வெள்ளி, 13 ஏப்ரல், 2018

அட்சய திரிதியை. (18.04.2018)

அட்சய திரிதியை. (18.04.2018)

சில மாதங்களில் வரும் நட்சத்திரங்களுக்கும், திதிகளுக்கும் தனி சிறப்பு உண்டு.
அப்படி அமாவாசை தினத்தை அடுத்து வரும் திரிதியைத் திருநாள் திருமகளுக்குரிய மகிமைமிக்கதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதிலும் சித்திரை மாதம் அமாவாசைக்கு பின்னால் வரும் வளர்பிறை திரிதியை திதி ‘‘அட்சய திரிதியை’’ என போற்றப்படுகிறது.
‘‘அட்சயம்’’ என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள் (சயம்-தேய்தல், அட்சயம் - தேயாது எதிர்கருத்துள்ள சொல்).

ஜோதிட ரீதியாக ஆராய்ந்தால் நவகிரகங்களில் தந்தைக்கு உரிய கிரகமான சூரியனும், தாய்க்கு உரிய கிரகமான சந்திரனும் ஒரே நேரத்தில் உச்ச பலத்துடன் சஞ்சரிக்கும் காலமே அட்சய திரிதியை நாள்.
மேஷத்தில் சூரியனும், ரிஷபத்தில் சந்திரனும் இருக்கும் நாள் இது. சூரியன் பிதுர்க்காரகர். சந்திரன் மாத்ருகாரகர். பெரியவர்கள் வாழ்த்தும்போது ‘சூரிய சந்திரர்போல் நிலைத்து வாழ்க’ என்பார்கள். நீடூழி வாழ ஆத்மகாரகனாகிய சூரியனும் மனோகாரகனாகிய சந்திரனும் வலுப்பெற்றிருப்பது அவசியமாகும். அவ்வாறு சூரியனும் சந்திரனும் பலம் பெற்றுள்ள அட்சய திரிதியை நாளில், நாம் செய்யும் நற்காரியங்கள் பல்கிப்பெருகும். அதனால் நமக்குக் கிடைக்கும் பலன்களும் பன்மடங்காகும். அன்று நாம் வாங்கும் பொருட்களும் அழியாது நிலைத்திருக்கும். அட்சய திரிதியையில், எதைச் செய்தாலும் வளர்ந்து கொண்டே இருக்கும். அன்று கொடுக்கும் தானம், அளவற்ற புண்ணியத்தைக் கொடுக்கும்.

எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திரிதியை நன்னாளை அட்சய திருதியை என கொண்டாடுகின்றனர்.
யுகங்களுள் இரண்டாவது யுகமான திரேதாயுகம், ஓர் அட்சய திரிதியை திருநாளில்தான் ஆரம்பாமாயிற்றாம். தன் குருகுல நண்பனான ஏழைக் குசேலன் தன்னைப் பார்க்க வந்தபோது அவன் கொடுத்த மூன்று பிடி அவலைத் தின்று, பதிலாக கோடி கோடி செல்வங்களைக் கொட்டிக் கொடுத்து குசேலனை கிருஷ்ண பரமாத்மா குபேரனாக்கிய திருநாளும் இந்த அட்சய திரிதியை நன்னாளில்தான்!
தசாவதாரங்களில் பரசுராமர் அவதரித்த நாள்,
சிவனுக்கு காசி அன்னபூரணி அன்னபிட்சை அளித்த நாள்,
ஐஸ்வர்ய லட்சுமி அவதரித்த நாள்,
சங்க நிதி பத்மநிதியை குபேரன் பெற்ற நாள்,
மகாவிஷ்ணுவின் வலமார்பில் மகாலட்சுமி இடம் பிடித்த நாள் என பல சிறப்புக்களை உடையது அட்சய திரிதியை நாள்.

கௌரவர்கள் சபையில் துச்சாதனன் பாஞ்சாலியின் உடையை உருவி மானபங்கப்படுத்தினான். அப்போது கண்ணபிரான் அட்சய என்று கூறி கைகாட்டி அருள, துச்சாதனன் உருவ உருவ புடவை வளர்ந்து கொண்டே இருந்த நாள் இந்த அட்சய திருதியை நாளில்தான். இதனால்தான் பாஞ்சாலி மானம் காப்பாற்றப்பட்டது.

இந்நாளில் சுயநலத்துடன் செய்கிற காரியங்களைவிட, பொதுநலத்துடன் கூடிய காரியங்கள் செய்வது மிகவும் சிறப்பாகும்.
ஏழை நோயாளிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்யலாம். சாலையோரம் வசிப்பவர்களுக்கு வேட்டி, சேலை, போர்வை தானம் தரலாம். ஏழை, எளியவர்கள், இல்லாதோருக்கு ஆடை தானம் தருவதால் சுகபோக வாழ்வு கிட்டும்.
ஏழை மாணவர் கல்விக்கு உதவலாம். கல்விக்கு தேவையான புத்தகங்கள், நோட்டு, பேனா, பென்சில் போனறவற்றை
ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களுக்கு சென்று உணவு, இனிப்புகள் வழங்கலாம்.
கோயில்களில் அன்னதானம் செய்யலாம். குறிப்பாக தயிர் சாதம், தேங்காய் சாதம், நீர் மோர், பழங்கள் கலந்த பால் சாதம், பால் பாயசம் போன்றவை வழங்கலாம்.

இந்த நாளில் குலதெய்வ ஆலயத்துக்கு சென்று வழிபடலாம். பிரசித்தி பெற்ற தலங்களுக்கும் செல்லலாம். குழந்தைகளின் கல்விக்கு தேவையான புத்தகங்கள், நோட்டு, பேனா, கம்ப்யூட்டர் போன்ற சாதனங்கள் வாங்கலாம். சுபகாரியங்களுக்கு பிள்ளையார் சுழி போடலாம். வங்கியில் புதுக்கணக்கு ஆரம்பிக்கலாம். டெபாசிட் செய்யலாம். புதிய பூஜைகள், விரதங்கள், விட்டுப்போன வழிபாடுகளைத் தொடங்கலாம். அரிசி, பருப்பு போன்ற மளிகை பொருட்கள் வாங்கலாம். தயிர், பால் சாதம் தானம் செய்வதால் ஆயுள், ஆரோக்கியம் கூடும். ஆதரவற்ற முதியோர்கள், சிறார் இல்லங்களிலும் ஏழைகளுக்கும் இனிப்பு வழங்குவதால் திருமண பிராப்தம் கூடி வரும். அரிசி, பருப்பு, தானியங்களை தானம் செய்தால் விபத்துகள் நேராமல் இறைவன் காத்தருள்வார்.

பசு, நாய், பட்சிகளுக்கு உணவளிப்பதால் மன அமைதி, செல்வ வளம் ஏற்படும்.
திருமகள் அம்சமாக நல்ல மனைவி அமைய விரும்புவோர், தங்களுக்கு நல்ல மருமகள் வர விரும்பும் பெற்றோர், அட்சய திரிதியையில், திருக்கோயிலில் வைத்து பெண் பார்க்கும் வைபவத்தையோ நிச்சயதார்த்தத்தையோ நடத்தினால் விரும்பியபடி மணமகள் அமைவாள்.
அட்சய திரிதியை தினத்தில் தங்கம், வைர, ரத்தின ஆபரணங்கள், வெள்ளி பொருட்கள், ஆடம்பர பொருட்கள் வாங்க வேண்டும் என்ற வழக்கம் உருவானது சமீபகாலமாகத்தான். அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் பல மடங்காக பெருகும் என்பது ஒரு நம்பிக்கை. இது நகை வியாபாரிகளால் பெரிதும் விளம்பரம் செய்யபட்டவை.
அப்படி வாங்க வேண்டுமனால் வெள்ளை பொருட்கள் வாங்கினாலும், தானம் செய்தாலும் மிகுந்த பலன்கள் கிட்டும்.

தானம் செய்ய சிறந்த பொருட்கள் (வெள்ளி, பால், தயிர், மோர், உப்பு, சாதம், நோட்டு, புத்தகம், குடிநீர், வெண்மொச்சை)
அட்சய திரிதியை நாளில் தான தர்மங்கள், நற்செயல்களுக்கு மட்டுமே சாஸ்திரத்தில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. மேலும் நல்ல காரியங்கள் தொடங்கவும் சுபவிஷயங்களை பேசவும் ஏற்ற நாளாகும். ‘மகிழ்வித்து மகிழ்’ என்று சொல்வார்கள். எனவே, மற்றவர்கள் மகிழும் வகையில் தான தர்மங்கள் செய்து, பல புண்ணியங்கள் பெற்று ஆயுள், ஆரோக்கியம் நிறைந்த வளமான வாழ்வு பெற்றுக் கொள்ளலாம்.

ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், பாற்கடலில் ஸ்ரீலட்சுமியாகவும், இந்திரனிடம் சுவர்க்க லட்சுமியாகவும், அரசர்களிடம் ராஜ லட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும், பசுக்களில் கோமாதாவாகவும், யாகங்களில் தட்சிணையாகவும், தாமரையில் கமலையாகவும், அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாஹா தேவியாகவும் விளங்குகிறாள். இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான். எனவே,
அட்சய திரிதியை அன்று ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத ஸ்ரீலட்சுமி தேவியை மற்றும் தானத்திற்கு அதிபதி காஞ்சி காமாட்சி அம்மனை பூஜிக்க வேண்டும்.

வெள்ளி, 6 ஏப்ரல், 2018

பஞ்ச பட்சி சாஸ்திரம் பகுதி - 11 (முற்று).

பஞ்ச பட்சி சாஸ்திரம்.
பகுதி - 11 (முற்று).

கிருஷ்ணபட்சம் திருவோணம் முதல் அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி வரை பிறந்த நட்சத்திரகாரர்கள் ஜென்ம பட்சி வல்லூறு,

சுக்லபட்சம் மற்றும் கிருஷ்ணபட்சத்திற்கு ஏற்ற நேர கணித அட்டவணை சுலபமாக புரியும் வகையில் காண்பிக்கபட்டு உள்ளன.

இந்த உதாரண நேர அட்டவணை சூரிய உதயம் சரியாக காலை 6.00 மணி என்ற கணக்கில் கட்டப்பட்டுள்ளன, நீங்கள் கணக்கிடும் நாளின் சூரிய உதயத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து கொள்ளவோண்டும்.

படுபட்சி நாட்கள் அல்லது மரண நாட்கள் எனப்படும் நாட்கள் சுபம் தவிர்ப்பது நல்லது, ஜென்ம பட்சியின் ஆட்சி, ஊண் நேரங்கள் சிறப்பு.

முழு பஞ்ச பட்சி சாஸ்திரம் விபரங்களை, 15 பக்கம் கொண்ட PDF உங்கள் தனிப்பட்ட நட்சத்திரம், பட்சம், அபஹாரம், முறையில் வேண்டுமெனில் மின்அஞ்சல் முலம் தொடர்பு கொண்டு பெறலாம்,
srjastrology@gmail.com.




வியாழன், 5 ஏப்ரல், 2018

பஞ்ச பட்சி சாஸ்திரம் பகுதி - 10

பஞ்ச பட்சி சாஸ்திரம்.
பகுதி - 10

கிருஷ்ணபட்சம் அனுஷம் முதல் கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் வரை பிறந்த நட்சத்திரகாரர்கள் ஜென்ம பட்சி ஆந்தை,

சுக்லபட்சம் மற்றும் கிருஷ்ணபட்சத்திற்கு ஏற்ற நேர கணித அட்டவணை சுலபமாக புரியும் வகையில் காண்பிக்கபட்டு உள்ளன.

இந்த உதாரண நேர அட்டவணை சூரிய உதயம் சரியாக காலை 6.00 மணி என்ற கணக்கில் கட்டப்பட்டுள்ளன, நீங்கள் கணக்கிடும் நாளின் சூரிய உதயத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து கொள்ளவோண்டும்.

படுபட்சி நாட்கள் அல்லது மரண நாட்கள் எனப்படும் நாட்கள் சுபம் தவிர்ப்பது நல்லது, ஜென்ம பட்சியின் ஆட்சி, ஊண் நேரங்கள் சிறப்பு.

முழு பஞ்ச பட்சி சாஸ்திரம் விபரங்களை, 15 பக்கம் கொண்ட PDF உங்கள் தனிப்பட்ட நட்சத்திரம், பட்சம், அபஹாரம், முறையில் வேண்டுமெனில் மின்அஞ்சல் முலம் தொடர்பு கொண்டு பெறலாம்,
srjastrology@gmail.com.



புதன், 4 ஏப்ரல், 2018

திருமண வாழ்க்கை வரமா? சாபமா?

திருமண வாழ்க்கை வரமா? சாபமா?

