள் ஆகும்.
ஜென்ம ராசியில் (1ல்) சனி சஞ்சரிக்கும் காலம்.
ஜென்ம ராசிக்கு 3ஆம் இடத்தில் குரு சஞ்சரிக்கும் காலம்.
ஜென்ம ராசிக்கு 4ஆம் இடத்தில் புதன் சஞ்சரிக்கும் காலம்.
ஜென்ம ராசிக்கு 5ஆம் இடத்தில் சூரியன் சஞ்சரிக்கும் காலம்.
ஜென்ம ராசிக்கு 6ஆம் இடத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கும் காலம்.
ஜென்ம ராசிக்கு 7ஆம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கும் காலம்.
ஜென்ம ராசிக்கு 8ஆம் இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம்.
ஜென்ம ராசிக்கு 9ஆம் இடத்தில் ராகு சஞ்சரிக்கும் காலம்.
ஜென்ம ராசிக்கு 11ஆம் இடத்தில் கேது சஞ்சரிக்கும் காலம்.
இந்த காலங்களில் கடும் கேடு (மிக உக்கிரமான தீய பலன்கள் நடைபெறும்).
இடுகையிட்டது SRJ ASTRO நேரம் 12:00 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
செல்வத்திற்குரிய வீட்டு பூஜை குறிப்புகள்-

1. தினசரி காலையும், மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும்.
2. தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.
3. நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது. தூய்மையான காற்றும் கிடைக்கும்.
4. வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள். இது இறை சக்தியைக் குறைக்கும். அங்கு ஆன்மீக அதிர்வுகள் ஏற்படாது. மிகக் குறைந்த பூஜை பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.
5. சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால், அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சிறிது சிறிதாக நீக்கும்.
6. செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பூறை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். மார்பிள், கிரானைட் தரைகளாக இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும். அமாவாசை, பவுர்ணமி, வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும் இவ்வாறு செய்ய வேண்டும்.
7. நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது துவாதசன தரிசனம் எனப்படும்.
8. அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.
9. அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க கூடாது.
10. பொதுவாக நெற்றிக்கு திலகமிடாமல் பூஜை செய்யக்கூடாது.
11. பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது. இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது.
12. கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்கும் இடத்தில் இருக்கவும் வேண்டாம்.
13. சாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களைக் சூடக்கூடாது.
14. வீட்டின் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகளும், விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.
15. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.
16. அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஐந்தரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலன்களும் நிச்சயம் கிடைக்கும். எக்காரணம் கொண்டும் எவர்சில்வர் விளக்குகளைப் பூஜை அறையில் விளக்கேற்றப் பயன்படுத்தக் கூடாது.
17. நெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர சக்தியும் கிடைக்கும்.
18. ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.
19. விளக்கேற்றும் போது மற்றவர்கள் ஏற்றி வைத்த விளக்கின் மூலமாக நம் விளக்கை ஏற்றக்கூடாது. தீப்பெட்டி மூலமாக தான் விளக்கேற்ற வேண்டும்.
20. ஓம் என்ற மந்திரத்தை பூஜை அறையில் பத்மாசனத்தில் அமர்ந்து ஒருவர் தொடர்ந்து கூறி தியானம் செய்து வந்தால் அவரை எப்பேர்ப்பட்ட வினைப்பயனும், வியாதியும் நெருங்காது.
21. வீட்டில் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும்.
22. சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது.
23. ருத்ரம், சமகம் போன்றவற்றை வீட்டில் காலையில் தினமும் கேட்பது நல்லது.
24. நாம் வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாரே தொழுதல் குற்றமாகும். அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும்.
25. யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும். தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய் உடைக்கக் கூடாது.
26. பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.
27. பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும்.
28. பூஜை அறையில் தெய்வப்படங்களை வடக்குப் பார்த்து வைத்தால் சாபமுண்டாகும்.
29. விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.
30. ஈர உடையுடனும், ஓராடையுடனும், தலைகுடுமியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.
31. ஈர ஆடையுடன் வழிபட நேருமானால் ஈர உடையை, ஓம் அஸ்த்ராய பட் என்ற 7 முறை கூறி உதறி உதடுத்தலாம்.
32. சுப்ரபாதத்தை தினமும் காலை வேளையில் மட்டுமே கேட்க வேண்டும். அவ்வாறு கேட்க முடியாத நிலையில் மாலையில் கேட்பது அவ்வளவு உசிதமானதில்லை எனப்படுகிறது.
33. பகவானின் மந்திரத்தை சொல்லி பிரார்த்திக்க தெரிந்தவர்களுக்கு எப்போதும் எல்லாமே வெற்றிதான். காலையில் விழித்தவுடன் நாராயணனையும் இரவு தூங்கு முன் சிவபெருமானையும் நினைக்க வேண்டும்.
34. கஷ்டங்கள் நீங்க நினைத்தது நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவதுதான் தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அணுக்கள் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம்.
35. தீபத்தில் உள்ள எண்ணெய் தான் எரிய வேண்டுமே தவிர திரி அல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
36. விளக்கை ஏற்றும்போது வீட்டில் பின் வாசல் இருந்தால் அதன் கதவை சாத்தி விட வேண்டும்.
37. காலையில் நின்று கொண்டு செய்யும் ஜெபத்தால் இரவில் செய்த பாவமும், மாலையில் உட்கார்ந்து கொண்டு செய்யும் ஜெபத்தால் பகலில் செய்த பாவமும் தொலைகிறது.
38. விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது கைவிரலால் எண்ணெய்யிலுள்ள தூசியை எடுப்பதோ திரியை தூண்டுதோ கூடாது.
39. எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள் அணைக்கக் கூடாது.
40. ஆண்கள் தெய்வங்களை வழிபடும்போது தையல் உள்ள உடைகளை அணியக் கூடாது.
41. ஈரத்துணியை உடுத்திக் கொண்டு பூஜைகள், ஜபங்கள் செய்யக்கூடாது.
42. வாழைப் பழத்தில் பத்தியை சொருகி வைக்கக் கூடாது.
43. தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு நிவேதனம் செய்யக்கூடாது.
44. புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
45. மா இலை கட்டுவதால் பல தோஷங்கள் நீங்கும். மா இலை தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக், பித்தளை முதலியவற்றால் மாவிலை போன்று தோரணம் கட்டலாகாது.
46. தெய்வப் படம், குத்து விளக்குளில் மின் வயரால் அலங்காரம் செய்யக்கூடாது.
47. தினசரி பிரார்த்தனை என்பது வீட்டு வாசலில் ஓடி வரும் தெளிந்த ஆறு போன்றது. யார் ஒருவர் அதில் தன்னை சுத்தி செய்து கொள்கிறானோ அவர் தன்னை நிர்மலமாக்கிக் கொள்கிறார்.
48. வீட்டில் பூஜை செய்து முடித்ததும் துளசியை கையில் வைத்துக் கொண்டு என் பக்தன் எங்கு சென்றாலும் நான் அவனைப்பின் தொடர்ந்து செல்வேன் என பகவான் கூறியுள்ளார். அதனால் ஒருவர் கையில் துளசி இருக்கும் வரை விஷ்ணுவின் துணை அவருக்கு உண்டு.
49. தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும்போது வெற்றிலை மற்றும் பாக்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் (2, 4, 6, 8, 10) வைக்க வேண்டும்.
50. பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள், தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில் நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற பொருட்களின் மீது வைக்க வேண்டும்.
51. வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும். ஏனெனில் வலம்புரிச் சங்கிலே மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது மகான்களின் கூற்று. பல மகோன்னதம் ஒரு வலம்புரிச் சங்கிற்கு உண்டு.
52. நிர்மால்யம் என்பது பூஜையின் முதல் நாள் போட்டு வாடிய புஷ்பங்களை குறிக்கும். நிர்மால்யங்களை காலில் படாமல் கண்களில் ஒற்றிக் கொண்டு தாம்பாளம், கூடையில் போட்டு வைத்திருந்து ஓடும் தண்ணீரில் விட வேண்டும்.
53. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வெண்ணை உருக்கக் கூடாது. காரணம் மேற்படி கிழமைகளில் லட்சுமிக்கு உகந்தவை ஆதலாலும் வெண்ணையில் மகாலட்சுமி இருப்பதாலுமே வெண்ணை உருக்கக் கூடாது என்பார்கள்.
54. உறவினர்களை வெளியூர் செல்ல வழியனுப்பிய பிறகு பூஜை, முதலியவைகளை செய்யக் கூடாது.
55. பெரியவர்களும், சிறுவர்களும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் ஆகியவற்றை வாய்விட்டுத் தினமும் படிக்க வேண்டும். வாய்விட்டு படிப்பதால் குரல் உறுப்புகள் பலம் கொள்ளும். அதனால் மார்பு ஆரோக்கியம் பெறும். சுவாசப் பைகளுக்கும் நல்லது.
56. பூஜை செய்யும் நேரத்திலாவது பெண்கள் ஸ்டிக்கர் போட்டு அணியாது குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும்.
57. பெண்கள் வகிடு ஆரம்பத்தில் குங்குமப் போட்டு கட்டாயம் வைக்க வேண்டும். ஸ்ரீமகாலட்சுமியும், அம்பாளும் வகிட்டில்தான் நிரந்தர வாசம் செய்வதால் சுமங்கலிகளுக்கு சகல சவுபாக்கியங்களையும், மங்கலத்தையும் அளிப்பார்கள்.
58. வெள்ளியன்று குத்து விளக்கிற்கு குங்குமம், சந்தனம் பொட்டிட்டு, பூ சார்த்தி, குங்குமம், புஷ்பம், மஞ்சள் அட்சதையால் குத்து விளக்கு பூஜை செய்வது குடும்ப நலத்திற்கு நல்லது.
