திருமண வாழ்க்கை வரமா? சாபமா?
திருமண வாழ்க்கை என்றால் பலர் கூறுவது அது சாபம் என்றே, (சிலர் மட்டுமே வரம் என்று கூறுவார்) ஏனென்றால் எனக்கு வாய்த்த கணவன்/ மனைவி அப்படி என்பார்கள்,
இதற்கு முழு காரணம் நம் கர்மா தான்.
நாம் முற்பிறவியில் செய்த பாவம் பாதி இப்பிறவியில் செய்த பாவம் மீதி,
திருமண வாழ்க்கை வரம்.
லக்னாதிபதி நல்ல நிலையில் இருக்க வேண்டும்,
குடும்ப ஸ்தானாதிபதி எனப்படும் 2ம் அதிபதி நல்ல நிலையில் இருக்க வேண்டும்,
களத்திர ஸ்தானாதிபதி எனும் 7ம் அதிபதி நல்ல நிலையில் இருக்க வேண்டும்,
களத்திரகாரகன் சுக்கிரன் / செவ்வாய் நல்ல நிலையில் இருக்க வேண்டும்,
(ஆண் ஜாதகத்தில் சுக்கிரன், பெண் ஜாதகத்தில் செவ்வாய்)
7ம் இடம், 8ம் இடம் சுத்தமாக இருத்தல்
இதை தவிர அயன சயன போக ஸ்தானம் எனும் 12ம் இடத்தை பார்க்க வேண்டும்.
(நல்ல நிலையில் என்றால் உச்சம், ஆட்சி பெற்று இருத்தல், திரிகோண (1,5,9) ஸ்தானங்களில், கேந்திர (4,7,10) ஸ்தானங்களில் அமர்ந்து இருத்தல், சுபர் சேர்க்கை / பார்வை பெற்று இருத்தல்)
இந்த விஷயங்கள் நல்ல நிலையில் இருந்தால் திருமண வாழ்க்கை (சொர்கமாக) சிறப்பாக இருக்கும்.
திருமண வாழ்க்கை சாபம்.
லக்னாதிபதி கெட்டு இருந்தால்,
2ம் அதிபதி கெட்டு இருத்தல்,
7ம் அதிபதி கெட்டு இருத்தல்,
சுக்கிரன் கெட்டு இருந்தால்,
செவ்வாய் கெட்டு இருந்தால் மற்றும்
12ம் இடத்தில் பாவிகள் இருப்பது.
(கெட்டு என்றால் நீச்சம் அடைந்து இருப்பது, 6,8,12 என்ற மறைவு ஸ்தானத்தில் இருப்பது, மறைவு ஸ்தானாதிபதி உடன் சேர்ந்து இருப்பது, அஸ்தங்கம் அடைவது, பகை ஸ்தானம் அமர்வது, பகை கிரகங்கள் உடன் சேர்வது, மற்றும் ராகு / கேது உடன் இனைந்து இருப்பது.
திருமண வாழ்வில் பல பிரச்னைகளை தரும், திருமண ஆகாமல் இருப்பது, தாமத திருமணம், திருமண வாழ்க்கையில் பிரச்சினை/ போராட்டம், மனதளவில் பிரிவு, விவாகரத்து, களத்திர இழப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
இந்த விஷயங்கள் இருந்தால் திருமண வாழ்க்கை (நகரமாக) போராட்டமாக இருக்கும்.
இதற்கு பரிகாரம் பொதுவாக திருமண வாழ்வில் பிரச்சினை என்றால் சில பரிகாரங்களை செய்ய வேண்டும் என்று கூறி இருப்பதை செய்தால் பலன் கிடைக்காது, ஏனெனில் அவரவர்கள் ஜாதகத்தில் எந்த காரணத்தால் பிரச்சனை ஏற்படுகிறது என்று பார்த்து அதற்கான பரிகாரம் செய்ய வேண்டும்.
(நம்முடைய அந்த தீய கர்மாவை குறைக்க வேண்டும்).