திருமண வாழ்க்கை என்றால் பலர் கூறுவது அது சாபம் என்றே, (சிலர் மட்டுமே வரம் என்று கூறுவார்) ஏனென்றால் எனக்கு வாய்த்த கணவன்/ மனைவி அப்படி என்பார்கள்,
இதற்கு முழு காரணம் நம் கர்மா தான்.
நாம் முற்பிறவியில் செய்த பாவம் பாதி இப்பிறவியில் செய்த பாவம் மீதி,

திருமண வாழ்க்கை வரம்.

லக்னாதிபதி நல்ல நிலையில் இருக்க வேண்டும்,
குடும்ப ஸ்தானாதிபதி எனப்படும் 2ம்  அதிபதி நல்ல நிலையில் இருக்க வேண்டும்,
களத்திர ஸ்தானாதிபதி எனும் 7ம் அதிபதி நல்ல நிலையில் இருக்க வேண்டும்,
களத்திரகாரகன் சுக்கிரன் / செவ்வாய் நல்ல நிலையில் இருக்க வேண்டும்,
(ஆண் ஜாதகத்தில் சுக்கிரன், பெண் ஜாதகத்தில் செவ்வாய்)
7ம் இடம், 8ம் இடம்  சுத்தமாக இருத்தல்
இதை தவிர அயன சயன போக ஸ்தானம் எனும் 12ம் இடத்தை பார்க்க வேண்டும்.
(நல்ல நிலையில் என்றால் உச்சம், ஆட்சி பெற்று இருத்தல், திரிகோண (1,5,9) ஸ்தானங்களில், கேந்திர (4,7,10) ஸ்தானங்களில் அமர்ந்து இருத்தல், சுபர் சேர்க்கை / பார்வை பெற்று இருத்தல்)

இந்த விஷயங்கள் நல்ல நிலையில் இருந்தால் திருமண வாழ்க்கை  (சொர்கமாக) சிறப்பாக இருக்கும்.

திருமண வாழ்க்கை சாபம்.

லக்னாதிபதி கெட்டு இருந்தால்,
2ம் அதிபதி கெட்டு இருத்தல்,
7ம் அதிபதி கெட்டு இருத்தல்,
சுக்கிரன் கெட்டு இருந்தால்,
செவ்வாய் கெட்டு இருந்தால் மற்றும்
12ம் இடத்தில் பாவிகள் இருப்பது.

(கெட்டு என்றால் நீச்சம் அடைந்து இருப்பது,  6,8,12 என்ற மறைவு ஸ்தானத்தில் இருப்பது, மறைவு ஸ்தானாதிபதி உடன் சேர்ந்து இருப்பது, அஸ்தங்கம் அடைவது, பகை ஸ்தானம் அமர்வது, பகை கிரகங்கள் உடன் சேர்வது, மற்றும் ராகு / கேது உடன்  இனைந்து இருப்பது.

திருமண வாழ்வில் பல பிரச்னைகளை தரும், திருமண ஆகாமல் இருப்பது, தாமத திருமணம், திருமண வாழ்க்கையில் பிரச்சினை/ போராட்டம், மனதளவில் பிரிவு, விவாகரத்து, களத்திர இழப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

இந்த விஷயங்கள் இருந்தால் திருமண வாழ்க்கை (நகரமாக) போராட்டமாக இருக்கும்.

இதற்கு பரிகாரம் பொதுவாக திருமண வாழ்வில் பிரச்சினை என்றால் சில பரிகாரங்களை செய்ய வேண்டும் என்று கூறி இருப்பதை செய்தால் பலன் கிடைக்காது, ஏனெனில் அவரவர்கள் ஜாதகத்தில் எந்த காரணத்தால் பிரச்சனை ஏற்படுகிறது என்று பார்த்து அதற்கான பரிகாரம் செய்ய வேண்டும்.
(நம்முடைய அந்த தீய கர்மாவை குறைக்க வேண்டும்).


பஞ்ச பட்சி சாஸ்திரம் பகுதி - 9

பஞ்ச பட்சி சாஸ்திரம்.
பகுதி - 9

கிருஷ்ணபட்சம் உத்திரம் முதல் அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் வரை பிறந்த நட்சத்திரகாரர்கள் ஜென்ம பட்சி காகம்,

சுக்லபட்சம் மற்றும் கிருஷ்ணபட்சத்திற்கு ஏற்ற நேர கணித அட்டவணை சுலபமாக புரியும் வகையில் காண்பிக்கபட்டு உள்ளன.

இந்த உதாரண நேர அட்டவணை சூரிய உதயம் சரியாக காலை 6.00 மணி என்ற கணக்கில் கட்டப்பட்டுள்ளன, நீங்கள் கணக்கிடும் நாளின் சூரிய உதயத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து கொள்ளவோண்டும்.

படுபட்சி நாட்கள் அல்லது மரண நாட்கள் எனப்படும் நாட்கள் சுபம் தவிர்ப்பது நல்லது, ஜென்ம பட்சியின் ஆட்சி, ஊண் நேரங்கள் சிறப்பு.

முழு பஞ்ச பட்சி சாஸ்திரம் விபரங்களை, 15 பக்கம் கொண்ட PDF உங்கள் தனிப்பட்ட நட்சத்திரம், பட்சம், அபஹாரம், முறையில் வேண்டுமெனில் மின்அஞ்சல் முலம் தொடர்பு கொண்டு பெறலாம்,
srjastrology@gmail.com.




செவ்வாய், 3 ஏப்ரல், 2018

பஞ்ச பட்சி சாஸ்திரம் பகுதி - 8

பஞ்ச பட்சி சாஸ்திரம்.
பகுதி - 8

கிருஷ்ணபட்சம் திருவாதிரை முதல் புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் வரை பிறந்த நட்சத்திரகாரர்கள் ஜென்ம பட்சி கோழி, சுக்லபட்சம் மற்றும் கிருஷ்ணபட்சத்திற்கு ஏற்ற நேர கணித அட்டவணை சுலபமாக புரியும் வகையில் காண்பிக்கபட்டு உள்ளன.

இந்த உதாரண நேர அட்டவணை சூரிய உதயம் சரியாக காலை 6.00 மணி என்ற கணக்கில் கட்டப்பட்டுள்ளன, நீங்கள் கணக்கிடும் நாளின் சூரிய உதயத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து கொள்ளவோண்டும்.
 

படுபட்சி நாட்கள் அல்லது மரண நாட்கள் எனப்படும் நாட்கள் சுபம் தவிர்ப்பது நல்லது, ஜென்ம பட்சியின் ஆட்சி, ஊண் நேரங்கள் சிறப்பு.

முழு பஞ்ச பட்சி சாஸ்திரம் விபரங்களை, 15 பக்கம் கொண்ட PDF உங்கள் தனிப்பட்ட நட்சத்திரம், பட்சம், அபஹாரம், முறையில் வேண்டுமெனில் மின்அஞ்சல் முலம் தொடர்பு கொண்டு பெறலாம்,
srjastrology@gmail.com.




திங்கள், 2 ஏப்ரல், 2018

பஞ்ச பட்சி சாஸ்திரம் பகுதி - 7

பஞ்ச பட்சி சாஸ்திரம்.
பகுதி - 7
கிருஷ்ணபட்சம் அஸ்வினி முதல் பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம் வரை பிறந்த நட்சத்திரகாரர்கள் ஜென்ம பட்சி மயில், சுக்லபட்சம் மற்றும் கிருஷ்ணபட்சத்திற்கு ஏற்ற நேர கணித அட்டவணை சுலபமாக புரியும் வகையில் காண்பிக்கபட்டு உள்ளன.

இந்த உதாரண நேர அட்டவணை சூரிய உதயம் சரியாக காலை 6.00 மணி என்ற கணக்கில் கட்டப்பட்டுள்ளன, நீங்கள் கணக்கிடும் நாளின் சூரிய உதயத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து கொள்ளவோண்டும்.
 

படுபட்சி நாட்கள் அல்லது மரண நாட்கள் எனப்படும் நாட்கள் சுபம் தவிர்ப்பது நல்லது, ஜென்ம பட்சியின் ஆட்சி, ஊண் நேரங்கள் சிறப்பு.

முழு பஞ்ச பட்சி சாஸ்திரம் விபரங்களை, 15 பக்கம் கொண்ட PDF உங்கள் தனிப்பட்ட நட்சத்திரம், பட்சம், அபஹாரம், முறையில் வேண்டுமெனில் மின்அஞ்சல் முலம் தொடர்பு கொண்டு பெறலாம்,
srjastrology@gmail.com.