59. வீட்டில் துளசியை வளர்ப்பது மிகச் சிறப்பு. காலையில் எழுந்ததும் துளசியைத் தரிசிப்பதால் நம் தீவினைகள் மறையும். தானம் கொடுக்கும்போது சிறிது துளசியுடன் தானம் கொடுக்க வேண்டும். துளசியோடு தரப்படாத தானம் வீண்.
60. பூஜை அறையில் தெய்வங்களுக்குப் படைப்பதற்கு வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். சீவல் பொட்டலத்தை வைக்கக் கூடாது. வெற்றிலையை இரட்டைப் படை எண்களில்தான் வைக்க வேண்டும். இரண்டு வெற்றிலைக்கு ஒரு பாக்கு என்ற கணக்கில் எவ்வளவு வெற்றிலை வைக்கிறோமோ அந்த அளவு பாக்கு வைக்க வேண்டும்.
61. வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும்.
62. வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது புறம் வருமாறு வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி சாமிக்கு வலதுபுறம் இருக்கும்.
63. சாமிக்கு படைக்கும்போது வாழை இலை போட்டு படைக்கிறோம். அப்படி வாழை இலை போடும் போது வாழை மரத்திலிருந்து நறுக்கப்பட்ட பகுதி சுவாமி படத்திற்கு வலது பக்கம் வரவேண்டும்.
64. மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு முன் தான தருமம் செய்வதென்றால் செய்து விடுங்கள். விளக்கு ஏற்றிய பின் தான தருமம் செய்யாதீர்கள்.
65. குழந்தைகளுக்கு ஆன்மிக வழிகாட்டும் ஸ்லோகங்களும், நமது நீதி நூல்களில் உள்ள நல்ல பழக்க வழக்கங்களும் கற்றுத் தர வேண்டும்.
66. பெண்கள் தலைமுடியை வாரி முடிந்து முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். தலையை விரித்து போட்டு இருந்தால் லட்சுமி தேவி தங்க மாட்டாள்.
67. பூஜை செய்யும்போது கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப் பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும், பாதமும் திறந்து நிலையில் இருக்க வேண்டும்.
68. செல்வத்திற்குரிய தெய்வங்களான வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர் படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு மாட்டக்கூடாது.
69. பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால் தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப் பார்த்து படங்களை வைக்கவும்.
70. பூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து கொண்டு உட்கார்ந்து பூஜை செய்யக்கூடாது.
71. பூஜை அறையில் அதிக படங்களையும், தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம் என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக் கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும் இடையில் போதிய இடம் விட்டு வைக்க வேண்டும்.
72. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
73. அன்னம் முதலியவற்றை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.
74. திங்கட்கிழமையன்று பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை கையால் தொடக்கூடாது.
75. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.
76. விஷ்ணுவை வணங்கி வீடு திரும்புபோது லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே விஷ்ணு கோவிலிலிருந்து வீடு திரும்புமுன் அங்கே உட்காரக் கூடாது.
இடுகையிட்டது SRJ ASTRO நேரம் 11:40 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

என்னைப் பற்றி

SRJ ASTRO
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2023 (1)
    • ►  மே (1)
  • ►  2019 (35)
    • ►  அக்டோபர் (2)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (5)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (4)
  • ▼  2018 (117)
    • ►  டிசம்பர் (15)
    • ►  செப்டம்பர் (9)
    • ►  ஆகஸ்ட் (20)
    • ►  ஜூலை (32)
    • ►  ஏப்ரல் (7)
    • ►  மார்ச் (21)
    • ▼  பிப்ரவரி (13)
      • எள் தரும் நன்மைகள்
      • சோற்றுப்புக்குப் பதிலாக பாறை உப்பு ROCK SALT என...
      • தருமம் வழியில் செல்லுங்கள். தருமம் அல்லது அற...
      • நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே .... நரகத்தில...
      • நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே .... நரகத்தில்...
      • சர்வாஷ்டக வர்க்கம் பலன்கள். சர்வாஷ்டக வர்க்க சக...
      • அஷ்டவர்க்கம் அஷ்டகவர்க்கம் (அஷ்ட = எட்டு) (வர...
      • ரத்தினங்கள். பகுதி - 4 அமீதிஸ்ட் (Amethyst) இக...
      • ரத்தினங்கள். பகுதி - 3 ஆம்பர் (Amber). மனித கு...
      • ரத்தினங்கள். பகுதி - 2 அகேட் (Agate). இந்த வகை க...
      • ரத்தினங்கள். பகுதி - 1 ரத்தினங்களில் இரு வகைகள்...
      • கோச்சாரம். கோச்சார பலன்களை பற்றி பலரும் என்னிட...
      • செல்வத்திற்குரிய வீட்டு பூஜை குறிப்புகள்- 1. தின...
  • ►  2017 (7)
    • ►  ஜூலை (7)
  • ►  2016 (21)
    • ►  மார்ச் (21)
SRJ. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: enot-poloskun. Blogger இயக்குவது.