திருமண வாழ்க்கை என்றால் பலர் கூறுவது அது சாபம் என்றே, (சிலர் மட்டுமே வரம் என்று கூறுவார்) ஏனென்றால் எனக்கு வாய்த்த கணவன்/ மனைவி அப்படி என்பார்கள்,
இதற்கு முழு காரணம் நம் கர்மா தான்.
நாம் முற்பிறவியில் செய்த பாவம் பாதி இப்பிறவியில் செய்த பாவம் மீதி,
திருமண வாழ்க்கை வரம்.
லக்னாதிபதி நல்ல நிலையில் இருக்க வேண்டும்,
குடும்ப ஸ்தானாதிபதி எனப்படும் 2ம் அதிபதி நல்ல நிலையில் இருக்க வேண்டும்,
களத்திர ஸ்தானாதிபதி எனும் 7ம் அதிபதி நல்ல நிலையில் இருக்க வேண்டும்,
களத்திரகாரகன் சுக்கிரன் / செவ்வாய் நல்ல நிலையில் இருக்க வேண்டும்,
(ஆண் ஜாதகத்தில் சுக்கிரன், பெண் ஜாதகத்தில் செவ்வாய்)
7ம் இடம், 8ம் இடம் சுத்தமாக இருத்தல்
இதை தவிர அயன சயன போக ஸ்தானம் எனும் 12ம் இடத்தை பார்க்க வேண்டும்.
(நல்ல நிலையில் என்றால் உச்சம், ஆட்சி பெற்று இருத்தல், திரிகோண (1,5,9) ஸ்தானங்களில், கேந்திர (4,7,10) ஸ்தானங்களில் அமர்ந்து இருத்தல், சுபர் சேர்க்கை / பார்வை பெற்று இருத்தல்)
இந்த விஷயங்கள் நல்ல நிலையில் இருந்தால் திருமண வாழ்க்கை (சொர்கமாக) சிறப்பாக இருக்கும்.
திருமண வாழ்க்கை சாபம்.
லக்னாதிபதி கெட்டு இருந்தால்,
2ம் அதிபதி கெட்டு இருத்தல்,
7ம் அதிபதி கெட்டு இருத்தல்,
சுக்கிரன் கெட்டு இருந்தால்,
செவ்வாய் கெட்டு இருந்தால் மற்றும்
12ம் இடத்தில் பாவிகள் இருப்பது.
(கெட்டு என்றால் நீச்சம் அடைந்து இருப்பது, 6,8,12 என்ற மறைவு ஸ்தானத்தில் இருப்பது, மறைவு ஸ்தானாதிபதி உடன் சேர்ந்து இருப்பது, அஸ்தங்கம் அடைவது, பகை ஸ்தானம் அமர்வது, பகை கிரகங்கள் உடன் சேர்வது, மற்றும் ராகு / கேது உடன் இனைந்து இருப்பது.
திருமண வாழ்வில் பல பிரச்னைகளை தரும், திருமண ஆகாமல் இருப்பது, தாமத திருமணம், திருமண வாழ்க்கையில் பிரச்சினை/ போராட்டம், மனதளவில் பிரிவு, விவாகரத்து, களத்திர இழப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
இந்த விஷயங்கள் இருந்தால் திருமண வாழ்க்கை (நகரமாக) போராட்டமாக இருக்கும்.
இதற்கு பரிகாரம் பொதுவாக திருமண வாழ்வில் பிரச்சினை என்றால் சில பரிகாரங்களை செய்ய வேண்டும் என்று கூறி இருப்பதை செய்தால் பலன் கிடைக்காது, ஏனெனில் அவரவர்கள் ஜாதகத்தில் எந்த காரணத்தால் பிரச்சனை ஏற்படுகிறது என்று பார்த்து அதற்கான பரிகாரம் செய்ய வேண்டும்.
(நம்முடைய அந்த தீய கர்மாவை குறைக்க வேண்டும்).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக